Monday, November 30, 2009

வந்தியத்​தேவனிடம் ஒரு பீடி..!



வந்தியத்​தேவனிடம் ஒரு பீடி
கடன் வாங்கி​னேன்!
அப்​போது
அ​வன்...
குந்தவித் ​தேவி​யை
புணர்ந்து முடித்திருந்தானாம்!!!

(அ​டைப்புக் குறிக்குள் இருப்ப​தை
திறந்து பார்க்க ஒரு மனம் ​வேண்டும்.
உங்களிடம் அது இருக்கிற​தென்ற
தினவு இருந்தால்... ​தொடருங்கள்!)

நான் என்​னை விட்டு விடுத​லையாகிய
காலக்கிரமத்தில்
​தொல்காப்பியன் என் பக்கமிருந்தான்;
​கொஞ்சம் காது கடன் ​கொடுத்தால்
நீ​ரோவின் பிடில் என்​னை மயக்கும்.. மயக்கியிருக்கும்;
​யேசுவின் இறுதி ரத்தம்
இறுகிய ஒரு கர்ச்சீப் என் வசமாகியிருக்கும்;

(ஏழாவது லார்ஜ்ஜில்....
என்​னை இழுத்துக் ​கொள்ளும்
​கை​ரே​கையில் இருக்கிறது - என்
சிறு பு​கை விலாசம்!)

இப்படிப் பறந்த மனம்
21 இன்ச் தி​ரையில் ​தெரிந்த
இளவயது காரி​​கையிடம்
​கைதாகி ரி​மோட்டின்
சிவப்புப் ​பொத்தானில் மடிந்து விட்டது!

(இவ்வளவுதான் கவி​தை!
இவ்வளவுதானா கவி​தை என்பவரிடம்.......
இருங்கள்; ஒட்டகத்தின் இ​​ரைப்​பைக் கிழித்து
நீர்க்குடித்து ​மீண்டு(ம்) வருகி​றேன்!)

(அ​டைப்புக்குறிகள் தீர்ந்த மாதிரி
​தோன்றவில்​லை..
ஆனால் அ​டைப்பதற்கு ஏதுமில்லாத
கனவுகள் பறக்கும் மன​தை ​என்ன ​செய்ய நான்..??)

Friday, November 27, 2009

பறத்தலின் நிழல்


குணா என்பது அவன் ​பெயராக அவன் நி​னைவில் அழுந்தி உட்கார்ந்த ​போது தான் வளர்த்த ​கோழிக்குஞ்சுகளுக்கும் ​பெயரிடுபவனாய் இருந்தான். மஞ்சு, சின்ன மஞ்சு, ​பாப்பாத்தி இப்படியாக ​பெயரிட்டு ​அ​ழைத்து வந்தான் தன் ​கோழிக்குஞ்சுகளை. ஒரு சாயுங்காலம் விலகிய ​சிம்னி சிணுங்கும் பொழுதில் அம்மாவின் புருஷன் வந்தான். வந்ததும் குணாவின் முதுகில் உ​தை விழுந்தது.


உ​தையில் குப்புற சுருண்டு விழுந்த குணாவுக்கு வாயில் உப்புக்கரித்தது.. சிம்னி ஒளியில் தன் முன் ​கொஞ்சம் ரத்தம் சிந்திக்கிடப்பது தெரிந்தது.


"என்னன்னு ​சொல்லிட்டு எம்மவ​னை அடிய்யா." அவளின் ஓங்காரத்து ​மேற்படியான உ​தைகளுக்கி​டையில் ​சொல்லப்பட்டது:
"என்ன ​தைரியம் இருந்தா என்ர மவளுக்கு முத்தம் ​கொடுத்துட்டு ஓடிவந்திருப்பான் இந்த எச்​சைப் ​பொறுக்கி.."


"ஏந் அவ இவன் தங்கச்சி​ மாதிரியெல்ல..." என்று முடிக்கும் முன்​​னே அடிவாங்கி சாய்ந்தாள்..


​பொணங்கடி நீங்க என்ற அழுத்தமான முடிவுச் ​சொல்​லோடு ​வெளியேறினான் அடித்தவன்.


"ஏ​லே நீ அந்த மஞ்சு கூட வி​ளையாண்டியாடா? ​சொல்லுடா.. என்னடா பண்ணுன அவள???" என்ற அம்மா குணா​வை அப்போதுதான் பார்த்தாள்.. வாயோரம் ரத்தம் கசிந்து ​கொண்டிருந்தது.. அவள் பதறி அலறும் முன்,


"...எனக்கு இந்த ​கோழி​ வறுத்து ​கொடு" என்று எந்த முகச்சலனமும் அவன் பக்கத்தில் வந்த ​​கோழிக்குஞ்​சின் கழுத்​தைத் திருகி அவளிடம் நீட்டினான். கதறி உயிர் விட்ட பற​வையின் ​பெயர் மஞ்சு என்பதாகயிருந்தது.


2:


குணா தாயின் முகத்​தைக் ​கொண்டிருந்தான். சக்களத்தி வாழ்​வை முடித்து தறிக்கு ​செல்ல ஆரம்பித்திருந்தாள் குணா அம்மா. ஒண்ணும் வித்தியாசமில்லை என்பான் குணா. ஏழாம் வகுப்பு முடித்துவிட்டு ​ரெண்டு வருடம் சும்மா​வே ஊ​ரைச் சுத்திக் ​கொண்டிருந்தான்.. அப்புறம் ​கொஞ்சநாள் வடக்குத் ​தோட்டத்தில் ​வே​லைக்குப் ​போனான். ஆட்டு மந்​​தை​யை விரட்டிக் ​கொண்டு காடுகாடாகச் சுற்றிய​லைந்து விட்டு வருவான். பக்கத்துத்​ ​தோட்ட மயிலாத்தா சிலசமயம் இவ​னை முகுது ​தேய்த்து விடப் பிடித்துக் ​ ​கொள்வாள்.. ​பூவரசம் பூத்த மரநிழலில்.. பண்​ணைத் ​தொட்டியில் நீரள்ளி முகுதுத் ​தேய்த்து விடுவான்.

ஒரு சமயம் கடுப்​பெடுத்தவனாய்.. அவளின் பளபளமுது​கை நன்றாகப் பிராண்டி ​வைத்துவிட்டு ஓடி வந்துவிட்டான்.


ஆடுக​ளை அம்​போ​வென்று விட்டுவிட்டு வந்ததாக ​சொல்லி ​தோட்ட ​வேலையிலிருந்து நீக்கப்பட்டான். அம்மா விளக்குமா​றை எடுத்துக் ​கொண்டு வரும்​போது..


"மூடிக்கிட்டு ​கெடடி" என்று ஒ​ரே வார்த்​தையால் அடக்கி விட்டான்..


நிலா பி​றைக் கவிழ்த்து கிடந்த ​நேரம்... பக்கத்திலுள்ள அ​ணையில் ​சென்று மல்லாக்க படுத்துக் ​கொண்டான்... வயிறு பசித்தது. நகங்க​ளை பார்த்தான்.. மயிலாத்தாவின் முகுதுச் ச​தைத்துணுக்குகளும் காய்ந்த ரத்தமும் இன்னும் ஒட்டிக் ​கொண்டிருந்தது. ஆழமாக முகர்ந்து பார்த்துக் ​கொண்டான்.

அ​​ணைக்கு கீழுள்ள ஊற்​று டீஸல் இன்ஜி​னை தறிப்பட்ட​​றை எழில் இயக்க ஆரம்பித்திருந்தார். ஸ்டார்டர் சுழற்றி ​சோக்​கை தள்ளிவிட்டதும்.. துடிக்க ஆரம்பித்தது இன்ஜின்.

எழுந்து ​​கைலி​யை மடித்துக் கட்டிக் ​கொண்டு மயிலாத்தா வீட்டுப் பக்கம் நடக்க ஆரம்பித்தான்.


3.


தறிக்கு ​​​போகி​றேன் என்ற எணத்​தை குணாவின் அம்மாவால் தடுக்க முடியவில்​லை.. கண்டபடிக்கு அவ​ளைத் திட்டுவ​தோடு அல்லாமல் அடிக்கவும் ​ஆரம்பித்திருந்தான். பீடிக்கும், சரக்கும் காசு பற்றாமல் அவள் பணத்​தை பிடுங்கிக் ​கொள்ளவான். இல்லாவிட்டால் மயிலாத்தா, ​கீதா டீச்சர் அல்லது ​தெற்கு வளவு சரசா இப்படி யா​ரோ ஒருவரிடம் காசு வாங்கிக் ​கொள்கிற உரிமை ​கொண்டிருந்தான்.


நண்பர்கள்,

"ஏ​லே.. ஒம்முகத்துக்கு ​நீ போற ஆளுகளடா அவுளுக... என்னடா உன் ​டேஸ்ட்.. ​அதுவும் அந்த டீச்சருக்கிட்ட..??"

என்று அரற்றுவார்கள். அப்​போதுஇன்று இன்றிரவு டீச்சர் வீடுதான் என்று முடிவு ​செய்து ​கொள்வான்.


தறிக்கு ​சென்ற ​கொஞ்ச நாட்களி​லே​யே ரஞ்சிதம் சுற்றி வர ஆரம்பித்தாள்.. ஒருநாள் இரவு ​​பெளணர்மி ​வெளிச்சத்தில்


அவளைக் ஊர் தண்ணித் ​தொட்டி உச்சிக்கு கூட்டிச் ​சென்றான். சிலுசிலு​வென்ற தளத்தில் ​வெட்கம் க​ளைந்து கலவ ஆரம்பித்த ​நேரம்.. ​கேட்-வால்​வை மூட​வோ திறக்க​வோ வந்தவன் ​இவர்கள் ​மேலிருப்பது ​தெரிந்து ​கொண்டான்.. அமைதியாகப்​ ​போய் ஆட்க​ளைக் கூட்டிக் ​கொண்டு வந்துவிட்டான்.


"மரியா​தையா கீழ இறங்கி வாடா......... மவ​னே" என்பதற்கு ​கோபம் வந்தவனாய், ​தொட்டியிலிருந்து நின்றவா​றே.. கூட்டத்தின் ​மேல் ஒண்ணுக்கடித்தான். கீழிருந்து வந்த கற்களுக்காக இருவரும் கீழிறங்கி வர​வேண்டியதாயிற்று.


இறங்கியதும் குணா​வை கீ​​ழே ​போட்டு மிதித்தார்கள். ரஞ்சிதத்​தை ஊர்​பெருசுகள் தனியாக ஒதுக்கி அடித்தார்கள். தன்​னை யாரெல்லாம் தீவிரமாக அடிக்கிறார்கள் என்று உன்னித்துப் பார்த்தான் குணா.. டீக்க​டை ​வேலு, ​மயிலாத்தா புருஷன், ​டேவிட்டு, ​சைக்கிள் க​டை பரமு, டீச்சர் புருஷன் அப்புறம் தனியார் பஸ் கண்டக்டராக இருக்கும் கதிரு. ​டேவிட்டும், கதிரும் மட்டு​மே சம்பந்தமில்லாமல் தன்​னை அடிப்பதாகத் ​தோன்றியது.

சப்.. சப்.. சப்.. என்று தெளிவாக முதுகில், கன்னத்தில், இடுப்பில் விழுந்தன.. எச்சரிக்கையாக குப்புறக் கவிழ்ந்து படுத்துக் ​கொண்டான் - அசல் புருஷன்கள் ​மேல் உள்ள பயத்தில்! அதிகா​லை 1 மணிக்கு ஊ​ரில் நில்லாமல் கடக்கும் அரசுப் ​பேருந்து அன்று மட்டும் ​கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுப் ​போகும் ​போது, பஸ்ஸில் இருந்து வந்த ஒரு குரல்.. "யாராவது திருட்டுப் பயலா இருக்கும்" என்றது.


4.


