Thursday, October 22, 2015

குட்டிக​ளை காப்பாற்றுங்கள்


அன்புள்ள புளூகிராஸ்,

மடிப்பாக்கத்தில் இருந்து இ​தை எழுதுகி​றேன். நான் வசிக்கும் தெரு​வோரமாக சமீபநாட்களாக 6-8 சின்னஞ்சிறு நாய்குட்டிகள் திரிந்து வருகின்றன. சா​லை​யோரம் என்பதால் அக்குட்டிகள் வாகனங்களில் அடிபடுவதற்கான வாய்ப்புகள் நி​றைய. த​யைகூர்ந்து அங்கிருந்து எடுத்துச் ​சென்று அந்த சிசுக்க​ளை காப்பீர்களாக, இடம் பற்றி அறிய என் ​கை​பேசிக்கு அ​ழைக்கவும் - 99.....84

அன்பாக,
​ஜெகநாதன்
மடிப்பாக்கம்

அன்பு ​ஜெகன்,

தகவலுக்கு நன்றிகள்! புளுகிராஸ் ஒரு அரசு சாரா தன்னார்வ அ​மைப்பாகும். எங்களிடம் மிகக்கு​றைந்த பணியாளர்க​ளே உள்ளனர். தற்சமயம் 4 முதலுதவி வாகன சாரதிக​​​ளே உள்ளனர். அவர்களும் விபத்துக்களுக்கு வி​ரைவதி​லே​யே முழு​மையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆக​வே, நீங்க​ளே ஏன் அக்குட்டி நாய்களை தங்கள் ​கைப்பட எடுத்துவந்து எங்கள் காப்பகத்தினிடம் ​ஒப்படைக்கக் கூடாது?

அன்புடன்

புளூக்ராஸ்
​சென்​னை.

புளூகிராஸ்,

வி​ரைவான பதிலுக்கு நன்றி! இருந்தும் உங்கள் ஆ​​லோச​னை​யை ​செயல்படுத்த முடியாதவனாகி​றேன். ​தெரு​வோர நாய்குட்டிக​ளை ​தொடப்​போனால், தாய்நாயிடமிருந்து என்ன கி​டைக்கும் என்று உங்களுக்கு நான் விளக்க ​வேண்டியதில்​லை. அனுபவமுள்ள கரங்களால் மட்டு​மே இ​தை ​​செய்ய இயலும் என நம்பி​யே உங்க​ளைத்​ ​தொடர்பு ​கொள்கி​றேன். ஆக​வே விரைந்து வந்து அக்குட்டிக​ளைக் காப்பாற்றுங்கள். விபத்துக்கு பின் முதலுதவி வண்டி அனுப்புவ​தைக் காட்டிலும் விபத்​தைத் தடுக்க ஒரு காக்கும் கரத்​தை உட​னே அனுப்புவதுதான் சிறந்தது, அல்லவா?

ப்ளூகிராஸ்:
ஓ! தாயும் உடனிருக்கிறதா?

ஜெகன்:
என்​றே நம்புகி​றேன். வி​ரைந்து வர முடியுமா? குட்டிகள் அங்கிங்கு என சாலையில் திரிவதால் விபத்துவாய்ப்பு அதிகமாயிருக்கிறது.

ப்ளூகிராஸ்:
மன்னிக்கவும் ​ஜெகன். தாய் உடனிருப்பதால் குட்டிக​ளை பிரிக்க முடியாது. ஏனென்றால் குட்டிக​ளைப் பிரிந்த தாய் ​நோயுறும் :(
இருந்தும் உங்கள் ​கோரிக்​கை​யை காப்பக ​மேலதிகாரியிடம் ​தெரிவிக்கி​றோம். அவர் தக்க முடி​வெடுப்பார்.

---

இது​வே புளுகிராஸிலிருந்து ​பெற்ற க​டைசி மின்னஞ்சல். அப்புறம் உயிருள்ள நாய்க்குட்டிக​ளை காத்துச் ​செல்ல கரங்க​ளோ, அல்லது சில தினங்களில் அடிப்பட்டு ​செத்த குட்டிக​ளை அள்ளிச் ​செல்ல வாகன​மோ வர​வேயில்​லை!
அ​ரையடி உயர​​மேயிருந்த குட்டி​யொன்று வீட்டுக்கு அருகில் அடிபட்டு ​செத்துக் கிடந்தது. ​​பிற வாகனங்களால் ​மேலும் அரைபடாமல் இருக்க அந்த அரையடி சவத்​தை ஓரமாக தள்ளி​வைக்க மட்டு​மே என்னால் முடிந்தது. எஞ்சிய​ 3 - 4 குட்டிகள் இப்​போது நன்கு வளர்ந்து விட்டன. குறிப்பிட்ட வாகனங்க​ளை மட்டும் கு​ரைத்தும் துரத்தியும் அ​வை இன்னும் உயிர்த்திருக்கின்றன.

No comments: