Saturday, June 27, 2009

இது குடிகாரர் பேட்டை

காக்டெயில் செய்வதற்கான கைடு: ஒரு பானை சாராயத்தை ஊறுகா தொட்டுக்காம அடிக்கிறவங்களுக்கு இது பிரயோசனப்படாது.
காக்டெயில் பேரு, தயார் செய்யும் முறை மற்றும் குடிக்கும் ஸ்டைலு:
சன்
பிக்சர்ஸ்:
ரொம்ப காட்டமான சரக்கு குடிக்க வேண்டியிருக்குன்னா, டிவில ஏதாவது சன் பிக்சர்ஸ் எடுத்த படத்த போட்டுடணும்.. அதப்பாத்துகிட்டே, நல்லா கடுப்பான கொதிநிலைக்கு வந்த உடனே சரக்க ராவா ஒரே கல்ப் அடிச்சிட வேண்டியதுதான்.​
பஞ்ச
அடி:
மாசக்கடசில கட்டிங்கு கூட வழியில்லாதப்ப செய்யற காக்டெயில் இது. ஒரு காலி பாட்டில எடுத்து நல்லா மோந்து பாத்துட்டு, ஒரு கிளாஸ் வாட்டரை மடக்குன்னு முழுங்கிடணும். சைட் டிஷ் எதுவும் ​தேவையில்லை என்பதே இதன் சிறப்பு.
மாட்டுனநீ
:
என்னதான் பம்மிக்கிட்டு போனாலும் பொண்டாட்டி கிட்ட மாட்டி மப்பு இறங்கறவங்களுக்கு இது. சரக்கு மேல ஒரு சூடத்தை வெச்சு (முழுகாது) தீப்பத்த வச்சு, வூட்டுக்காரம்மாவ மனசுல நினைச்சுக்கிட்டு
ஒரே முழுங்கு!
திருப்புளி
:
தைரியமா வூட்டுலேயே சரக்கடிக்கிற குடிம்பஸ்தர்களுக்கு இது, அடடா மிக்ஸ் போடறதுக்கு எதுவுமே வாங்கிட்டு வரலேயேன்னு வெக்ஸ் ஆகறப்ப, வீட்ல இருக்கிற புளி ரசத்தை வெச்சுப் போடறதுதான் திருப்புளி.
ஓசிக்குடி
:
சைட் டிஷ் மட்டும் வாங்கிட்டு வந்திட்டு மாப்ள எல்லாம் ரெடி சரக்கும் மிக்ஸிங் மட்டும் உன்னோடது என்னும் ஓசிக்குடியர்களுக்கு.. அழுகின எலுமிச்சம் பழச்சாறு, நசுங்கின கருந்திராட்சை, நாற்றமடிக்கிற தக்காளித் துண்டு இதெல்லாம் போட்டு சரக்கோட அடிச்சி (ஜக்கிலிங்) பரிமாறும்​போது ஒரு ஈக்குமாத்து குச்சியில் கோவக்காய் குத்திப் பரிமாறவும்.
தேவதாஸ்
:
காதலிக்காக ரொம்ப ஏங்கிக் குடிக்கிறவரா நீங்க.. அப்படின்னா.. ஒரு கட்டிங் சரக்கு வாங்கி அதை அரை லிட்டர் தண்ணி மிக்ஸ் போட்டுட்டு அப்பிடியே அடிக்க வேண்டியதுதான். பக்கத்தில பினாத்தறதுக்கு ஆள் இருக்காங்களானு பாத்துகுங்க.. ஏன்னா அவங்கதான் அன்னைக்கு உங்க சைட் டிஷ்ஷே!

Friday, June 26, 2009

இம்சை அரசன் இட்ட உத்திரவு

மன்னர்: அமைச்சா..
அமைச்சர்:
மன்னர் மன்னா..
மன்னர்
:
அமைச்சா, நம் நாட்டில் ஆண் யாரும் இறந்துவிட்டால் அவனுடன் அவன் துணைவியும் உடன்கட்டை ஏறும் பழக்கம் உண்டுதானே?
அமைச்சர்
:
இதிலென்ன சந்தேகம் மன்னா? ஒருவன் இறந்துவிட்டால் அவன் மனைவி இல்லை காதலி யாராக இருந்தாலும் உடன்கட்டை ஏறிவிடுவது இல்லையென்றால் கட்டி போட்டாவது ஏற்றிவிடுவது - இதுதானே நம் மரபு மன்னா.. இது தாங்கள் போட்ட உத்திரவாயிற்றே!
மன்னர்
:
நன்றாகச் சொன்னாய்! நீ ஒரு நல்ல மதி மந்திரி என்பதை நிரூபித்துவிடுகிறாய் - அவ்வப்போது.. ஹா ஹா ஹா
அமைச்சர்
:
(மனதுக்குள், நீ​தான் எப்பவும் முட்டாளாச்சே) நன்றி மன்னா!
மன்னர்
:
ஒரு யோசனை அமைச்சா! இனி மேல் நம் நாட்டில் எந்தப் பெண் இறந்துவிட்டாலும் அவளின் புருஷனோ இல்லை காதலனோ உடன்கட்டை ஏற​வேண்டும். இது என் உத்திரவு.. திரவு.. ரவு... வு..
அமைச்சர்
:
(அடங்கொக்கமக்க, இவன்கிட்ட இருந்து முதல்ல விஆர்எஸ் வாங்கிடணும்) மன்னா..........????
மன்னர்
:
ஏனிந்த அதிர்ச்சி அமைச்சா?
அமைச்சர்
:
மன்னா நன்றாக யோசித்துதான் சொல்கிறீர்களா? இதன் பின்விளைவுகள் பற்றி தாங்கள் யோசிக்கவில்லையா?
மன்னர்
:
புரிகிறது அமைச்சா! நம் மகாராணி மரித்துவிட்டால் இந்த மன்னாதிமன்னனும் உடன்கட்டை ஏற​வேண்டுமே என்பதுதானே உன் கவலை? அடடா உன் ராஜவிசுவாசம் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது!
அமைச்சர்
:
(ங்கொய்யால.. இப்படியொரு​நெனப்பு வேறய) அதுமட்டுமில்லை மன்னா....
மன்னர்
:
(புரியாமல்) வேறு என்னதான் சொல்லித்​தொலையும்
அமைச்சர்
:
மன்னா, தாங்கள் இறந்தால் அது ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சேதம்..
மன்னர்
:
அது தெரிந்ததுதானே..?
அமைச்சர்
:
நம் மகாராணி இறந்துவிட்டாலோ ஒரு நாடே சேதமாகிவிடும் மன்னா..
மன்னர்
:
(அதிர்ச்சியுடன்) என்ன.........???
அமைச்சர்
:
இதில் சில பக்கத்து நாடுகளும் அடக்கம் மன்னா...!!!

Tuesday, June 23, 2009

ஒரு ஸ்கூல் இன்ஸ்பெக் ஷன்

பள்ளியில் அன்று இன்ஸ்பெக் ஷன்.
காக்கிக்கு கள்ளச்சாராயம் காய்ச்சுபவன் காட்டும் பயத்துக்கு சற்றும் குறைந்ததல்ல, ஸ்கூல் இன்ஸ்பெக் ஷனுக்கு ஆசிரியர்கள் காட்டும் பயம்.
ரெண்டாம் வகுப்பு டீச்சர் (இங்கு டீச்சர் என்றால் அது பெண்பால்தான்) மிகுந்த சிரமெடுத்து எல்லாப் பசங்களையும் புள்ளங்களையும் கன ஜோரா தயார் ​செய்திருந்தார்.
பள்ளி மிக நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருப்பதால் இன்ஸ்பெக் ஷன் ​அங்கு லேசு பாசாகத்தான் இருக்கும். இருந்தாலும் டீச்சர் விடவில்லை.
உயிரெழுத்துக்கள் யாவை மற்றும் அவை எத்தனை?​
மெய்யெழுத்துக்கள் யாவை / எத்தனை என எண்ணும் எழுத்தும் ஒன்றோ என கற்பிதங் கொள்ளும் வகையில் இருந்தது டீச்சரின் தயாரிப்பு.
இன்ஸ்பெக்டர் ஒண்ணாப்பு இன்ஸ்பெக் ஷன் முடித்துவிட்டு இன்னும் சில நிமிடங்களில் ரெண்டாப்பு வந்துவிடுவார் என தகவல் வந்துவிட்டது.
டீச்சரை விட பசங்க தெளிந்த முகத்துடன் இருப்பதாகப்பட்டது.
டீச்சர் திரும்ப ஒருமுறை எண் எழுத்து ஒத்திகை பார்த்துக் கொண்டார்.
அனேகமா ஒத்திகை உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாய் இருந்திருக்க வாய்ப்புண்டு.
இருந்தாலும் டீச்சருக்கு மனமில்லை. ஏதோ குறைவது போலவே பட்டது.
சட்டென்று ஒரு யோசனை டீச்சர் மனதில்.
ஒரு சாக்பீஸை எடுத்தார்.. பரபரவென்று மேஜையில் தேய்க்கலானார்..
பின் பசங்களைப் பார்த்து போர்க்கால அவசரக் குரலில்,
"எல்லாரும் ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா வாங்க" என்றார்.
ஒவ்வொரு மாணவனாய் போய் நிற்க நிற்க, ஒவ்வொருவர் நெற்றியிலும் பூசிவிட்டார் உரசிய சாக்பீஸ் தூளை திருநீறு போல.​
சிறிதே நேரத்தில் மொத்த வகுப்பும் ஒரே அளவில் ஒரே கலரில் மெய்யெழுத்து நெற்றிகளாய் மினுங்கியது.
Appearance is equally imporatant to brilliance என்பதை ஒரே நெற்றியடியாக ​சொல்லிவிட்டார் ரெண்டாம்பு டீச்சர்.
சாக்பீ
ஸை விபூதியாக்கும் வித்தை தெரிந்த டீச்சர் பேர் எஸ்தர் -
ஒரு கிறித்துவர்.

Sunday, June 21, 2009

விஜய் அவார்ட்ஸ் 2009

மற்ற தமிழ் சேனல்களிலிருந்து தன்னை வித்யாசப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் முன்னிலை வகிக்கும் சேனல் விஜய். கொஞ்சம் ஸ்டார் சேனல் பாதிப்பு இருந்தாலும் அதன் தாக்கம் தமிழின் சிறுதிரை ரசிகர்களிடம் அதிகம்.
(யுனிவர்​ஸெல்) விஜய் அவார்ட்ஸ் வருடம் ஒருமுறை பெரிய திரைக​லைஞர்களை கெளரவப்படுத்தும் நிகழ்ச்சி. படங்களையும், கலைஞர்களையும் தெரிவு செய்வது, ரசிகர்களின் தெரிவுகளை அறிந்து கொள்வது (ரசிகன் எக்ஸ்ப்ரஸ்), நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது என இது ஒரு முன்னோடி நிகழ்ச்சி எனலாம்.
இந்த
முறை விஜய் அவார்ட்ஸ் 2009 - சமீபத்தில் நடந்தேறியது. விருதுகள் விபரம் பின்வருமாறு:
பேவரிட்
நடிகர் - கமல்ஹாசன் (தசாவதாரம் படத்திற்காக)
பேவரிட் நடிகை - நயன்தாரா (யாரடி நீ மோகினி)
பேவரிட் திரைப்படம் - வாரணம் ஆயிரம்
பேவரிட் இயக்குநர் - ​கெளதம் வாசு​தேவ் மேனன் (வாரணம் ஆயிரம்)
சிறந்த நடிகர் - சூர்யா (வாரணம் ஆயிரம்)
சிறந்த நடிகை - ஸ்னேகா (பிரிவோம் சந்திப்​போம்)
சிறந்த புதுமுக நடிகை - பார்வதி (பூ)
சிறந்த துணை நடிகை - சிம்ரன் (வாரணம் ஆயிரம்)
சிறந்த காமடியன் - கமல்ஹாசன் (தசாவதாரம்)
சிறந்த வில்லன் - கமல்ஹாசன் (தசாவதாரம்)
சிறந்த கதை, திரைக்கதை ஆசிரியர் - கமல்ஹாசன் (தசாவதாரம்)
சிறந்த இசையமைப்பாளர் - ஹாரிஸ் ஜெயராஜ்
சிறந்த பின்னணிப் பாடகர் - ஹரிஹரன் (வாரணம் ஆயிரம் - நெஞ்சுக்குள்..)
சிறந்த பாடலாசிரியர் - தாமரை (வாரணம் ஆயிரம்)
சிறந்த​மேக்கப் கலைஞர் - பானு மற்றும் ​யோகேஷ் (வாரணம் ஆயிரம்)
சிறந்த இயக்குநர் - சசிக்குமார் (சுப்ரமணியபுரம்)
சிறந்த ஒளிப்பதிவாளர் - எஸ். ஆர். கதிர்
சிறந்த எடிட்டர் - ராஜா முகம்மது
சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் - ராஜ​சேகர் (சுப்ரமணியபுரம்)
சிறந்த கலை - சமீர் சந்தா, பிரபாகரன், ​தோட்டா தரணி
சிறந்த காஸ்ட்யூம் டிசைன் - ​கெளதமி டடிமலா (தசாவதாரம்)
சிறந்த பின்னணிப் பாடகி - பாம்பே ​ஜெயஸ்ரீ (தாம் தூம் - யாரோ மனதில்..)
இவ்வாண்டின் ​பெருமைக்குரிய வரவு - ​ஜேம்ஸ் வசந்தன் (சுப்ரமணியபுரம்)
இவ்வாண்டின் சிறந்த களிப்பூட்டி - தனுஷ் (யாரடி நீ மோகினி)
செவாலியே சிவாஜி கணேசன் விருது - ஏ. ஆர். ரகுமான் (ஆஸ்கர் பரிசிற்காக)
சிறந்த படக்குழு - சுப்ரமணியபுரம் படக்குழு (சுப்ரமணியபுரம்)
சிறந்த தமிழ் திரையுலக பங்களிப்பு - சத்யம் சினிமாஸ்
நிகழ்ச்சித்
தொகுப்பாளராக கோபிநாத்
விஜய்
விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் விதமும் வித்யாசமானதே. தேர்ந்த விமர்சர்களைக் கொண்டு இதைச் செய்வது ஒருவகையில் நம்பகத் தன்மையை உண்டு பண்ணுகிறது. ஆனால் பேவரிட் நடிகர், நடிகை, இயக்குநர், பெஸ்ட் என்டர்டெயினர் என்றெல்லாம் விருதுகளை கொடுப்பது எந்த அளவையில் சேர்த்தி எனப்புரியவில்லை.

கமல் பாலச்சந்தர் மற்றும் மனோரமா கைகளில் பரிசை வாங்கிக்​கொண்டார். பாலச்சந்தர் கூறுவது போல ஒரு முன்னணி கதாநாயக நடிகன் சிறந்த காமடியன் விருதை பெறுவது அதிசயமே. கமல் காமடிக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவார் என்பது நாமறிந்ததே. ஆனால் சப்பைக்கட்டு தெலுங்கு கிண்டலடி காமடிக்கு விருது கொடுத்திருப்பது சிறு ஆச்சரியம். ஆனாலும் தசாவதாரத்தின் பலராமு நாயுடுவின் நுணுக்க நகைச்சுவைகள் திறம்பட்டவை - உம்: பலராமு நாயுடு அறையுள் விஞ்ஞானி கமலுடன் மாட்லாடிக்​ ​கொண்டிருப்பார். அப்போது அறைக் கதவு வெளியே தட்டப்படும். பலராமு உரத்த குரலில் ​கேட்பார் "ஹுஸ் தட்?". ஆனால் எந்தப் பதிலும் இல்லாமல் திரும்ப அறை கதவுத் தட்டப்பட்டுக் கொண்டிருக்கும்.. பலராமு கொஞ்சம் யோசித்து விட்டு கேட்பார் "யாரு அப்பா ராவா?" உடனே உள்ளே வருவார் அப்பா ராவ். அப்படியொரு பவ்யம்.
கமல்
காமடியை சீரியஸான பிஸினஸ் என்கிறார். உண்மைதான். மண்டையை உடைத்துக் ​கொண்டாலும் காமடி மட்டும் சிலருக்கு வரவே வராது.
கமல் விருது மேல் விருதாக வாங்கவும், கொடுக்கவும் என ​மேடையிலேயே நாற்காலி போட்டு உக்காந்து கொள்ளாத குறையாக நின்றிருந்தார். ​மொத்த கூட்டமும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தது கமலுக்கு. ​கோபிநாத் சிலசமயம் காம்ப்யரிங் என்பதை மறந்து விட்டு, இண்டர்வியூ போல கேள்விகளைக் கேட்டும்,தடாலடியாக ஜோ மேடைக்கு வாங்க, கார்த்தி இங்க வாங்க, சிவக்குமார் 2 வார்த்தை பேசுங்க, ஸ்னேகா ஒரு பாட்டு பாடுங்க, கமலுக்கு அட்டேன்ஷன்ல எல்லோரும் நில்லுங்க என்று களேபரம் செய்துவிட்டார் மேடையை.
கமல்
எப்போதும் போல கெளதமி, மற்றும் புதல்விகளுடன் ஆஜர். மொத்தக் குடும்பமும் தனிக்கலரில் தெரிகிறது (எல்லோரும் மினரல் வாட்டரில் குளிப்பார்களோ?)
சூர்யா
ஆர்ப்பாட்டமில்லாமல் சிறந்த நடிகர் விருதை வாங்கிக் கொண்டார். அப்புறம் சூர்யாவின் மொத்தக் குடும்பமும் ​மேடைக்கு வந்து ஒரே உணர்ச்சிமயமாகி விட்டது.
ஒவ்வொருவரும்
மைக்கைப் பிடுங்கி பிடுங்கிப் பேசினார்கள். கமல் காலில் விழுந்து சூர்யா ஆசிர்வாதமும் வாங்கிக் கொண்டார்.
எனக்கென்னமோ
சூர்யாவை விட (வாரணம் ஆயிரம்)அஞ்சாதே-வில் சுனில் மிகச்சிறப்பாக நடித்திருப்பதாகப் பட்டது. அஞ்சாதே படத்திற்கு சிறந்த இயக்குநர், நடிகர் என எந்த விருதும் கிடைக்காமல் போனது வருத்தத்தைத் தாண்டி அதிர்ச்சியாகவும் இருந்தது.

சக்கரக்கட்டி
படத்திற்காக சாந்தனு (கே. பாக்யராஜ்ஜின் வாரிசு)சிறந்த புதுமுக நடிகர் வாங்கிக் கொண்டார். படம் மகா சொதப்பல் என்றாலும் சாந்தனுவின் நடிப்பும் டான்ஸும் குறிப்பிட்டுச் சொல்லப்பட​வேண்டியவை. ஆனால் ஆள் கொஞ்சம் ஜொள்ளு பேர்வழி போல (விஜய் டிவி டான்ஸ் ஷோவில் தெரிந்தது) புலிக்குப் பிறந்தது.
மேடை
பிரம்மாண்டமாக,​பெரிய டிவி ஸ்கிரீன்களுடன் வித்யாசமாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அவ்வப்போது சில டான்ஸ்களும் நடத்தப்பட்டன.
ஒன்றில் லக்ஷ்மிராய் வந்து ஆடினார். ஆட்டத்திற்கேற்ப பின்னணியில் திரைகளில் காட்சிகளும் மாறிய வண்ணமிருந்தது நன்றாயிருந்தது. லக்ஷ்மிராய் கலவையான பாடல்களுக்கு டான்ஸ் ஆடினார். வயிறுதான் ஸொல்ப (கன்னட ​கொஞ்சம்) தொப்பை ​போட்டுவிட்டது போல. டோனியை நினைவில் கொள்ளுங்கள் மேடம்.
பெஸ்ட்
நடிகை விருது ஸ்னேகாவுக்கு, பார்த்திபன் கையில். பார்த்திபன் சும்மாயிருப்பாரா..?
"இந்தம்மாவுக்கு சிறந்த நடிகைங்கிற விருதை பிரிவோம் சந்திப்போம் படத்துக்காக ​கொடுத்திருக்காங்க. இவங்க அந்த படத்தில நிறைய காச வாங்கிட்டு ஒண்ணுமே நடிக்கல.சும்மா தலை நி​றைய பூவ வச்சிக்கிட்டு, முகமெல்லாம் மஞ்சள் பூசிக்கிட்டு, ஏதோ நம்ம சொந்தக்கார பொண்ணு மாதிரி இல்ல நாமளே சொந்தம் பண்ணிக்கலாமான்னு நினைக்கிற பொண்ணு மாதிரி வந்து போயி நடிச்சிருக்கிறாங்க.. சேரன் எப்படித்தான் சமாளிச்சாரோ தெரியல" என்று ஸ்னேகாவை​மேடையிலேயே​நெளிய வைத்துவிட்டார்.
சிறந்த
புதுமுக நடிகை என்று பூ-படத்தில் அறிமுகமான பார்வதிக்கு விருதை அறிவித்தார்கள். பார்வதிக்கு பதில் வேறு யாரோ ஒரு பெண் வந்து விருது வாங்கிக் ​கொண்டாரோ என்று சந்தேகப்படுமளவுக்கு இருந்தார் ஒரிஜினல் பார்வதி.
வாரணம்
ஆயிரம் ரொம்ப நேரம் இழுத்துக்கொண்டு ஓடின ஒரு காலக்கலவையின் நாட்குறிப்பு. அவ்வளவுதான். சிறப்பான முறையில் அந்தந்த காலத்திற்குரிய பேஷன்,இசை (இது கிட்டத்தட்ட சுப்ரமணியபுரம் போலத்தான்) அப்புறம் அப்பா சென்டிமென்ட் எல்லாம் கலந்தது. அஞ்சாதே-யின் இயல்புத்தன்மை​யோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கமுடியவில்லை. மிஷ்கினுக்கு விருது கிடைக்காததை விட, இந்த படங்களோடு போட்டி​போட்டு தோற்றுவிட்டது அதிக வேதனையாக இருக்கக் கூடும்.
தமிழ்
சினிமாக்களில் வகைப்படுத்தல் எப்படி சாத்தியப்படுமென்று தெரியவில்லை. இசையில் ஜான்ரு (genre) ​போல மேலை சினிமாவில் டிராமா, காமடி, த்ரில்லர், ரொமான்ஸ், ஆக்ஷன் ஒரு வகைப்படுத்தல் காணலாம். நம் ஊர் சினிமாவில் ஆர்ட், மசாலா என இரண்டே இரண்டு வகைகளும் அப்புறம் ஏபிசி (சென்டர்) என சினிமா கூட்டங்களையும் தான் வகைப்படுத்த முடிகிறது. வாரணம் ஆயிரம் ஒருவகையில் ரொமான்ஸ் என சொல்லிவிடலாம் அஞ்சாதே-வை ஆக்ஷன் என சொல்ல முடியுமா? சுப்ரமணியபுரம் ஆக்ஷனா, ரொமான்ஸா என திண்டுக்கல் ஐ.லியோனி பட்டிமன்றம் நடத்தலாம். தசாவதாரம் காமடி ஜான்ரூவா..?
ஆக
, நம்மூர் சினிமாவில் மேற்கத்திய அளவுகோல்களை பயன்படுத்தமுடியாது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க உணர்ச்சி குவியல்களின் கலை வடிவமாகவே காணப்படுகிறது. இங்கே ரசிகர்களின் உடனுக்குடனான (on the spot, on the theatre) எதிர்வினைகளே ஒரு திரைப்படத்தின் மிகச்சிறந்த கலைவிமர்சனம்.

மிகுந்த
எதிர்பார்ப்புடன் வெளிவருகிற படத்தின் சாதாரண தோல்வியும், எதிர்பார்க்கப்படாத படத்தின் அசாதரண வெற்றியும் ஒரே புள்ளியில் சமரசமாகின்றன.
நாசாவின் விண்கலம் ​வெடித்துச் சிதறினாலும் அதை கெளரவமாகவும், சந்த்ராயன் நிலவைத் ​தொட்டதை அசாதாரணமாக ஒப்பிடும் பாவம்தான் இது.
மிகுந்த
எதிர்பார்ப்புடன் வெளிவந்த குசேலன் படத்தின் தோல்வி, எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லாத வெள்ளித்திரை படத்தின் வெற்றியும் வியாபார ரீதியில் ஒரே புள்ளிகளைத்தான் கொண்டிருக்கும். காரணம் மாஸ் ஹீரோக்கள் என அடையாளம் காணப்படுபவர்களின் பெரிய​தொரு ஓப்பனிங். அதாவது கதை, இயக்கம் என எந்த பெரிய ஓட்டையையும் தாண்டி ஹீரோவின் வசீகரமே படத்தை குறைந்தது 10 நாட்களாவது படத்தை ஓட்டிவிடும். இது இந்த வியாபாரத்தின் return on investmentக்கு பெரிய உதவி. புதுமுகங்கள், புது இயக்குநர் என மிக குறைந்த​செலவில் வரும் படங்களுக்கு இந்த மாதிரி ஓப்பனிங் இருக்காது. ​வெள்ளித்திரையின் ROIக்கு குறைந்தது 30-40 நாட்களாவது பொறுத்திருக்க ​வேண்டும். அது பிரகாஷ்ராஜ் போன்ற சினிமாவின் நாடி​பிடித்துப் பார்த்து முதலீடு செய்யும் துணிவு வேண்டும்.
இது
இல்லாமல் சாதாரண லாஜிக்குடன் குறைந்த பட்ஜெட்லில் வெளிவந்த படங்களும் உண்டு. இம்மாதிரி மயிரக்கட்டி.. வகைப்படங்கள் அதிகம் தள்ளுமுள்ளு இல்லாத காலங்களில் ஒரு வெற்றிடத்தை நிரப்பும் முனைப்புடன்​வெளிவருபவை. சில படங்கள் ஏ பட வரிசையில் ஸி சென்டர்களை குறி​வைத்து வருபவை. ​தோழா, தங்கம்,
நெஞ்சத்தை கிள்ளாதே, தனம், தரகு, சிங்கக்குட்டி, கண்ணும் கண்ணும், இன்பா, வள்ளுவன் வாசுகி, ​வேள்வி ​போன்ற படங்கள் இந்த வகைதான்.
தசாவதாரத்தின் வெற்றியும் சுப்ரமணியபுரத்தின் வெற்றியும்​வெவ்வேறு வகை. தசாவதாரம் வெளியாகும் முன்பே பாத்து விடுவது என ஒரு கங்கணம் மனதில் நிலவும்; சுப்ரமணியபுரம் யாரவது பார்த்துவிட்டு (இவர்கள் தான் ரிஸ்க் எடுக்கும் உண்மையான ரசிகர்கள்) வந்து சொன்னால்தான் ​போய் பாப்பது என முடிவு​செய்வோம்.
2008-ல் மட்டும் குத்துமதிப்பாக, குத்துப்பாட்டாக சுமார் 70 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் நீங்கள் எத்தனை படங்கள் தியேட்டருக்கு சென்று, க்யூவில் நின்று, டிக்கெட் வாங்கி, டார்ச் வெளிச்சத்தில் ஸீட் நம்பர் கண்டுபிடித்து, பார்த்திருப்பீர்கள் என நீங்களே எண்ணிக் ​கொள்ளுங்கள்.
விஜய் அவார்ட்ஸ் போல நாமும் நமக்குப் பிடித்த படங்களை தரவரிசைப் படுத்திப் பார்த்தால் என்ன..?

இதோ இது நம் காலடியின் தமிழ்படங்கள் 2008 தரவரிசை:

இந்த தரவரிசைக்கென நாம் மூன்று அலகுகளை பயன்படுத்தியிருக்கிறோம். எதிர்பார்ப்பு (1-லிருந்து 10 வரை; 1 என்றால் குறைந்த எதிர்பார்ப்பு, 10 என்றால் அதிகம்) ஈடுகட்டல் (1 முதல் 10 வரை) அதாவது ஏங்கிய எதிர்பார்ப்பை படம் ஈடுகட்டியிருக்கிறதா என புள்ளியிடல். இதிலும் 1 என்றால் மிக குறைந்த மதிப்பெண் 10 அதிகம். மூன்றாவது தரம். இது முதல் இரண்டு அலகுகளின் நிகழே (function of first two elements)

சரி. அதிகம் தியரி பேசுவதை விட்டுவிட்டு பட்டியலைப் பார்ப்போமா?
(படத்தைப்​பெரியதாக்க, படத்தின் மேல் கிளக்குக)

உங்கள் மதிப்பீட்டையும் தரவரிசையும் அனுப்புங்கள்.

Monday, June 15, 2009

ரோசாமகன் ஆரம்பித்த பிளாக்

அவசரமாக ஒரு ப்ளாக்.. அதுவும் தமிழில் ஆரம்பித்து தமிழ் கூறும் சைபர் உலகத்திற்கு தன்னை தெளிவுபடுத்திக் கொள்ள​வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது ரோசாமகனுக்கு.

இதில் இரண்டு சிக்கல்கள்: தமிழை க்யூவெர்ட்டி விசைபலகை கொண்டு எழுத வேண்டும். இரண்டாவது எழுதிய இடுகைகளை படிப்பதற்கு ஆட்கள் வேண்டும்.
தமிழில் டைப் அடிப்பது கொஞ்சம் பிடிபட்டு விட்டது எனலாம். ப்ளாக்கிற்கான ரசிக சிகாமணிகளைச் சேர்ப்பது, ஹிட் ரேட் எகிற வைப்பது இதெல்லாம்தான் ரோசாவுக்கு​ மவுஸ் பந்தை முழுங்கியது போலாயிற்று.

கிடைக்குதேன்னு கண்ட கண்ட வலைமனைகளும், கண்டதது கொண்டு சேர்த்தவைகளுமாய் இப்படி இவனை கண்ணுக்குத் தெரியாத வலையில் சிக்க வைத்துவிட்டன.

"ஒண்ணும் தெரியாத ஓணாண் பயலுங்க எல்லாம் வெப்ஸைட்டே வச்சிருக்கானுங்க.. ​தமிழ் எழுத்தாளன்னா கட்டாயம் வெப்ஸைட்டு போட்டே ஆகணும்கிறதுதான் இப்ப டிரெண்ட். நாம வாழ்ந்தோங்கிறதுக்கு அடையாளமே கூகிள் போட்டா நம்ம பேருல ஒரு என்ட்ரியாவது வரணுங்கிறதுதான்.. நாம செத்தாலும் நம்ம ஸைட்டு சாகாதுடா.."

இப்படி இக்பால் உசுப்பி விட்டது, ஆன்டிக்யூட்டி (ரோசா இதை ஆண்டிக்குட்டி என்றுதான் சொல்வான்) விஸ்கி மேல் அடித்து சத்தியம் ​செய்ய ​வைத்துவிட்டது.

"ச்சீர்ஸ்.. ஆரம்பிக்கப் போற வலமனைக்காக..."


அன்று வயிற்றில் விழுந்த நெருப்புத் திரவத்தோடு தன் இருப்பை இடுகையிட்டுக் காட்டும் திட்டத்தையும் சேர்த்தே மிடறிட்டான் ரோசாமகன். இக்பால்​போதை தெளிந்த கையோடு கோரமங்களாவிலுள்ள தன் அறைக்குத் திரும்பி அப்படியே ஸான்டா கிளாராவுக்கும் (அமெரிக்கா) ப்ராஜெக்ட்டுக்காக போய்விட்டான். இனி இக்பாலுக்கு இமிக்ரேஷன் இம்சையே பெரிதாயிருக்கும்.. யா அல்லாஹ்! இடுகையாவது குடுவையாவது.. இவனோட பங்கையும் நாமே ஆற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்று திரும்ப ஒரு முறை தனியாக ஆண்டிக்குட்டி ​மேல் அடித்து சத்தியம்.. இல்லை இந்தமுறை சங்கல்பம் செய்து கொண்டான்.

எப்படியாயினும்
ரோசாவின் கலை ஞானத்தையோ, இலக்கிய அறிவையோ குறைத்து மதிப்பிடலாகாது. கல்லூரிக் காலங்களிலிருந்தே யாரும் பார்த்தறியாத படித்தறியாத படங்கள், புத்தகங்கள் என்றிருப்பான்.
அசாதாரண ஞாபகமறதி காரணமாக படித்தது எல்லாம் மறந்துவிடுவதாய் இருக்கிறது, எனவே யாரும் படிக்காத விஷயத்தை பேசினால் தப்பு கண்டுபிடிக்க நாதி இருக்காது என்ற ஞானத்தைக் கண்டுணர்ந்தவனாக ஐரோப்பிய, அமெரிக்க, ருஷ்ய, லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஈழ, மேல, கீழ என நண்பர்கள் மிரண்டு ஒதுங்கும் தத்துவங்களையும் கதைகளையும் (தமிழ் மொழிபெயர்ப்பில் படித்திருந்தாலும் அதை ஆங்கிலத்தில் ஒப்பிக்கும் கலை அவனுக்கு அசாதாரணமாக இருந்தது (ரிவர்ஸ் இன்ஜினியரிங்))

உள்ளூர்
தமிழ் எழுத்தாளர்கள் (ஆண்) தங்கள் மனைவியின், காதலியின், கள்ளக்காதலியின் தாலி, மோதிரம், பாத்திரம் போன்றவற்றை அடகு வைத்து பெயர்த்து கொண்டு வந்த சிறுகதைகள், குறுநாவல், கவிதை, நாவல் (கட்டுரையை ஏனோ தவிர்த்தே வந்தான்) வகையறாக்களையும், பெண் எழுத்தாளர்கள் தங்கள் கவிதை எழுத தெரியாத ஆண் நண்பர்களின் பேராதரவு, ​பெண்ணுரிமை அமைப்புகளின் ​போராதரவுடன் தங்களின் புகைப்படத்தோடு அச்சிட்டுக் கொண்டு வந்த இலக்கியங்களும் அவை காட்டிய உலகும், பேசிய வார்த்தைகளும் ரோசாவை தனிப்படுத்திக் காட்ட உதவின எனலாம்.

"புருஷனோட கால் ​சென்டர்ல எத்தி ஒதச்சிட்டு அவளோட காதலனோட ​மாரை நிமிர்த்திக்கிட்டு வீட்ட விட்டு போறா மாப்ள.. cock old ஆயிடுச்சுன்னா, cuckold பண்றது சகஜம் தானே அப்படின்னு போகுது கதை.."


"...படம்னா இது இல்லடா மச்சி.. நீ மார்க் ப்யூன்டே எடுத்த A Shredded Heart in the Dustbin படம் பார்த்திருக்கணும்... நாயைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு ஹீரோயின்.. ஸாரி மெயின் கேரக்டர் அழும்​போது.. ஒரு பிஜிம் வரும்பாரு.."

'ஈசலின் இறகில் இரவின் வாசம்

ஒளிக்கற்றை முடிச்சுகளில் உலரும் மழைக்காற்று
கிளறும் கனவுகளின் பாசிப்படிவில்
ஒளிந்திருக்கும் முலைகளின் அலமாரி..'
போன்ற கவிதைகள் கூட எழுதித்தள்ளினான். இதுவே இலக்கிய உலகில் நுழைய உதவும் ஆகச் சிறந்த துருப்புச்சீட்டு என நம்பினான். ஆனால் நூலகத்தில் இருக்கும், இருந்துகொண்டே இருக்கும் மற்றும் வந்து கொண்டேயிருக்கும் கவிதை நூல்களின் எண்ணிக்கை கவிஞர்கள் மற்றும் கவிதாயினிகளின் (மற்றும் திருநங்கை கவிஞர்கள்) எண்ணிக்கையை விட குறைவாய் இருப்பதை பார்த்து, ஜனத்தொகை அதிகமில்லாத கலை துறையை (அது கட்டுரை எழுதுவதே என எண்ணினான்) ​தேர்ந்தெடுத்து இலக்கியவாதி ஆவதென உறுதி பூண்டான்.
ம்ஹும்.. அதற்குள் கல்லூரி வாழ்க்கை முடிந்துவிட்டதால் கலை வாழ்க்கைத் தடைபட்டு கம்ப்யூட்டர் வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது.

கல்லூரிக் காலத்தில், இலக்கியங்களை படிப்பதோடு மட்டும் தன் பணி நிறைந்துவிடுவதில்லை எனத் திடமாக நம்பியதால், அந்த படைப்பாளிகளை, படைப்பை படித்த படபடப்பு அடங்குவதற்குள் நேரிலேயே சென்று பார்த்து விடுவதை ஒரு ஆர்வமுடன் செய்து வந்தான். ரொம்ப தூரத்தில் (ரோமக்கரியான்வலசு, உக்கிபோடுபட்டி, கே.ஒத்தனூர்) இருக்கும் படைப்பாளிகள் எனில் எளிமையாய் அவர்களின் படைப்பின் சைஸை மிஞ்சாத அளவிற்கு கடிதம் எழுதி தன் சொந்த செலவில் அனுப்பி வைப்பான். சிலசமயங்களில் அந்த கடிதம் தந்த அதிர்வலைகளின் வேகம் தாளாமல் படைப்பாளிகளே ரோசாவைத் தேடி வந்து அதிர்ச்சி தந்ததுண்டு. அப்புறம் ஓல்ட்மங்க், பேக்பைப்பர் போன்றோர் துணையால் அது இன்ப அதிர்ச்சியாய் மாறலாகும். அச்சமயங்களில் ரோசா வேலை​வெட்டியில்லாததால் சரக்கு வகைகள் அவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை.

மதி மங்கும் மதி மயங்கும் வேளைகளில் தனக்கும் படைப்பாளிக்கும் இடைவெளி வெகுவாக குறைந்து விடுவதையும், மெதுவாக - அனேகமாக ​ரெண்டாவது ஹாஃப் பாட்டில் ஆர்டர் செய்யும் போது - படைப்பாளியின் தளத்தை தான் எய்து விட்டதாகவும் - பாட்டிலை முடிக்கும் போது - படைப்பாளியையே மிஞ்சிவிட்டதாகவும் உணர்வான் ரோசா.
குடிநண்பராகி விடும் இலக்கியவாதிகளின் படைப்புகளை அதற்கு அப்புறம் ​ரோசாமகன் சீண்டுவதே இல்லை.


ஒருசமயம்
தானே சிறுபத்திரிக்கை ஆரம்பித்தால் என்ன என்றும் எண்ணியதுண்டு. அனேகமாக அது 7 அல்லது 9 மாதங்களுக்கு ஒருமுறை பரிமளிக்கும் இதழாக வந்திருக்க கூடும். தாது, நிழல், பரிச்சயம், காடு.. ​போன்ற பெயர்களை கூட தேர்வு செய்திருந்தான்.
சரி இப்போதைய பிரச்சினைக்கு வருவோம்...

ஷர்மா ரோசாவுடன் ஒன்றாக பணிபுரிபவன். இருவரும் புகை நண்பர்கள். ஒருநாள் ஒன்றாக ஸ்மோக்கிங் ஸோன் செல்லும் போது ஷர்மா கழிப்பிடம் சென்று வருவதாக சொல்லிச் சென்றான்.
திரும்பி வந்ததும் ரோசா கேட்டான்,


"இன்னைக்கே ரெண்டு தடவ டாய்லட் போயிட்டு வந்திட்ட போல"

சிகரெட்டை பற்ற வைத்தபடி ஷர்மா சொன்னான்,

"யோகி ஒருதரம் போவான், போகி ரெண்டு தடவ போவான், ரோகி எத்தன தடவ வேணாலும் போவான்."


இது
ஒரு ஹிந்தி பழமொழி. இதை ஹிந்தியில் அப்படியே சொல்லிவிட்டு ஆங்கிலத்திம் மொழிபெயர்த்தான்.
ரோசாமகனுக்கு இது ஒரு தத்துவம் போல பதிந்துவிட்டது. இப்படி ஒவ்வொருவனும் ஏதாவதொரு வகையில் அவனை உசுப்பி விடுவதாகப்பட்டது. ஹிந்தி கற்பிக்கும் இந்த தத்துவம் போல தமிழிலும் கட்டாயம் இருக்கும். அதை கண்டறிந்து விடுவது என இணையத்தில் தேடலானான்.

அப்படி கண்டறிந்ததுதான். குருபிரசாத்தின் வலைமனை - www.guruprasad-writer.com - குருபிரசாத் தமிழ் நவீன இலக்கியத்தில் பெரிதும்​போற்றப்படுகிற, தூற்றப்படுகிற ஆளுமை. குருபிரசாத்தின் பெயரை கூகிளிட்டுப் பார்த்தால் அனேகமாக 3,60,189 பக்கங்கள் கிடைக்கும். இணையத்திலும் பெரிய ஆளுமைதான் என்று எண்ணி அந்த இணையதளத்தை தினமும் படிக்க ஆரம்பித்தான்.
குருவின் சிறுகதை, நாவல், கவிதை, உரை, கட்டுரை, கட்டாத உரை, பயணக்கட்டுரை, பணக்கட்டுரை என எல்லாவற்றையும் ரசித்து மகிழ்ந்தான். இணையாக​ வேறு இலக்கிய ஆளுமைகளின் வலைப்பக்கங்களையும்​ தேடி அதை தன் ஃபேவரிட்டில்​சேமித்துக் கொண்டான்.

தமிழ் நவீன இலக்கியத்தின் இன்னொரு முக்கிய ஆளுமை சந்திரபுத்தர். ​மேற்கு தொடரச்சி மலையில் வாழும் நிர்வாண பெண் சாமியார்கள் பற்றிய அவரது நாவல் நீல ஓடை நித்திரை வாசகர்களை விட விமர்சகர்களால் அதிகம் படி படியென்று படிக்கப்பட்டும் கிழி கிழியென்று கிழிக்கப்பட்டும் மிகப்பெரிய பிரபலத்தை அடைந்திருந்தது.
கஞ்சாக்கவி என்று இலக்கிய நண்பர்களால் அழைக்கப்படும் தாழைக்கூத்தன் இந்த நாவலின் பின்ணனியை ஆராயும் பொருட்டும், நிர்வாண சாமியாரிணிகளின் பின்புலத்தை ஆய்வு செய்யும்​பொருட்டும் மேற்கு தொடர்ச்சி மலைக்கே​சென்று ஒரு மாத காலம் காடு மேடெல்லாம் சுற்றியலைந்தாராம்.

ஆனால்
தாழைக்கூத்தனால் எந்த நிர்வாணத்தையும் காணமுடியாமல் கடைசியில் ஒரு குரங்கால் கடிப்பட்டு நிவாரணம் பெறும் பொருட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.​
அதே மருத்துமனை கட்டிலில் ஒருக்களித்துப் படுத்தவாறே (குரங்கு கடித்த இடம் அப்படி) 90 பக்கங்களுக்கு அவர் எழுதிய மந்திப்பொய்யன் என்ற கவிதை சந்திரபுத்தரை கடுமையாக விமர்சித்திருந்தது. குருத்தோலை குறியன், குவாட்டர் பாட்டிலை புணர்ந்தவன் என்றெல்லாம் எழுதியது சந்திரபுத்தரை ஒரு வலைமனை​ஆரம்பிக்க தூண்டுதலாய் இருந்தது என்கிறது உலாத்தல் என்ற இலக்கிய மாத இதழ்.
குருபிரசாத்திற்கு ஆகாதவர் இந்த சந்திரபுத்தர்.. எனவே தாழைக்கூத்தனை குரு தன் வலைமனையில் சும்மா புகழ்ந்து தள்ளிவிட்டார். இதைக் கேட்ட தாழைக்கூத்தன் என்னை புணர்ந்து தள்ளிவிட்டாய் என்று ஒரு கவிதை எழுதியிருந்தார்.

ரோசாமகன்
இப்போது குருபிரசாத்தின் வலைமனையின் ரசிகனாகி விட்டான். இதை அவருக்கு அறிவிக்கும் பொருட்டு கடிதங்களும் அனுப்பினான். முறையே அவை குருபிரசாத்தின் நன்றி உரையோடு அவரது வலைப்பக்கத்தில் தினமும் பிரசுரமாகிவிடும்.
தன் தமிழ் எழுத்தை இணையத்தில் கண்டது ரோசாமகனுக்கு பெரு மகிழ்ச்சியாக இருந்தது.
ஒருமுறை குருபிரசாத் ஆப்பிரிக்க காங்கோ நாட்டு இலக்கியவாதி டுமிதுல் சுயம்போ பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டு, அவரது நாவல் ஒலிபெருகும் வெளி-யை அறிமுகப்படுத்தியிருந்தார். அதை படித்து விட்டு உடனே அந்த நாவலை வாங்கி இரவோடு இரவாக வாசித்துவிட்டு ஒரு விமர்சனத்தையும் எழுதி அனுப்பினான். இதுவே அவன் செய்த பெரிய தவறு. விமர்சனத்தோடு ஏனைய ஆப்பிரிக்க நாட்டு இலக்கியங்களை இணையத்தில் தேடி அடிக்குறிப்புகள் எழுதி சுமார் 8 பக்கங்கள் அனுப்பியிருந்தான். ஆப்பிரிக்க கலாச்சாரம் எப்படி தமிழக குலவைச் சத்தோடு இணைகிறது, அந்நாட்டு நாட்டியம் எப்படி கும்மியோடு ஒத்திசைகிறது, ஈக்காசி (அமர தமிழ் எழுத்தாளர்) எழுத்து எப்படி டுமிதுல் எழுத்தோடு சமரசமாகிறது என்றெல்லாம் பிழிந்திருந்தான்.
ஏனோ குருபிரசாத்திற்கு ஈக்காசியை அவர்​செத்ததிலிருந்து பிடிக்காமல்​போய் விட்டிருந்தது.
இது​தெரியாமல் ரோசாமகன் ஈக்காசியை​மேற்கோள் காட்டியிருப்பது குருபிரசாத்திற்கு​வெறி வெறியாய் வந்துவிட்டிருந்தது அவர் எழுதிய பின்னூட்டத்தில் தெரிந்தது. பீக்காட்டில் உழலும் பன்றி ஈக்காசி என தலைப்பிட்டு பின்னூட்டம் வெளியாகியிருந்தது.
மலேசியாவில் குருபிரசாத் அவரது எழுதப்பட வேண்டிய நாவலுக்கான விபரக்குறிப்பு வேண்டி பார், கிளப் மற்றும் மஸாஜ் கிளப்புகளில் அலைந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட சிந்தனா ஊக்கங்களுக்கு நேரெதிராக ஈக்காசியின் எழுத்து இருக்கிறது எனவும் தன் வலை ரசிகர்கள் யாரும் ஈக்காசியின் எழுத்தை பொருட்படுத்த வேண்டாமெனவும் அதிரடி செய்திருந்தார்.

நேபாள நாட்டை சேர்ந்த ஒரு அழகியை இருவரும் ஒரே ராத்திரியில் பகிர்ந்து​கொண்டதில், தன்னிடமிருந்து புத்த மாபோதம் என்ற அற்புத சிறுகதை​விளைந்ததையும் ஈக்காசியால் நாய்மசுரு நாத்தம் என்ற கேவல கவிதை மட்டும் எழுத முடிந்தது என்றும் ஈக்காசியின் இலக்கியத்தை பிரேத பரிசோதனை செய்திருந்தார் குரு.

ரோசாமகன் திரும்பவும் ஒருமுறை ஈக்காசியின் எழுத்தை படிக்க வேண்டியது அவசியமாயிற்று. கைவசம் யாதொரு பிரதியும் இல்லாத காரணத்தால் திரும்பவும் இணையத்தில்​தேடல்.

சந்திரபுத்தனின் இணையதளமான www.chandrabuddha.com - ல் ஈக்காசியை பற்றி ஒரு இரங்கல் கட்டுரை இருந்தது. இரங்கல் கட்டுரைக்களுக்கென்று தனித்தொகுப்பே இருந்தது. இருந்தாலும் இறந்தவர்களுக்கு மட்டுமே இரங்கல் கடிதம் எழுதுவது என்பதில் மிக கண்டிப்பாக இருப்பவர் சந்திரபுத்தன்.

அதில்
அபத்தை நோக்கி பயணிக்கும் பறவையின் குரல் என்ற தலைப்பில் ஈக்காசி தமிழின் மிக முக்கிய எழுத்தாளர் என்றும் இதனாலேயே தன் கடைசி காலத்தில் மூல வியாதியால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்றும் இரங்கியிருந்தார். இந்த குறிப்புகளை எல்லாம் ஒருவாறாக கோர்த்து குருபிரசாத்திற்கு பதில் எழுதினான்.
சந்திரபுத்தன் எழுத்தை பார்த்தாலே குருவிற்கு காலரா டயாரியா எல்லாம் வந்துவிடும். இந்த நிலையில்​ரோசாமகனின் கடிதத்தில் ஈக்காசி​யைப் பற்றி சந்திரபுத்தனின் இணைய விவரத்தை குறிப்பிட்டிருந்தது குருவிற்கு எய்ட்ஸ் நோய் வந்தது போலவே ஆகிவிட்டது. குருபிரசாத் தமிழ் இலக்கியத்திற்காக சாமியாடி அருள் வாக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
சந்திரபுத்தன் நாக்கு மற்றும் .... அழுகிச் சாவான் என்றும் சந்திரபுத்தனின் இணையதளம் வைரஸால் பீடிக்கப்பட்டு அதை படிப்பவர்களின் மூளையிலும் அது குடியேறும் என்றும் பதிலூட்டமிருந்தார்.

பின்னர் குருபிரசாத்தின் மற்ற ரசிகர்கள் அவர் இந்த மாதிரி தத்துபித்து கடிதங்களுக்கு அவர் பதில் எழுதக்கூடாது என்று சமாதானம் சொல்லி ஒரு வழியாக சாமியை மலையேற்ற ​வேண்டியதாயிற்று.
ரோசாமகனுக்கு பித்து பிடித்தது போலாயிற்று. தான் மட்டும் என்றில்லாமல் தேவையில்லாமல் ஒரு ஆப்பிரிக்க எழுத்தாளன் பேரில் செத்துப்போன ஆசாமியையும், சம்பந்தமேயில்லாத சந்திரபுத்தனையும் இழுத்து வந்து இந்த சண்டையில் நுழைத்து விட்டோமோ என வேதனையுற்றான்.
திரும்பவும் ஈக்காசியின் புனையும் இரவுகள் என்ற சிறுகதை தொகுப்பை வாசித்தான். ஒரு தெளிவுற்றவனாக திரும்ப குருபிரசாத்திற்கு ஒரு மெயில் அனுப்பினான். முடிக்கும் போது ஈக்காசி ஒரு விந்து, நீங்கள் ஒரு மூத்திரம் என்று எழுதினான்.

இந்த முறை அது குருவின் வலைமனையில் பிரசுரமாகவில்லை.

ஆயினும்
தூவானம் கணக்காக குருவின் ரசிகர்கள் இன்னும் ரோசாமகனின் கடிதத்தை போட்டு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். சந்திரபுத்தனின் வலைமனையில் குருவை போட்டு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். ஈக்காசி சாகும்வரைக்கும் வலைமனை வைக்க வக்கில்லாமல் செத்துப் போயிருந்தார். ஆக அந்த மட்டும் தப்பித்தோம் என்று நினைத்தான் ரோசாமகன். ஆப்பிரிக்க தேசத்தில் இருந்து இதுவரைக்கும் எந்த எதிர்வினையும் வராதது சிறுது ஆறுதலாகவும் இருந்தது.
சந்திரபுத்தனுக்கு அவன் ஒரு கடிதம் எழுதினான். ஈக்காசியை குரு மானங்கப்படுத்துகிறான் என்று.


அதற்கு சந்திரபுத்தன் "நீங்கள் ஷுவை டெலிபோன் போல பயன்படுத்திவிட்டீர்கள். இன்னும் 2 வருடங்கள் நீங்கள் ஹாரி சிம்மர், ப்யூரி ஸெலோன்ஸ்கி மற்றும் அபிராம சிந்தாமணி எல்லாம் ஒரு தவம் போல படிக்கவும்." என்று தனியாக ஒரு மெயில் அனுப்பினார்.

ரோசாமகன் பைத்தியம் பிடித்தவன் போலானான். ஒரு​வேளை குருபிரசாத்தின் சாபம் பலித்து விட்டதோ. வைரஸ் ஏதும் நம்மை தாக்கிவிட்டதோ என்று பயந்தான்.

வெள்ளிக்கிழமை
ராத்திரி. ஒரு பாட்டில் ஸிம்ர்ன்ஆப் மற்றும் சிக்கன் கடாய் உடன் சிந்திக்கலானான். சனிக்கிழமை விடியும் போது ஒரு முடிவுக்கு வந்தவனாய் இக்பாலுக்கு ஒரு மெயில் தட்டிவிட்டான்.
இக்பாலின் மறுமொழி இப்படி இருந்தது:
"அன்பு பூமகன், இப்பதான் நீ ஒரு முழுமையான கலைஞனாக பரிணமிக்கிறாய். இந்த இலக்கிய சாக்கடைகளோட ப்ரக்ஞையில நீ ஓங்கி உன்னோட ஒண்ணுக்கை அடிச்சிருக்கிற. பதிவு மிக முக்கியமானது. இனி நீ தைரியமா உன்னோட வலைப்பூவை ஆரம்பிக்கலாம். நான் இங்க பிராஜெக்ட்ல கொஞ்சம் பிஸி. நீ எழுது நான் பாத்துக்கிறேன்." அன்பாக, இக்பால் ஸான்டா கிளாரா

சரியென்று, ஒரு வலைப்பூவை ஆரம்பித்தான்.
ரோசாமகன்
ஆரம்பித்த பிளாக் இதோ: www.rosamagan.blogspace.com

முதல்
இடுகையாக அவன் எழுதியிருந்த குடை அவிழும் பொழுது என்ற கவிதையை வெளியிட்டான். இக்பாலுக்கு செய்தி அனுப்பினான். பின்னர், தமிழ் இலக்கியத்தின் சாபம் என்ற பெயரில் குருவையும், சந்திரபுத்தனையும் விமர்சித்து எழுதினான்.

முன்னெப்போதும் படிக்கவே பிடிக்காத கட்டுரை வடிவம், எழுதும்போது சுலபமாக வசப்படுவதை வியந்தான்.