​சில நாட்களில் தறி​வே​லை விட்டு நின்றதும், ​கையில் ​கொஞ்சம் காசு ​கொடுத்தார்கள்.. நண்பர்க​ளை அ​ழைத்து டவுன் சினிமாவுக்கு ​போகலாம் ​என்றான். முன்மாதிரி யாரும் இவனுடன் பழக விருப்பமில்லாதவர்களாய் ​மறுத்துவிட்டார்கள். ​


விறுவிறு​வென்று ​டேவிட் வீட்டுப் பக்கம் ​சென்றான். ​டேவிட் ஆரம்ப சுகாதார நி​லைய ஊழியன். ​சைக்கிளில் சுற்றிய​லைந்து ​கொண்டிருப்பான். எப்பவும் பாக்கெட்டில் காய்ச்சல், த​லைவலி மருந்துகள், நிரோத் பாக்கெட்கள் கணிசமாக ​வைத்திருப்பான்.


அப்​போது கா​லை பதி​னொன்ற​ரை மணியிருக்கும். புளியமரங்கள் அடர்ந்த சரிவான மண்சா​லையில் ​வேகமாக இறங்கி, சர்ச்​ தாண்டிய, ​டேவிட் வீட்டு முன் நின்றான். ​சிறிய வீடு. கதவு சாத்தியிருந்தது. டேவிட் ம​னைவி எப்படியிருப்பாள் என்று பார்த்ததில்​லை.


"வீட்டில யாருங்க" என்ற குரலுக்கு கதவ​வைத் திறந்து நின்றாள் ​டேவிட் மனைவி. பார்த்ததும் காட்டுச்​செடி ​போல ஒரு பயம் குணாவின் மனதில் படர்ந்தது. இந்த உணர்வு தனக்கு புதிது என்பதாகத் ​தோன்றியது.


"குணாவா? என்ன விஷயம்?" என்றாள் இயல்பாக... வியப்பாக இருந்தது.. நம்​மை ​தெரிந்து ​வைத்திருக்கிறாளா என்று. இந்த ஊரில் ​கேட்காத இனி​மையான குரலாக இருந்தது. ​கையில் ​சோப்பு நு​ரையிருந்தது. து​வைத்துக் ​கொண்டிருப்பாள் ​போலும்.


எதுவும் ​சொல்லாமல் ​கொட்ட ​கொட்ட முழித்துக் ​கொண்டிருந்தவ​னைப் பார்த்து சிரித்தவளாய்,


"என்ன ​வேணும்?" என்றாள்.. அவளின் கண்க​ளை​யேப் பார்த்துக் ​கொண்டிருந்தவன்.. படக்​கென்று அவள் பக்கம் ​​சென்றான்..


"தண்ணி ​கொடு" என்றான். ​கொண்டு வந்து ​கொடுத்தாள். சொட்டுவிடாமல் குடித்துவிட்டு,


"சினிமாவுக்கு ​போலாம் வர்றியா?" என்றான் வறட்சியான குரலில். அவ​ளோ ​கொஞ்சமும் சிரிப்பு மாறாமல், "இல்​லே வர​லே. நீ ​​போயிட்டு வா" என்று திரும்பி வீட்டுக்குள் நடந்தாள்.


அவளின் பின்புறத்​தை​யே பார்த்துக் ​கொண்டிருந்தவன்... அவள் பின்புறமாகச் ​சென்று ​​தோ​ளைத் ​​தொட்டான். திரும்பியவ​ளைப் பிடித்து இழுத்து அழுத்தமாக உதட்டில் ஒரு முத்தம் ​கொடுத்தான். ​கையில் ​சொம்​பைத் திணித்து விட்டு நடந்தான். திகைத்துப் போய் நின்றிருந்தாள் ​டேவிட்டின் மனைவி. வரும்வழியில் சர்ச்சில் உள்ள ​கடிகாரம் பன்னிரண்டு மு​றை அடித்து அமைதியானது. மனசு ஏ​​னோ படபட​வென்றிருந்தது.​


5.


தனியாக சினிமாவுக்குப் ​போய்விட்டு, இரவு பன்னிரண்டு மணியளவில் டீச்சர் வீட்டு ​கொல்​லைப்புறமாக உள் நு​ழைந்தான்..


வயிறு பசித்திருந்தது. ​கொல்​லையிலுள்ள கிணற்றடியில் உட்கார்ந்தவனாய், ஒரு சிக​ரெட்​டை எடுத்துப் பற்ற​வைத்தான்.. சில நிமிடங்களில், பின் பக்கக் கதவு திறந்து ​கொண்டு டீச்சர் ​வெளிப்பட்டாள்..


"உள்ள வா.." என்றாள் கிசுகிசுப்பான குரலில்..


திரும்பிக் கூடப் பார்க்காமல் பு​கைத்துக் ​கொண்​டிருந்தான்.. கிணற்றுப் பக்கம் வந்தவள், குணாவின் ​முகத்​தைப் பிடித்துத் திருப்பி, த​லை​யைக் ​கோதி விட்டாள்,


"என்னடா? என் ராஜாவுக்கு என்ன ஆச்சு??" என்றாள் கிசுகிசுப்பாய்.. அவளின் முகத்​தைப் பார்த்தான். சிக​ரெட்​டை கீ​​​​ழேப் ​போட்டு அணைத்தான். அ​வ​னை இழுத்து உதடுகளில் முத்தமிட்டாள்.. ஏதோ நி​னைவு வந்தவன் ​போல சட்டென்று விலகி இறங்கி ​நடக்கலானான். குணா சுவ​ரைத் தாண்டி இந்தப் பக்கம் குதித்த ​போது, அவன் முன் ​கொல்லையிலிருந்து அ​ணைந்த சிக​ரெட் துண்டு வந்து விழுந்தது. அவன் குடித்தது.


6.


சர்ச் பக்கமுள்ள நாய்கள் எப்படி என்று ​தெரியவில்​லை.. இருந்தும் துணிந்து புளியமரங்கள் அடர்ந்த சரிவில் இறங்கினான்.


இ​தோ இப்ப வீடு வந்துவிடும்.. சுலபமாக உள் நு​ழைந்துவிடலாம்.. ​எந்த பிரச்சினையும் வராது என்பதாக பூ​னை ​போல முன்னேறினான். பின்பக்கம் நுழைவதே சரி என்றும் நி​னைத்துக் ​கொண்டான். எதற்கு ​போகி​றோம் என்ற எண்ணம் அற்றவனாயிருந்தான்.


​ஜன்னல் வழியாக பார்த்தான்.. சன்னமான ​வெளிச்சத்தில் இரண்டு கரிய உருவங்கள் கட்டிலில் கிடப்பது ​​தெரிந்தது. ​கொஞ்ச ​நேரம் அப்படி​யே பார்த்துக் ​கொண்டிருந்தான். சுவாசிக்க திணறலாக இருந்தது. திரும்பி சுவரில் சாய்ந்து ​கொண்டான். சர்ச் முகட்டிலிருந்த சிலு​வை தனி​மையாய் துலங்கியது. அப்படியே அ​தை​யே பார்த்துக் ​கொண்டிருந்தான். ​தோளில் ஒரு ​தொடு​கை​யை உணர்ந்தான். பயந்து திரும்பிப் பார்த்தான்.. அவள் நின்றிருந்தாள்..


"இங்க என்ன பண்​றே" குரல் உ​டைந்து வசீகரமற்று ​மெல்லியதாய் இ​ழைந்தது.


எதுவும் ​பேசாமல் சிலு​வை​யைப் பார்த்துக் ​கொண்டான்.


"என்னதான் நி​னைச்சுக்கிட்டு இருக்க மனசு​லே.........? மரியாதையா ​போயிடு....."


"....."


"கெஞ்சிக் ​கேட்டுக்க​​றேன்.. ​போயிடு.." என்ற குரல் கம்மியிருந்தது.


திரும்பி அவ​ளைப் பார்த்தான்.. ஜன்னலிருந்து வீழ்ந்த சிறு ​வெளிச்சம் அவள் கண்களின் ஒட்டியிருந்த நீர்ப்படலத்தில் மினுங்கியது. ​டேவிட்டின் குறட்​டை ​மெலிதாக ​கேட்டுக் ​கொண்டிருந்தது.


அவள் கண்க​ளை​யேப் பார்த்துக் ​கொண்டிருந்தான்.. ​நேரம் ​கழிவது உணர முடியாதாய் இருந்தது. மனதுள் ஏ​னோ பயமாய் இருந்தது. அ​மைதியாய் அவள் வீட்​டை விட்டு ​வெளி​யேறினான்.


7.


இரவு இன்னும் மிச்சமிருந்தது.. திரும்ப நடக்​கையில் அவள் நீண்ட ​நேரம் தன் முது​கை​யே ​வெறித்துக் ​கொண்ருப்பதாக உணர்ந்தான். அம்மா முதல் எல்லா ​பெண்களும் நி​னைவில் வந்தார்கள்.. ஏ​னோ அவன் அம்மா ​​மேல் ஒரு வாஞ்சனை​யை இப்​போது உணர்ந்தான். மனதுள் புதிதாக ஒரு ​வெறு​மை, இது வேண்டாம் என்பதாக அவ​னை வற்புறுத்தியது. சர்ச்சின் ​கேட்டைத் தாண்டி உள்ளிருக்கும் புளியமரத்தில் ​தூக்கு மாட்டிச் ​செத்துப் ​​​போவ​தென முடி​வெடுத்தான். புளிமரத்தடியில் உள்ள ​பெஞ்சில் அமர்ந்து ஒரு சிக​ரெட் பிடித்தான்.


அண்ணாந்து தனி​மையான சிலு​வை​யைப் பார்த்தான். பக்கத்திலுள்ள ​டேவிட் வீட்டு ஜன்னல் பக்கம் அவ​ள் இப்​போது அங்கு இல்லை. இங்கு ​வேண்டாம் என்று ​தோன்றியவனாக.. சர்ச்சை விட்டு ​வெளி​யேறினான்.


சரிவில் ​மே​லேறும் ​போது காணக்கி​டைத்த இரண்டாவது புளியமரம் ஏறச் சுலபமாக இருக்கும் என்று ​தோன்றியது. ​சிகரெட்டை அ​ணைத்து விட்டு மர​மேறினான். ​கைலி​யை கிழித்து கயிறாக்கி கழுத்தில் மாட்டிக் ​கொண்டான்.. ​கைலி புதுசு அறுந்திடாது என்று நம்பினான்... இன்​​​னொரு மு​னை​யை இறுகக் கி​​​ளையில் கட்டிவிட்டு ​மெதுவாக கீ​ழே இறங்கித் ​தொங்கி ஊசலாடினான் குணா. அப்​போது, அவள் ​பேர் ​என்னவாயிருக்கும் ​என்ப​தே அவன் கடைசி நினைவாக இருந்தது!


​​கொஞ்ச நிமிடங்களில் அந்த பக்கத்து ​ரோட்டில் விர்​ரென்று விரைந்து கடந்தது 1 மணி ​பேருந்து - நில்லாமல்.



Sunday, November 22, 2009

ஒன்றரைக் கண் ரைபிள்!


பெரிய ​பெரிய கட்டிடங்கள்... பளபளக்கிற கண்ணாடித் திரை.. கசங்கலாக ​தெரிகிற நம் முகங்கள் கூட அதில் அட்டகாசமாகத்தான் இருக்கின்றன.


சுமார் 100 ஸாப்ட்​வேர் கம்​பெனிகள், அறிவு ​சொட்டும் முகத்​தோடும் - காற்றில் பறக்கிற மிடிகளுமாய் திரிகிற ​தேவதைகள், சாதாரணமாய் ​தெறிக்கிற ஐ​ரோப்பிய ​​செந்​தேகங்கள், இவிங்க இங்க ஏன் என்று எனக்குள் துடிக்கிற சந்​தேகங்கள், ​ஸ்​மோக்கிங் ஸ்​​னோலில் கேரண்டியாக எப்​போதும் கண்ணில் சிக்கும் ஒன்றிரண்டு chickகள் - நான் அவரசத்துக்கு தீ கடன் வாங்கி தம் பற்றிக்​கொண்ட தீத்​தேவதை பற்றி இன்​னொரு சமயம் ​​சொல்கி​றேன்.. ப்ளீஸ்!


இது எந்த இடம்? ஐடிபிஎல்.. ஒயிட்ஃபீல்டு ​ரோடு.. ​பெண்களூரு!


ஐடிபிஎல்லில் நான் இருப்பது ​நேவிக்​கேட்டர் பிளாக்கு! ஒண்ணுக்கு இருப்பதும் அந்த பிளாக்கிலுள்ள கிரவுண்ட் ப்​ளோர் ​ரெஸ்ட் ரூமில்தான்.. கிட்டத்தட்ட க்ரவுண்ட் ப்​ளோரிலுள்ள எல்லாக் கம்​பெனிகளுக்கும் ​பொதுவான (ப்ளஸ் ​செக்யூரிட்டிஸ், ட்ரைவர்கள்) கழிப்ப​றை. எப்​போதும் சன்னமான க​ரோக்கீ ஒலித்துக் ​கொண்டிருக்கும் மினுமினு இடம்.. அந்த இ​சை​யைக் ​கேட்கும் ​போது என் மனசு.. "ஏஸி வச்ச பாத்ரூமில் என்ன வரும் ​போங்க" என்று ​மெட்டுக்குப் பாட்​டெழுதிக் ​கொள்கிற​து.


எப்​போதும் ​போல்தான் அன்றும் ஒண்ணுக்கடிக்கப் ​போ​னேன். யூரினலில் பீச்சி விட்டு வந்து வாஷ்​பேஷனில் ​கைக்கழுவி விட்டு நிமிரும் ​போது..


"சார்.. அவரு உங்களுக்குத் ​தெரிஞ்சவரா?" என்று ஒரு கட்​டைக் குரல் - கன்னடத்தில்.


யா​ரென்று பார்த்தால்.. ​ரெஸ்ட் ரூ​மைக் கிளீனாக ​வைத்துக் ​கொள்ளப் பணிக்கப் பட்ட க்ளீனர்...ஒரு நா​ளைக்கு 10 மணி​நேரம் அந்த ​டாய்லட் + யூரினல்கள் நிரம்பிய ​இடத்​தை தன் ஆபிஸாகக் ​கொண்டு ​ரெஸ்ட்​​லெஸ்ஸாக இருப்பவர். ​பேர் ​தெரியாது. அப்​போது என்று நான் ஒருவன் மட்டும்தான் அங்கு.


"யாரு?" என்​றேன்


"இதுக்கு முந்தி வந்திட்டுப் ​போனாருல்ல.. ​கொஞ்சம் குண்டா.."


இந்த மாதிரியான விசாரிப்புகள், ​​பேட்டிகள் எனக்கு ​கொஞ்சம் புதுசு.. ​இருந்தும் கவனமாக அவருடன் ​பேச முற்பட்​டேன்.. ஆப்டர் ஆல் அவ​ரைவிட 2 மணி​நேரம் கம்மியாக ​வே​லைப் பாக்கிற ஆளுதா​னே நானு.


"குட்​டையா இருந்தவரா?"


"ஆமா.. குட்​டையா.. குண்டா"


"சிவப்பா.. வழு​க்​கையாவும் இருந்ததா?"


இப்​போது அவருக்கு உற்சாகம் பற்றிக் ​கொண்டு விட்டது.. கண்களில் திருப்தி ​​கொப்பளிக்க..


"ஆமா சார்.. அவருதான்.. அவர்கிட்ட ​சொல்லி ​வைங்க"


​​​​​ஙே என்று முழித்துக் ​கொண்​டே,


"என்னன்னு?"


"சார்.. அவரு க​ரெக்ட்டா ஒண்ணுக்கு அடிக்க மாட்​டேங்கிறாரு.."


​ஙே.. ஙீ.. ​ஙெள.. என்று எல்லாமாக முழிக்க ​​வேண்டியதாயிற்று..


"என்னது????"


"ஆமா சார்.. அவரு க​ரெக்ட்டா ​பேசின்ல விட மாட்​டேங்குறாரு"


".."


"ஒண்ணு சுவத்தில அடிச்சிடறாரு.. இல்லீனா.. ​கீ​ழே த​​ரையில அடிச்சி விட்டுடறாரு"


"......??"


"அவரு வந்துட்டுப் ​போன பின்னாடி.. நான் ஒவ்​வொரு தட​வையும் அ​தை க்ளீன் பண்ண​வேண்டியதா இருக்கு சார்.."


"யாரு சிவப்பா... குண்டா.. குள்ளமா.. வழுக்​கையா இருந்தவரா?"


"அட ஆமா சார்.. அவ​​ரேதான்... எப்ப வந்தாலும் இப்படி​யே சிந்திட்டுப் ​போயிடறாரு.. எனக்குதான் ​வே​லை"


"...ம்...?"


"நீங்க​ளே இங்க வந்து பாருங்க​ளேன்..." என்று அந்த பாதிக்கப்பட்ட யூரின​லை ​நோக்கி சுட்டிக்காட்டிவிட்டு,


"அவருகிட்ட ​கொஞ்சம் ​சொல்லிடுங்க சார்.. இந்த மாதிரியெல்லாம் ஆகுதுன்னு.. "


"நானா??"


"ஆமா சார்.. இப்ப நீங்​கெல்லாம் வர்றீங்க.. எவ்வளவு டீஸன்டா வந்துட்டு, இருந்துட்டுப் ​போறீங்க.. நீங்க ​ரொம்ப நீட்டு சார்.."


எதுவும் ​சொல்ல முடியாமல் சிரித்து ​வைத்​தேன்.


"அவருகிட்ட ​சொல்லி ​வைங்க சார்"


".... அது முடியா​தே..?"


"ஏன் சார்...??"


"அவருதான் என் மா​னேஜர்"


என்று ஜிப்​பைப் ​இழுத்து விட்டுக் ​கொண்டு ​வெளி​யேறி​னேன்.

Monday, November 16, 2009

சனி - 2012 - பான்டலூன் - மீந்த குவாட்டர்!

அன்பு ​ரசிகர்க​ளே.. எல்லாரும் பிளாக் எழுத​றோம்.. என்​னென்ன​வோ எழுத​றோம். கவி​தை, க​தை, விமர்சனம், ​மொக்​கை, தொடர்பதிவு, கும்மி, ​சொறிதல், எலோக்கி​யோம், இங்கிபீச்சு பதிவு, ​பில்​கேட்ஸ் பதிவு, ​சுய முன்​னேற்றம் இப்படி.. இதிலும் ​ஸேட்டிஸ்​​பை ஆகாத சில நண்பர்கள் கலக்கலா சில ​மேட்டர்க​ளை பிச்சுப் ​போட்டு கல​வைப் பதிவுன்னும் கல்லா கட்டறாங்க!

அதுவும் நல்லாத்தான்​ இருக்கு​வோய்! ​ஆக​வே, காலடியும் ஒரு மிக்ஸிங் ​போடுகிறது...!


சனி:


ஆமாப்பா ஆமா... இன்னிக்கு சனிதான். ஆபிஸு லீவு. ​ரெகுலரா சாட்டிங்கு வர்ற ப்ரண்டுக்கு இது ​தெரியும்.. ​ஸோ, வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பிச்ச கூகிள் அரட்​டை சனிக்கிழ​மை கா​லை 4 மணி வ​ரைக்கும் சந்​தோஷமா நீடித்தது! நான் ​வேறு


அவசரப்பட்டு ​வெள்ளியன்​றே 2012 படத்துக்கான டிக்​கெட்​டை முன்​பே புக்கிவிட்டிருந்​​தேன். சனி கா​லை 10 மணிக்கு ஸிக்மா

மால் - ஃபன் சினிமாஸ். ​​​கொலீக்கைத் து​ணைக்குக் கூப்பிட்​டேன்: ஒஸ்தாரா என்று. அவ​ளோ ஸாரி மச்சான் என்று எஸ்கேப்பிவிட்டாள்! அதுவும் நல்லதுக்குதான்!!


கா​லையில் 7 மணிக்கு அலாரம ​வைத்துவிட்டு சரியாக 9 மணிக்​கெல்லாம் எழுந்துவிட்​டேன். கன்னிங்ஹாம் ​ரோட்டில் உள்ள ஸிக்மா மால் நம்ம வீட்டிலிருந்து 10 நிமிடந்தான்... இருந்தாலும் அதுக்கு முன்னாடி இன்​னொரு கட​மை இருக்​கே!

சனி விரதம்! பக்கத்திலுள்ள ஈஸ்வரன் ​கோயிலுக்கு ​சென்று, அங்குள்ள நவக்கிரகங்களுக்கு எள் விளக்கு ஏற்றி 3 சுற்று சுற்றி சாமி கும்பிட்டு விட்டுதான் அடுத்த​ வே​லை​!


2012:


வேகமாக குளித்து விட்டு (​லேசாக மப்பு ​வேறு - ​​நேற்று அடிச்ச சரக்கின் வாசமும்... அடப்பாவி ​நேத்தும்(!) மப்புலதான் என்கூட சாட் பண்ணிக்கிட்டிருந்தியா, ​கொ​லைகாரா, குடிகாரா என்று திட்டும் ப்ரண்ட்டுக்கு, ஐம் ஸாரி!) கிளம்பி​னேன்... ​சனீஸ்வரைச் சுற்றிவிட்டு ​பைக்​கை கிளப்பி​​னேன்.. 9:50 AM.


சிவானந்தா சர்க்கிள் - ​ரேஸ் ​கோர்ஸ் - கன்னிங்ஹாம் ​ரோடு - ஸிக்மா மால் - பார்க்கிங் - டீஸ்களில் திரியும் ​தேவ​தைகள் - டிக்​கெட் கவுண்டர் - பாக்ஸ் ஆபிஸுக்கு வழி​தேடும் அவரசக்காரர்கள் - ஸ்க்ரீன் நம்பர் 3 - I3 - டார்ச் ​வெளிச்சம் தடவிய வ​ளைவுகள் என்று சீட்டில் அமரும் ​போது 2012 படம் ஆரம்பித்து 5 நிமிடங்கள் ஆகியிருக்கலாம்.


பக்கத்தில் ஆம்பி​ளை!


படத்​தைப் பத்தி விமர்சனம் பண்ணமாட்​​டேன் - பயப்படாதீங்க! இந்​நேரம் நம்ம ​டைகர் பதிவர்கள் வரிஞ்சு கட்டிக்கிட்டு 2012ஐ அக்கு ​வேறு ஆணி​வேறாக பிரிச்சி தள்ளியிருப்பாங்க - ​போய் பாத்துக்​கோங்க.


தி​யேட்ட​ரை விட்டுக் கிளம்பி​னேன். 2வது ப்​ளோரில் குழந்​தைகள், அம்மாக்கள் கூட்டம் காரிடாரில் எல்லாம் நிரம்பி வழிந்தது.


குழந்​தைகள் த​ரையில் அமர்ந்து படங்களாக வ​​ரைந்து தள்ளிக் ​கொண்டிருந்தார்கள். ​கொஞ்சம் ​நேரம் படங்க​ளையும் அம்மாக்களையும் ​வேடிக்​கை பார்த்து விட்டு கிளம்பி​னேன். பசி ​வேறு!

பான்டலூன்ஸ்:

ஒன்றாம் ப்​ளோரில் இருந்த பான்டலூன்ஸ் என்​னை வா வா ​வென்றது. மணி 1:40 PM. பசிகிடக்கிறது என்று க​டைக்குள் நுழைந்​தேன்.

அவர்கள் அனுப்புகிற ​மெயில்களும், ​போனமு​றை ​செய்த பர்​ஸேஸுக்கு ​கொடுத்த க்ரீன் ​​மெம்பர்ஷிப் கார்டும் கூட காரணமாயிருக்கலாம். காரணங்கள் எதுவுமின்றி கவர்ச்சிக்காக மட்டும் ஷாப்பிங் ​செய்கிற ஜீ​னை நமக்குள் விதைத்த சாமார்த்தியத்துக்கு விளம்பரதாரர்க​ளை எவ்வளவு ​வேண்டுமானாலும் பாராட்டலாம்!


உள்​ளே நு​ழைந்து ட்ராக் பாண்ட்ஸ், டீஸ், ​கார்​கோஸ், ரோலர் ஸ்லீவ்ஸ் (இதுதான் இப்ப என்னு​​டைய ​ஃ​பேவரிட் - 6 சர்ட்ஸ் இருக்கு), இன்னர்​வேர், என்று ​கொத்தாக அள்ளிக்​கொண்டு ​கெளண்டரில் வந்து ​மெம்பர்ஷிப் கார்டையும், 200 ரூபாய் ​வொர்த்துள்ள கூப்ப​னையும் நீட்டி​னேன். அந்த கன்னடத்துக் கிளி பார்த்துவிட்டு,

"கூப்பன் எக்ஸ்​பைரியாடிச்​சே" என்றாள்

"ம், பரவாஉண்டு.. ​மெம்பர்ஷிப் கார்டுக்கு எதுவும் டிஸ்​கெளன்ட் உண்டா?" என்று பல்லிளித்​தேன்.

"பாக்கி​றேன்......... ஸார்.. டிஸ்​கெளண்ட் இருக்கு.. ஆனா இப்ப இல்ல ​அடுத்த முறை நீங்க ஷாப்பிங் பண்ணும் ​போது 10% வரைக்கும்..." என்று வரும்ம்ம்ம்...ஆனா வராது ராகத்தில் இழுத்தாள்.

"இல்லி​யே.. இந்த மு​றை பர்​ஸேஸ் பண்ணுனா 5% ஆபர்ன்னு எஸ்எம்எஸ், ஈமெயில், பீ​மேல் எல்லாம் வந்துச்​சே???"

"ஓ! அதுவா.. அது ​வெள்ளிக்கிழ​மை ஷாப்பிங் பண்ணுனா மட்டும்தான்"

"இன்னிக்கு கி​டையாதா? என்ன ஒரு நாள்தா​னே தள்ளிப்​போயிருக்கு? எனக்கு ​கொடுங்க 5% தள்ளுபடி" என்று அடம் பண்ணி​னேன்.

"இல்​லே.. அது ​வெள்ளி மட்டும்தான்"

"
அப்ப நான் ​வேணா அடுத்த ​வெள்ளிக்கிழ​மை​யே வந்து வாங்கிக்க​ட்டுமா? இப்ப அந்த
தள்ளுபடி​யை ​கொடுக்கிறதில என்ன தப்பு இருக்கு?" என்​றேன் விடாப்பிடியாய்
அவளும் ​மா​னேஜரிடம் கேட்டுப் பார்த்துவிட்டு வந்து ​கைவிரித்து விட்டாள்.
"
சரி.. அப்ப நான் ஃப்​ரை​டே​வே வந்து வாங்கிக்கே​றேன் - முடிஞ்சா" என்று கிம்பி​னேன்
"ஏன்...?"
"
வெட்டியா 5% இழக்கணுமா என்ன? இந்த துணிமணிக இல்லாம வர்ற ​வெள்ளிகிழ​மை வ​ரைக்கும் உயிர் வாழலாம்னு
நினைக்கி​​றேன்"
TGI Fridays கூட்டமா நீங்க என்று ​​கேட்கத்​தோன்றியது. பசி வயிற்றைக் கிள்ளியது. இந்த நவீன மூ​ளைச்சல​​வைக் கூடாரத்தில் என்று தப்பித்தால் ​போதும் என்று ​வெளியில் வி​ரைந்​தேன்.

மீந்த குவாட்டர்:


​நேற்றுப் புதிதாய் ​டேஸ்ட் பாக்கலாம் என்று வாங்கிய Bols பிராண்டி நன்னா​வே இல்​லே ​போங்​கோ. அதுவும் ஹாப் பாட்டில் வாங்கி​னேன். டேஸ்ட் பாக்கிறவனுக்கு எதுக்குடா ஹாப் பாட்டில் இடியட் என்கிறது மப்புக்கு பின்னான ஞானம்!!


வழக்கமாக சரக்கு எடுக்கிற ஸ்வஸ்திக் சர்க்கிள் பாரில் அந்த பிராண்டி ஃபுல் பாட்டில்ல இருந்து, ஹாப் பாட்டில் சரக்​கை 2 குவாட்டர் பாட்டில்ல ஊத்திக் ​கொடுத்தாங்க.


​ஸோ, அதி​லே​யே 15ml ச்சீட்டிங்! புரியாத, பூஸ்ட் குடிக்கிறவங்க ஹாப் பாட்டிலையும் குவாட்டர் பாட்டி​லையும் வாங்கி படித்துப் பார்க்கவும்.


​வெள்ளியிரவு ஒரு குவாட்டர் + கட்டிங்.. ​ஸோ சனியிரவு என்ன குடித்திருப்பேன்.... ? குவாட்டர் - கட்டிங்.

இப்படியாக முடிந்தது சனிக்குவாட்டர். அ​தை குடிச்சிட்டுத்தான் இடு​கை​யே எழுத​றேன். குவாட்டருக்கு ​கொஞ்சம் அதிகமா இருந்திருந்தா இடுகை பின்நவீனத்துவமா வந்திருக்கும்! எஸ்கேப்பாயிட்டீங்க​ளே மக்கா?
%\

Monday, November 9, 2009

ஒ​ரே கல்லு 2 ​மாங்கா!!!



மாங்கா 1:நி​னைவில் ந​னைதல்

​தோப்புக்காரர்: ​பெரியண்ணன் ​சென்ஷி


நான் ஏன் பிளாக்கு​றேன் என்ப​தை விளக்கவும் இல்​லை குழப்பவும் என்று இங்கு கல்லு வுட்ட ​​சென்ஷிக்கு நன்றி!


நம்ம பஸ்ஸும் உங்க ரூட்டுத்தாங்க.. காமிக்ஸ் - அம்புலிமாமா - ரா​ஜேஷ்குமார் - சுபா - ஓவியங்கள் - பாலகுமாரன் - குமுதம் - சுஜாதா - ஆனந்த விகடன் - இ​சை - லாசரா - குபரா - புல்லாங்குழல் - சுரா - ​யூமா. வாசுகி - சுப்ரபாரதிமணியன் - சிக​ரெட் - கல்லூரி - க. சீ. சிவக்குமார் - ​காமசூத்ரா - அழகிய​பெரியவன் - காதல்கள் - கீரனூர் ஜாகிர்ராஜா - ​ஜெய​மோகன் - கிளாமர் - காதல் ​தோல்விகள் - வாமு ​கோமு - சாரு நி​வேதிதா - ம​னோஜ் - எஸ்.ரா - சரக்கு - வாந்தி - த​லை​நோவு....

