Wednesday, October 21, 2009

என்றும் சிநேகிதிகள்..!

15 அக்டோபர் 2009. வியாழக் கிழமை. 5:15க்கு பெங்களூரிலிருந்து கிளம்புகிற எர்ணாகுளம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸைப் பிடிக்கின்ற உத்தேசத்தில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அடைந்தேன். பேக்-கேட் வழியாக வேக வேகமாய் பிளாட்பார்ம் 5ல் ட்ரெயினைத் தேடி நடந்தேன்.

வழியெங்கும் பூத்தூவி இறைத்தாற் போன்று சேரள நாட்டிளம் பெண்கள். ஜீன்ஸ், டீஸ், ஷார்ட் குர்தா ஸ்னீக்கர்ஸ் கால்கள் என்று அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட்டாக ஜொலித்தார்கள். செம கூட்டம் வேறு. தீபாவளி சமயம் ஆயிற்றே!

நிதானமாக 6:30க்கு வந்தது ட்ரெயின். S11லில் இருக்கை - ஐ! ஜன்னல்!!

எனக்கு எதிர் சீட்டில் ஒரு பெண்.. சிவப்பு.. நீளமான மூக்கு. யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தாள் - ஐ! தமிழ்!!

பக்கத்து இருக்கைகளில் யாரும் இல்லை.

அமைதியாக காதில் ஸ்பீக்கரை மாட்டிக்​கொண்டு ஜன்னல் பக்கமாக முதுகைச் சாய்த்து காலை நீட்டிக்​கொண்டாள். அதற்கு முன் என் சீட்டில் கால் வைத்து இளைப்பாறிக் கொண்டிருந்தாள்.

குட்..! இந்த பாயிண்ட்ல இருந்து நம்ம வேலையை ஆரம்பிச்சிர வேண்டியதுதான் என்று, மெலிதாய் சிரிப்புக் கூட்டி,

"இட்ஸ் ஓ.கே. நீங்க இப்படி திரும்பி என் சீட்டிலேயே கால் வச்சுக்கோங்க. நோ ப்ராப்ளம்" என்றேன் துய்ய தமிழில்!

அவளும், "பரவாயில்லே. நான் இப்படியே உக்காந்துக்கறேன்" என்றாள்.

சரியென்று தலையாட்டிவிட்டு தேமேஎன்று உட்கார்ந்து விட்டோமென்றால்.. ஈரோடு போகிறவரைக்கும் போர் பொடனியில் அடிக்கும்.. (அப்புறம் நாம் பதிவர் வேறு, சும்மா வரலாமா?) விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டே,

"இல்ல.. நீங்க இங்க காலை நீட்டிக்கிட்டீங்கன்னா, நான் அங்க காலை நீட்டிக்குவேன்" என்று ஆரம்பித்தேன்.

ஓ பரஸ்பர கால் நீட்டலா என்ற மாதிரியான சிரிப்புடன், என்னைப் பார்த்தவாறு திரும்பி என் பக்கம் காலை நீட்டிக் கொண்டாள். ஐயாவும்!
இன்னும் காதிலிருந்து ஹெட்போனைக் கழட்டவில்லை. அதையும் பாத்துடுவோம் என்றவாறே..

"ட்ரெயின் ரொம்ப லேட்.." என்றேன் மிக மெதுவான குரலில்..

வேலை செய்யுது.. ஹெட்போன் அகற்றப்பட்டு விட்டது. அசால்ட்டான குரலில்,

"ப்ச்.. ஆமா, ஒன் அண்ட் ஹாப் அவர் லேட்" என்றாள்..

அப்புறம் அப்படியே பேச்சு வளர்ந்தது.. ஆட்களும் வர ஆரம்பித்து விட்டார்கள். சுற்றிலும் தமிழ் குரல்களாய் அந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் ஒலித்தது ரொம்ப ஆச்சரியம்.

