சவத்தின் கனத்தில் திரிகிறது காற்று
பெளணர்மி தினவில் கரை மோதும்
தூரத்து நீர்ம சுருள்கரங்கள்
எல்லாக் கறைகளையும் கரைக்க வல்லது -
சூரியன்கள், நிலாக்கள், உதிரம் படிந்த மண்துகள்கள்.
கேவல்கள் தராசில் அளந்த கவனம் கொண்டன
இரவுக்குள் நீலம் போல இங்கு
அழுகை கரைந்து கொண்டிருக்கிறது.
தனியாக வரும் கொழுத்த வண்டிகள் பிரேதங்களையும்
அயன்களாக மாறி குருதியுடன் கலக்கும்
cyan நிறத் துகள்கள் மரணத்தையும் தருவிக்கின்றன.
கழுவப்பட்ட வீட்டின் ஈரம் காயும்முன்
அடுத்தடுத்த வீடுகளில் கேவல்கள் அரும்ப
புதைத்தவன் மண்ணில் பூக்கள்
cyan நிறத்திலேயே பூக்கின்றன.