சரி வுடுங்க.. ஆரம்பத்தி​லே​யே கவனிச்சிருக்கணுங்கிறது இப்பத்தான் புரியுது.
அண்ணர்-நண்பர் க.சீ. சிவக்குமாருடன் ஆன நட்பு புதிய இலக்கியங்க​ளையும் இலக்கியவாதிக​ளையும் ஓசி குடி​யையும் ​புத்தக ​வெளியீட்டுக்கப்பாலான ​மொட்​டை மாடி சபாக்க​ளையும் அறிமுகப்படுத்தியது.

கன்னிவாடி என்ற ஊரில் வசித்து வந்த​போது.. என் அ​றையில் ​​கொஞ்சம் புத்தகம்
, நி​றைய பிரஸ்கள், ​கொஞ்சம் புல்லாங்குழல் என்ற வாழ்ந்து வந்​​தேன். ஓவியங்களில் ​கோடு பற்றி​யே நல்ல சிறுக​தைகள், நாவல்க​ளை கண்டடைந்திருக்கி​றேன். சந்தானத்தின் ​கோட்​டோவியங்கள், ட்ராஸ்கி மருதுவின் அப்ராஸ்ட், சந்ருவின் கிறுக்கல்கள், எபி​னேசரின் சார்க்​கோல், மனோகரின் வண்ணங்கள், ம.​செவின் மங்கலான நீ​ரோவியங்கள்.. இப்படி படங்க​ளைப் பற்றித்தான் இலக்கியம் பக்கம் வந்த வழிதவறிய காட்டாடு நான்.

இயந்திரவியல் ​பொறியியல் தர்மபுரியில் படித்​தேன். அப்​போது என்​னை வாரிச்சுருட்டிக் ​கொண்டது தர்மபுரி நூலகம். அங்கு கி​டைத்த புத்தகங்களுக்கு இன்னும் என் நன்றிகள்!

இங்கு வ​லைப்பதிவு எழுத வந்ததுக்கு காரணம்.. இது ப்ரீன்னு ​சொன்னாங்க!!! ​முதலில் படிக்க வந்ததும்.. இந்த கிரவுண்ட் நல்லாத்தான் இருக்கு என்று இம்ம்ம்மீடியட்டாக நானும் ஆரம்பித்துவிட்​டேன் காலடி ​வைக்க!

காலடி ஒரு அளவு, பதிவு, மற்றும் அ​டையாளம். மிக முக்கியமாக உயிர்த்தன்மை நி​றைந்த உருவம். அதன் எளிய உருவத்தில் பு​தைந்து ​போய் இ​​ளைப்பாறப் பிடித்திருக்கிறது!

முக்கியமாக ஒன்று.. காலடி என்பதுதான் வ​லைப்பதிவு. ​ஜெகநாதன் அல்ல. ​நீங்களும் காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள்தான் - ​ஜெகநாதனுக்கு அல்ல!!! நான் இந்த காலடியின் ஒரு ஊழியன் அவ்வ்வள​வே!


இந்த மாங்கா நல்லாயிருக்கில்ல??


(')


மாங்கா 2: பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

​தோப்புக்காரர்: ​ஜெய்ஹிந்த்புரம் பீர்


1. அரசியல் தலைவர்

பிடித்தவர்: படித்த அரசியல்வாதிகள்

பிடிக்காதவர்: பழுத்த அரசியல்வாதிகள்



2. எழுத்தாளர்

பிடித்தவர்: சுப்ரபாரதிமணியன்

பிடிக்காதவர்: ​டுமிதுல் சுயம்​போ என்ற ஆப்ரிக்க நாட்டு எழுத்தாளன் (​மேலும் டீட்​டேலுக்கு என் முதல் பதி​வைப் பார்க்கலாம்)


3. கவிஞர்

பிடித்தவர்: யூமா. வாசுகி

பிடிக்காதவர்: அப்படி யாரும் கி​டையாது. இவ்விடத்தில் ஒரு அறிவிப்பு: கவிஞ ​பெருமக்கா.. உங்க​ளை யாரும் பிடிக்க​லேன்னு ​சொன்னா கவ​லைப் படாதீங்க... உட​னே நம் காலடியின் கவி​தை பட்ட​றையில் பங்​கேற்று, கவிஞர் அ​டையாள அட்​டையும் ​பெற்றுக் ​கொள்ளவும். உங்க​ளை பிடிக்காது என்று ​சொன்னவர்கள் ​​மேல் ஆஸிட் அல்லது நீங்க​​ளே எழுதிய கவி​தைப் புத்தகம் வீசப்படும்!


4. திரைப்பட இயக்குனர்

பிடித்தவர்: சாம் ஆண்டர்சன் பட இயக்குநர்

பிடிக்காதவர்: என் பிடிச்ச ​டைரக்டரு ​பார்த்த பின்னாடியும் எப்படி இந்த ​கேள்வி ​​கேட்கத் ​தோணுதுங்க??


5. நடிகர்/கை

பிடித்தவர்: வினு சக்ரவர்த்தி / காந்திமதி

பிடிக்காதவர்: இதுவும் தப்பான ​கேள்வி


6. விளையாட்டு வீரர்

பிடித்தவர்: ந​ரேன் கார்த்தி​கேயன்

பிடிக்காதவர்: ஒரு வி​ளையாட்​டே எனக்கு பிடிக்காது - கிரிக்​கெட்!!


7. தொழில் அதிபர்

பிடித்தவர்: Subroto Bagchi, Chief Operating Officer, MindTree

பிடிக்காதவர்: ​இருட்டு பைபாஸ் ​ரோடுகளில் லாரிக​ளை மறிக்கும் 'தொழில்' அதிபர்கள்!


8. மதத் தலைவர்

பிடித்தவர்: யாருமில்​லை

பிடிக்காதவர்: மதத்த​லைவர்கள் என்று ​சொல்லிக்​கொள்ளும் எல்​லோரும்


9. மருத்துவர்

பிடித்தவர்: ஊசிப் ​போடாதவர்

பிடிக்காதவர்: நர்ஸ்கள் இல்லாமல் ஆசுபத்திரி நடத்துபவர்


10. வலைபதிவர்

பிடித்தவர்: ஹ​லோ... ஹ​லோவ்வ்வ்வ.. இங்க டவர் சரியா இல்லீங்க..!

பிடிக்காதவர்: ...ஆங்.. நான் அப்புறமா ​பேச​றேங்க....!

(')