Wednesday, December 29, 2010

ஆதாம் கடந்த தோட்டம்!


எனது கண்கள் ஒரு ஆப்பிள் போல
மாறிவிட்டது பாரேன்.

அறுத்துப் பார்த்தால் விதைகள் சிலது இருக்கலாம்
அதை வீசி எறிந்துவிடுதல் உனக்கு நலம்!
பழத்தின் பளபளப்பான வெண்பரப்பு ஏகாந்தமானது.

சுழித்தோடும் நதியில் நனைந்து நிற்கும் மரநிழல்
ஒரு பெரிய பகற்பொழுதை மறக்கடித்துவிடக் கூடியது.

எல்லா காரியங்களுக்கும் கால்கள் முளைத்துவிட்ட இவ்வேளையில்
எனக்குரிய கண்களை ஆப்பிள்களாக்கி விடுவதில்
ஒரு ஆறுதல் உணர்கிறேன்.

தோல் சிவப்பானாலும் ஆப்பிள் வெள்ளைதான் - இன்னும்!