எதிர் சீட்டுப் பெண்ணிடம், அவள் கம்பெனி, தங்கியிருக்கும் ஹாஸ்டல், ​பாஸ்டைம், தீபாவளி ஷாப்பிங், க்ளோபல் க்ரைஸஸ் (இந்தமாதிரி உலகமகா டாப்பிக் எல்லாம் ஜாஸ்தி பெண்களிடம் பேசக்கூடாது.. அப்புறம் செயினைப் பிடிச்சு இழுத்துருவாங்க; நான் அவளை பேசவிட்டுவிட்டு, உன்னிப்பா கேட்டுக்கிட்டு வந்தேன்) ஆபிஸ், பெங்களுர் ட்ராபிக் என்று ஜோராகப் போய்க் கொண்டிருந்தது.

பக்கத்தில் ஒரு சுவாரஸியமான தம்பதியினர்.. குண்டாய் கண்ணாடி போட்ட கணவர், ஒல்லியாய் படபடப்பாய் மனைவி, கணவரின் கண்ணாடியை விட கொஞ்சம் தடிமனாய் கண்ணாடி அணிந்த அவர்கள் பையன் - 7 வயது இருக்கும். மனைவி சளசளவென்று ஒரே பேச்சு.. குஷியான பேச்சு.. அனைவரிடமும் சுலுவாய் பழகிவிடுவார் போலிருந்தது.

கணவனிடம்,
"பாலா.. ப்ப்ப்ப்ளீஸ்மா.. ஐ-பாடை நான் கொஞ்ச நேரம் வச்சுக்கிறேனே... நான் என்னோட ஃ​போல்டரை மட்டுந்தான் கேப்பேன்.. ப்ப்ப்ளீஸ்ஸ் பாலா.." என்பார்.

ஐ-பாடில் பாட்டுக் கேக்கும்போது அவரின் முகத்தைப் பார்த்தாலே அது என்ன பாட்டு என்று நமக்கு​தெரிந்து விடும்.. அப்படி முகத்திலேயே ஒரு கதகளி தெரிக்கும்.. ஒருசமயம்..

"பாலா.. அந்திமழை பொழிகிறது.." என்று அட்சரம்பிசகாமல் பாடிக் காட்டிவிட்டு "இது எஸ்பிபி தானே?" என்றார்..

கணவன் பதில் சொல்லும் முன், அவரின் பக்கத்து சீட்டுக்காரர்...

"ஆமாம்.. எஸ்பிபி பாட்டு, இளையராஜா மியூசிக்கு" என்று உற்சாகமானார்..

இந்த சமயத்தில் இன்னும் இரண்டு வாலைக்குமரிகள் எங்கள் (எப்படி ​சொந்தம் கொண்டாகிறேன்??) கம்பார்ட்மெண்டில் நுழைந்தார்கள்..! அமைதியாய் உட்கார்ந்து கொண்டார்கள்.. நானும் என் எதிர் சீட்டுத் தோழியும் (!?) அளவளாவுதைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள்.

ஒருவள் கருப்பு (ஓகே மாநிறம்), நல்ல உயரம், நேர்த்தியான உடல்வாகு. இன்னொருவள் நல்ல சிவப்பு - Must be a North Indian.

ஏதோ ஒரு இடைச்செருகலில் அவர்கள் பேச்சிலேயும் உள்நுழைந்து விட்டோம்.. அப்புறம் நம் தம்பதியினர் எங்கள் ஜன்னல் சீட்டை வாங்கிக் கொண்டு உணவருந்த ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் இந்தப்பக்கம் தள்ளப்பட்டேன். எதிரில் பழகிய தோழி.. பழகும் தோழிகள் இருவர். ட்ரெயின் பங்காருப்பேட் தாண்டி ஜோலார்பேட் விரைந்து கொண்டிருந்தது (அப்புறம் சேலம்.. then ஈரோடு)

எல்லாம் சாப்ட்வேர் கோஷ்டிகள்தான்.. அவர்களின் ஸ்கூல் கதை, சீரியல்கள், சினிமா, ம்யூசிக் என்று சகல தரப்புகளுக்கும் நம் வசம் மேட்டர் இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால்.. விளக்கை அமுத்திவிட்டு படுக்கப் போய்விடுவார்கள்.

உதாரணத்துக்கு, டிவி சீரியல் ரொம்ப போர் என்று யாரவது ஆரம்பிப்பார்கள்.. நாமும் உடனே பூம்பூம் மாடுமாதிரி தலையாட்டிவிடக் கூடாது,

"ஆமாங்க.. ஆனா பாருங்க... சன்டிவியில ஒரு சீரியல் வருது.. கொஞ்சம் வித்யாசமா.." என்று மண்டையை சொரிய ஆரம்பிக்கணும் (சீரியல் பேர் நல்லா தெரிஞ்சிருந்தாலும்..)

உடனே தோழிகளிடம் ஒரு இன்வால்வ்மெண்ட் தெறிக்கும்...

"எத்தனை மணின்னு சொல்லுங்க" என்பார்கள்

"8 மணி" என்று சொன்னதும்,

மூவரில் யாராவது ஒருத்தி (மூவருக்குமே பேர் தெரிந்திருந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டார்கள்..!!)

"ஆங்... திருமதி. செல்வம்" என்று உடைப்பாள்

இந்த இடத்தில் நாம் கொஞ்சம் சிரித்த முகத்தோடு இப்படி பேசலாம்..

"வெல்டன்.. கரெக்ட்..! திருமதி. செல்வம்தான்.. "

"ஓகே அதுல என்ன வித்தியாசம்?"

"எல்லா தமிழ் சீரியலிலும்.. ​பெண்களைதான் முக்கியமான கேரக்டரா, நல்லவங்களா காட்டுவாங்க.. இந்த ஒரு சீரியலில் மட்டும் ஒரு ஆம்பளைய நல்லவனா காட்டுறாங்க" என்று ஒரே போடாய் போட்டுத்தள்ள ​வேண்டியதுதான்.

அப்புறம் சிலசமயம் கவன ஈர்ப்புத் தீர்மானம் எல்லாம் கொண்டுவர ​வேண்டியிருக்கும். உதாரணமா விருதுகளைப் பத்திப் பேசிக்கிட்டு இருப்பாங்க,
"எப்படி இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்க?" நாம்,
"பெப்சி உமா கூட டாக்டர் பட்டம் வாங்கியிருக்காங்க!" என்று ஈர்க்க வேண்டியதுதான்!

பெப்சி உமாவா?? டாக்டர் பட்டமா? என்று ஆச்சரியமாய் திரும்பி உட்கார்வார்கள்.

இப்படியே சேலம் நெருங்கும்வரை போய்க்கொண்டிருந்தது. சேலத்திற்கு அரைமணி நேரம் முன்பு வந்து எனக்கு வைத்தார் ஆப்பு - டிடி!
என்னோட 57வது சீட்டில் இன்னொருவரை வந்து உட்கார வைத்து விட்டு அவர்பாட்டுக்கு போய்விட்டார். டிடி-யைப் பிடித்து என்ன ஏது என்று விசாரித்தால்... 57 அவருடையது என்கிறார்.


டிடி திரும்பவும் சார்ட்டைத் தூக்கிக் கொண்டு வந்தார். என் கண்முன்னாடியே என் பிஎன்ஆர் எண்ணைத் துழாவினார்..

"இந்த நம்பர் இல்லியேப்பா..!" என்றார்.

(நாம் இந்த மாதிரி தருணங்களில்தான் ரொம்ப நிதானமா, இதெல்லாம் எனக்கு சாதாரணம் என்று பதட்டப்படாமல், முகத்தில் புன்னகையை நழுவவிடாமல் நடந்துக்கணும்.. உள்ளுக்குள்ளே ஜெகனுக்கு மாரியாத்தா சாமியே வந்திருச்சு.. இருந்தாலும் வெளிய முகத்தில டிஸ்கோதான் போடணும்! இதுதாம்பா லாஜிக்கு!)

எனக்குப் பகீரென்றது... நான் ஒருமுறை பரிசோதித்தேன்.. சிக்கிவிட்டது.. தனியாக கட்டம் கட்டி என் பெயர் இருந்தது (புதுசா இருக்கே?).
டிடிக்கு அப்புறம்தான் தெரிந்தது.. நல்ல முழி!

"அடடடடடடா.. உங்களை பி2க்கு, ஏஸி கோச்சுக்கு அப்கிரேட் பண்ணியிருக்காங்க" என்றார்.

"பரவாயில்ல சார்.. சேலம் வந்திருச்சு.. நான் ஈரோட்டில இறங்கப்போறேன்.. இங்கியே இருந்துக்கிறேனே??" என்றேன்.

தோழிகள் என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"இல்லீங்க! இதுக்கு ஆள் இருக்காங்க.. நீங்க அங்க போயி படுத்துக்கோங்க.. இன்னும் ஈரோடு வர டைம் இருக்கு" என்றார்.

ஐ-பாட் அம்மா,

"ஹே... ஐயாவுக்கு ஏஸிக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு.. ட்ரீட் கேளுங்கப்பா..!" என்று குதூகலித்தார்... எனக்கோ வருத்வருத்தமாய் இருந்தது..

இவர்களை விட்டு பிரிகிறோமே என்று (யெஸ் பாஸ், யாரிடமும் எப்போதும் ஒரு இன்வால்வ்மெண்ட்டோடு பழகுங்கள்; பெண்கள் தேடுவதும், எதிர்பார்ப்பதும் அதுதான்)

மெதுவாய் பேக்கை எடுத்துக் கொண்டு பி2க்கு கிளம்பினேன்.. அப்போது ​ஒரு தோழி சொன்னாள்,

"ஈரோடு வர்றதுக்குள்ள, ஏஸி கோச்சுக்கு போய் சேந்துடுங்க"

மனசு விட்டு சிரித்து விட்டு, அனைவரிடமும் டாடா பைபை சொல்லிவிட்டு கிளம்பினேன்.

4 மணிநேரம் பேசிக்கொண்டு வந்தும்.. யாரிடமும் பேர் கேட்டுக் கொள்ளவில்லை.. என் பெயரும் சொல்லவில்லை. அது தேவையில்லை என்றும் தோன்றுகிறது.

Thursday, October 8, 2009

உங்களுக்கு வடை கிடையாது!

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு: No Donuts for you! இதை விளக்கறதுக்கு முன்னாடி டோனட்-ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கிறது மொக்கியம்!

டோனட்டை doughnut, donut இப்படி, எப்பிடி வேணாலும் வளைச்சு வழைச்சு உச்சரிக்கலாம். பிரச்சினையில்லை.. டோனட் ஒரு வளையமான, பொரிச்ச, மாவில செய்யற தின்பண்டம்.. சுருக்கமா நம்மூரு ஓட்டை உளுந்து வடை!

நோ டோனட்ஸ் ஃபார் யூ-ன்னா, உங்களுக்கு ஒரு விருதும் கிடையாது, நயா பைசா கூட கிடையாது, ப்பெப்பப்பே என்று அர்த்தம். ஆக, உங்களுக்கு வடை கிடையாதுன்னா உங்களுக்கு ப்பெப்பப்பே என்று கொள்க. இதை வடை போச்சே என்று கூட சொல்லலாம்!! பட், அது சுய புலம்பல் வகை என்று அறியப்படுகிறது.

அப்படி எந்தெந்த விஷயங்களுக்​கெல்லாம் நமக்கு வடையில்லாம போகுதுங்கிறதை ஆராயலாமா?

Ø

பயங்கர ஸ்பீடா நாலுகால் பாய்ச்சல்ல ஓடி, பஸ்ஸைப் பிடிச்சாலும்.... அது நாம போக வேண்டிய பஸ் இல்லேன்னு தெரிஞ்ச பின்னாடியும்... அமைதியா வேர்வையைத் தொடச்சிக்கிட்டு, நெக்ஸ்ட் ஸ்டாப் ஒண்ணு கொடுங்கன்னு டிக்கெட் எடுக்கிறப்போ.... (நீங்க ஓடின ஓட்டதுக்காக...) உங்களுக்கு வடை கிடையாது!

Ø

மேல கீழ லெப்டு ரைட்டு யூ டர்ன் இஞ்சி மரப்பான் எல்லாம் போட்டு இண்டர்வியூவுக்கு தயார் பண்ணியிருந்தாலும்... ஏன் இப்ப இருக்கிற வடையை.. ஸாரி வேலையை விடுவேன்னு அடம்பண்ணறீங்க என்ற பிசாத்து கேள்விக்கு.. நீங்க முழிக்கும்​போது... உங்களுக்கு வடை கிடையாதுங் சார்!

Ø

எஸ்எம்எஸ்-லேயே பிரண்ட்ஸ்களை வரவழைச்சு, சாமர்த்தியமா ஒருத்தன் தலையில பில்லைக் கட்டி, புல், வாட்டர் பாட்டில், பியர், முறுக்கு, மிக்ஸர், கடலை, ஊறுகாய், சரக்கு கலக்கிறதுக்கு(ன்னே) ஒரு பேனா இப்படி ஜபர்தஸ்தா எல்லாம் ரெடி பண்ணியிருந்தாலும்... மூணாவது ரவுண்டை முடிச்சிட்டு, முட்டிப் ​போட்டு ஒக்காந்து நீங்க மட்டும் தனியா... ஓய்ய்ய்ய்ய்.. ஓவ்வ்வ்வ்வ்வோவ் என்று ​பைக்கை ஸெல்ப்-ஸ்டார்ட் பண்ணினாக்க.... ​நோ வடை ஃபார் யூ!

Ø

ரைட்டு.. சரக்குப் ​போட்டாச்சு.. மம்மி-டாடிக்கிட்ட இருந்து தப்பிக்கணுங்கிறதுக்காக.. ஹால்ஸ், ஜிஞ்சர் ஹால்ஸ், க்ளோரெட்ஸ், ஆர்பிட், நிஜாம் பாக்கு, வாழைப்பழம், புதின் ஹரா, பூமர் சூயிங் கம், கொய்யா இலை (!?) இப்படி மாடு மாதிரி எதைஎதையோ அசைப்​போட்டுக்கிட்டு கனகச்சிதமாக வூட்டுக்குப் ​போயி... காலிங் பெல்லை அமுக்கி விட்டு, மம்மீ வந்து திறப்பதற்குள்... நின்றவாக்கில்.. கதவிலேயே தலையை சரித்து பிளாட் ஆகி விட்டால்.. ​ரொம்ப ஸாரி.. உங்களுக்கு வடை கிடையாது!

Ø

பக்கத்துத் தெரு ஃபிகரை மடிக்கணுங்கிறதுக்காக, அந்த தெரு ஸ்கூல்மெட்டைத் தேடிப் பிடிச்சு ப்ரெண்ட் பண்ணிக்கிட்டு, அப்பிடியே பக்கத்துத் தெரு ப்ரெண்ட் சர்க்கிளை இன்னும் கொஞ்சம் 'எக்ஸ்டென்ட்' பண்ணுனா பிற்காலத்தில ஒடம்புக்கு நல்லதே என்று.. நீங்கள் அந்தத் ​தெரு இந்து முண்ணனி அமைப்பினர், விஜய் ரசிகர் மன்றத்தினர், பழனியாண்டவர் காவடிக்குழு, பால்காரர், டீக்கடைக்காரர், பக்கத்துவீட்டுக்காரர்,​மேல்வீட்டுக்காரர் என்று பயங்கர ப்ரெண்ட் பண்ணி... கடைசியில் ஃபிகரின் அண்ணனையே ப்ரெண்ட் பண்ணி... அந்த அண்ணன் உங்களையும் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயி.. பிகர் கூட அறிமுகம் எல்லாம் ஆன பின்னாடி... உங்கள் தெருவுக்கு வந்து, நண்பர்களிடம் "ஆயிரந்தான் இருந்தாலும் அவ என் ப்ரண்ட்டு தங்கச்சிடா. டாவு கட்ட மனசு வர்லே!" என்று ​பேக்-ஃபுட் போட்டால்... உங்களுக்கு வடைன்னு எழுதிக்கூட கிடையாது!

* * *

ஓகே. நான் இந்த ஸ்டாப்பிலேயே இறங்கிக்கிறேன்... நம்ம காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள்.. இதை இன்னும் கன்டினியூ பண்ணலாம். உங்களுக்குத் தோணற நல்ல உவகி-வை பின்னூவா அனுப்புங்க. யாருது பெஸ்ட்டுன்னு பாப்போம்.

நானே அல்ரெடி மொக்கைக்கு சக்க டிமாண்ட்ல முழி பிதுங்கி திரியறேன்.. இதுல உன் பதிவுல வந்து பின்னூவா என் மொக்கையை வேஸ்ட் பண்ணனுமான்னு நினைக்கிற ரசிகக் கண்மணிகள்.. அவங்க பதிவிலேயே உவகி-யைப் போட்டுத் தாக்கலாம் (அப்ப, எனக்கு வடை கிடையாதா???)

* * *

Thursday, October 1, 2009

உரலுக்குள் த​லை

ஐ​யோ.. ஐ​யோ.. உங்க​ளை இப்படிக் ​கெடுத்து வச்சிருக்​கேன்னு ​நெனச்சா என்னை​யை நா​னே அடிச்சுக்கலாம்னு ​தோணுது!! தலைப்பைப் பார்த்து தப்பா ​நெ​னைக்காதீங்க. நீங்க ​நெனக்கிற மாதிரி அஜால்குஜால் எல்லாம் ​கெடையாது. ஆமா! இது நம்ம பா.ராஜாராம் கொடுத்த வரி!

சரி.. சரி.. இ​தோட இவன் சவகாச​மே ​வேணாம்னு எஸ்ஸாகக் கூடாது. ​கொஞ்சம் அட்டணங்கால் ​போட்டுக்கிட்டு ​சேர்ல சாய்ஞ்சுக்கிட்டுப் படிச்சுத்தான் பாருங்க​ளேன்.

ஆங்..! ​சொல்ல மறந்துட்​டேன் இது வந்து ஒரு ​​தொடர்பதிவு..!

என்னா ​தொடர்ர்ர்ர்??

ஐஸ்வந்தி ஆரம்பிச்சு.. ​நெப்​போலியன் பா. ராஜாராம் வ​ரைக்கும் வந்து இப்படி நம்ம காலடியிலும் வந்து ந​னைச்சுப்​போட்ட அலைதான் இது..

எது???

பீட்டரு.. லாக்கரு.. ​டக்கரு.. மேட்டரு............. அப்படின்னு ​சொன்னா பதி​வை ஆரம்பிச்ச ​ஜெஸ்க்​கே பிரியாது!!! ​ஸோ.. ​நோ வால்.. ஒன்லி பால்!!

​தொடர்பதிவு த​லைப்பு இதுதான்பா..

கடவுள், பணம், அழகு, காதல்

நல்லாத்தான் இருக்கில்​லே?

நான் முதல்ல இந்த ​லை​னை வச்சு ஒரு சிறுக​தை ​ரெடி பண்ணலாம்னு இருந்​தேன்.. த​லைப்​பை ​கொஞ்சம் ​வேகமா படிச்சுப் பாருங்க. இந்தியன், அந்நியன், சிவாஜி, கந்தசாமி காதறுந்த சாமி பட​மெல்லாம் ஞாபகத்துக்கு வரலே?? நானும் தமிளன்தான்கிறதால எனக்கும் அந்த கிறுகிறுப்பு வந்துச்சுதான். பட், கண்ட்​ரோல் பண்ணிக்கிட்​டேன். சிறுக​தை தமா​ஷெல்லாம் இல்லாம ஒரு பதிவு ​போடலாம்னுட்டு இருக்​கேன்.

வக்காளி.. அப்பிடி என்னதாண்டா கழட்ட ​போ​றேன்னு உங்களுக்கு இருக்கிற ஆர்வம் (!??) அப்ப்ப்பிடி​யே 'எனக்கும்' இருக்கு பாஸ்!! ஏன்னா 'எனக்கும்' இந்த ​லைன் வ​ரைக்கும் என்ன எழுதப்​போறம்னு ​எனக்​கே ​​தெரியாது. ​டோண்ட் லாஃப்! (பா.ராவுக்கு இப்ப​வே ​கெட்ட ​கோவம் வந்திருக்கும்.....)

​ரைட்... ​ஞாபகம் வச்சுக்​கோங்க.. நோ வால்.. ஒன்லி பால்!! ஓ​கே?

கடவுள்:

ஆஞ்ச​நேயாய நமஹ
மஹாவீராய நமஹ
ஹனும​னே நமஹ
மாருதாத்மஜாய நமஹ
தத்வத்ஞாயப்ரதாய நமஹ
என்று தினந்​தோறும் கும்பிடுவன் நான். ஆனால் என் அப்பா ​சீரியஸ் ​பெரியார்வாதி (என்று நி​னைக்கி​றேன்!) இதுவ​ரைக்கும் 14 மு​றை சபரிமலை ​போய் வந்திருக்கிறார் (குருசாமீ??) . என்னா காமடி.. ஏங்ங்?? இப்படி ஒரு வித்யாசமான அட்மாஸ்பியரில் வளர்க்கப் பட்டதால் (வளர்ந்ததால்..) கடவுள் ஒரு காமடியாகி ​போய்விட்டார் எனக்கு! ஆனால் தினமும் ரசிக்க ​வைக்கும் காமடி.

சமீப காலங்களில் யாராவது "Do u believe in God?" என்று ​கேட்டால், "Yes! Just like smoking!" என்று ​சொல்லி வருகி​றேன்.

ஆஞ்ச​நேயாய நமஹ....

பணம்:

நான் வுடற பீட்டரு, பல்லாங்குழி​யெல்லாம் பாத்துட்டு நீங்க என்னென்ன​வோ ​நெனச்சிருப்பீங்.. பட் ஏக்சுலா என்கிட்ட நயா ​​பைசா ​கெ​டையாது... அப்படின்னும் ​சொல்ல முடியாது... ​வாரிக்​கொடுக்கிற அளவுக்கு வாய்ச்சிருக்கின்னும் ​சொல்ல முடியாது. நான் ஒரு உல்லாசி! பணத்தை அதன் இடம் பார்த்துதான் புரிந்து ​கொள்​​வேன். என்னடா ​டோன் திடீர்னு மாறுதேன்னு ​யோசிக்கறீங்களா?? ​ஹே​ஹே!! ​சொல்​றேன்; அதாவது, உங்கிட்ட 1000 ரூபா இருக்குன்னு வச்சுக்குங்க.. நீங்க சின்னசிலுக்குவார்பட்டிக்குப் ​போயி ​தெரியாத நாலு ​பேர கூப்பிட்டுக் கூட, ​தெம்பா டாஸ்மாக் பார்ட்டி ​வெக்கலாம். ஆனா 10000 ரூபா (​சைப​ரை நல்லா எண்ணுங்கப்பா) இருந்தாலும் இந்த ​பெங்களூருல நல்லா ​தெரிஞ்ச ​​4 கொலீக்ஸைக் கூப்பிட்டுக் கடலை மிட்டாய் கூட வாங்கித்தர முடியாது. அதுதான் இடம், பணம், ஏவல்!!
​ஸோ பணத்​தை நான் அது கி​டைக்கிற இடம்பாத்துதான் மதிக்கிறது மற்றும் மிதிக்கிறது!!!

அழகு:

மவ்​னே.. இனி நீ இது பத்திக் காண்டியும் எழ்திப்பாரு........
ஒம் மூஞ்சி​லே ஆஸ்ஸ்ஸிட் அடிக்கி​றேன்னு, ​நெ​றைய ​பேரு (ஐ மீன் நீங்க எல்லாரும்...!!!) முடிவு பண்ணியிருக்கிறதா தகவல்.. ​ஸோ.. அடுத்த பாயிண்ட்..

காதல்:

இதுதாம்பா நம்ம பாயிண்ட்... ​அதாவது விஷயம்னு ​சொல்ல வந்தேன்.

இரண்டாங்கிளாஸ் படிக்கும் ​​போது யாருக்காவது லவ் வந்திருக்குமா?? ​எனக்கு வந்துச்சு.. ஷர்மிளாங்கிற புதுசா ஜாயின் பண்ணுன ​​பொண்ணு ​மேல (எனக்கு மட்டும் இல்ல..) இப்ப வரைக்கும் இந்த முகம் ம​றையாம மனசுல இருக்கு. ஒரு ​பென்சில் ​பேப்பர் (+​கொஞ்சம் சரக்கு) ​கொடுத்தா அந்த முகத்​தை வரைஞ்சுடு​வேன்னு ​தோணுது. அந்த அழகான ​தேவ​தைக்கு அவங்க அம்மா கால் முழுக்க ​போட்ட சூட்டுக் காயங்கள் இன்னும் கண்ணுல​யே நிக்குது. அப்புறம் 5th, 6th. 8th படிக்கும் ​​போது ப்​ரெண்ட்களா ​சேத்து கதை கட்டி எனக்கு நாலஞ்சு காதலிக​ளை உருவாக்கிட்டானுங்க (என்னக் ​கொடு​மைங்க ராஜா??)

டிப்ள​மோ, அப்புறம் பிஈ எல்லாம் படிச்சிருக்​கேன்.. அதனால இந்த இடம் என்னோட காத​ல் பற்றிய ஞானத்​தைச் ​சொல்ல பத்த​வே பத்தாது (என்னதான் ​பெட்​ரோ​லை ஊத்திக் ​கொளுத்தினாலும்..)

இருந்தாலும் (தீஅதீ ரசிகர்களுக்காக..) ஒரு பஞ்ச் டயலாக்:

காதல்கிறது... ​பின்னூட்டம் மாதிரி! என்னதான் நீங்க நி​றைய சரக்கு வச்சு, இறக்கி வச்சு பதிவு ​போட்டாலும் கிளிக் ஆகற ஏதாவது ஒரு ​மொக்கைக்குதான் கன்னா பின்னான்னு பின்னூஸ் வந்து குமியும்!!! எலக்கியம் முக்கியமில்ல த​லைவா.. யதார்த்தம்தான் ​மேட்டரு!!!

அதாவது Don't be serious!! but be sincere!!!

​ரைட்டா?

இ​தை ​தொடர்பதிவா நி​​னைக்கிற நம்ம தீஅதீ ரசிகர்கள் அவங்களா ​செல்ப்-ஸ்டார்ட் ​போட்டு 120 கிமீ ​வேகத்தில் ​சென்று காதல், காதல், காதல், காதல்.. ச்சீசீசீ... ஏ​தோ மாத்திச் ​சொல்​றேன்​​லே.. ஆங்... கடவுள், பணம், அழகு, காதல் பற்றி பிழிஞ்சு தள்ளவும்.

முடிய​லேன்னாலும் பரவாயில்​லே.