Tuesday, June 1, 2010

தொடர்பு எல்லைக்கு அப்பால்...

நீங்கள் என்றாவது +919886814327 என்ற மொபைல் எண்ணை அழைத்திருக்கிறீர்களா? அழைத்ததும் நீங்கள் 99 சதவீதம் பதில் பெறுவீர்கள்.

இந்த மொபைலுக்கு என்னை அருளியவன் சரவணன். சரவணன் ஒரு எலக்ட்ரீஷியனாக எனக்கு அறிமுகமானான். ஐந்து வருடங்களுக்கு முன் பெங்களூர், சேஷாத்ரிபுரம், முதல் பிரதான வீதியிலுள்ள ஒரு மோட்டார் வீட்டுக்கு நான் குடியேறியபோது சரவணனைச் சந்தித்தேன். ஒருவர் மட்டும் வாழ அனுமதிக்கும் சிறு அறை அது. ட-போன்ற வடிவம் கொண்ட அந்த அறையில் ஒருவர் மட்டும் கால் நீட்டித் தூங்கலாம். விருந்தாளிகள் ட-வை அனுசரித்துப் படுத்துக்கொள்ள அறை அனுமதிக்கும்.

நீங்கள் அழைத்த அலைபேசியிலிருந்து காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி பாடல், மிஷன் இம்பாஸிபிள் தீம் ம்யூஸிக் அல்லது அதட்டும் பெண்குரல் போன்ற எந்தவிதமான ரிங்டோன்களும் கேட்கச் வாய்ப்பிருக்காது.

அறையில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு எர்த்திங் கொடுக்க வேண்டியிருந்தது. இது தெரியாமல் கம்ப்யூட்டரை இயக்கி CPU-வால் ஒருமுறை தாக்கப்பட்டிருந்தேன். சரவணனை உன்னதராஜ் ஜிம் மாஸ்டர் அறிமுகப்படுத்தினார். ஜன்னலைத் திறந்தது போன்ற சிரிப்பைக் கொண்டிருப்பான் சரவணன். ஒல்லியான இறுகிய உடல்வாகு. அதிகம் போனால் அப்போது 24 வயது இருந்திருக்கலாம்.

எனக்கு எந்த செலவும் வைக்காமல் அவனே கம்பிகளைக் கொண்டுவந்து, மெயினை ஆப் செய்து எர்திங் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான்.

'மெயின் ஆப் பண்ணாமலே வேலை செய்வேங்க.'
'வேணாம்.. எதுக்கு ரிஸ்க்?'
'இதுக்கே இப்படீங்கறீங்களே.. நான் கரண்ட் இருக்கிற வயரையேப் பிடிப்பேன். என்னை ஒண்ணும் பண்ணாது.'

அவன் சொன்னால் எதையும் நம்பிக்கொள்ளலாம். சிலரிடம், பற்களில் கடித்து இழுக்கப்படும் வயரின் உள் கம்பியாக இலகுவாக இருந்துவிடுகிறோம். வேலை முடிந்தும் சரவணனோடு ஒரு நட்பு உருவாயிருந்தது.

அடுத்த முனையிலிருக்கும் நான், உங்களை கத்திக் கத்திப் பேசச் சொல்லலாம். சிலசமயம் எரிச்சலாகத் தொடர்பை(யே) துண்டித்துவிடலாமே என்று உங்களுக்கு யோசனை வரலாம். அது இயல்பே.

தனியறையில் எலிபோல வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு அப்போது யாரோடு வேண்டுமானாலும் நட்பு, மப்பு பாராட்ட முடிந்தது.​சரவணனும் நானும் சிலமுறை அறையில் சரக்கடித்து ட-வாகியிருக்கிறோம். என்ன வற்புறுத்தினாலும் எனக்கு கோடைஸ் ரம்மே போதும் என்று பிடிவாதமாக இருப்பான். வயிறு எரியுமே என்று வருத்தமாக இருக்கும்.

'அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க.. காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணியை அப்படியே கடகட-ன்னு குடிச்சிட்டு கொஞ்ச நேரம் பேப்பரைப் புரட்டிக்கிட்டு இருந்தாப் போதும். சும்மாக் கலகலன்னு போயிடும். வயிறு ஃப்ரீ ஆயிடும்' என்பான்.

ஒருவனுக்கு வாழ்வில் இதற்கு மேல் உன்னதம் வேறு ஏதும் இருக்கிறதா என்ன?

என்னிடம் இருக்கும் இந்த மொபைலை என் மொபைல் என்று சொல்லமுடியாதவனாயிருக்கிறேன்.

அறைக்கு வரும்போதெல்லாம் ஏதாவது கொண்டுவருவான். அது அநேகமாக ஒரு ஜங்ஷன் பாக்ஸ், கேபிள் அல்லது சதுர செவ்வக வடிவிலான எலக்ட்ரிக் யூனிட்கள்.

'பாஸு இதை இங்க மேல வச்சிடறேன். அப்புறம் வந்து எடுத்துகிறேன்.' என்று உரிமையாக நடந்துகொள்வான்.

மாஸ்டர் ஒருமுறை என்னிடம்,
'அவனெதுக்கு இங்க வந்து இதெல்லாம் வைக்கிறான். வேணாம் ஜெகன். எதுவும் வம்பாயிடும்' என்றார். எனக்கு உதறலாக இருந்தது. உடனே சரவணச் சிரிப்பு நினைவுக்கு வந்து சமாதானம் சொல்லும்.

மிகச்சரியாக வாய்க்கு முன்னால் வைத்துப் பேசினால்தான் நான் இங்கு அலறுவது உங்களுக்குக் கேட்கும்.வாய்க்கும் காதுக்கும் மொபைல் மாறி மாறித் தாவுதைப் பார்த்தால் இது உண்மையிலேயே 'மொபைல்'தான் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளலாம்.

அப்போது என்னிடம் நோக்கியா 2600 மொபைல் இருந்தது. மோனோக்ரோம் திரை, பட்டாம்பூச்சி போன்ற எண்களும், எப்ஃஎம் வசதியும் கொண்டது. அன்று அறைக்கு சரவணன் ஒரு மொபைலோடு வந்தான். சாம்சங் என்று அறிமுகமான அது வண்ணத்திரைக் கொண்டிருந்தது.

'பாஸ்.. இதை வச்சிக்கிட்டு உங்க செல்லைத் தர்றீங்களா?'

புரியாமல் விழித்தேன்.

'இந்த செல்லுல ரேடியோ இல்லீங்க பாஸ். நான் இப்ப வேலைக்கு தூரமா போவேண்டியிருக்கா.. அதுதான் பாட்டுக் கேட்டுக்கிட்டே போலாம்னு.. கொஞ்ச நாள் தான்' என்றான்.

இலவசமாக ஒரு சிரிப்பும். செல் என்ன ஜீனே தரலாம். என் நோக்கியாவை சரவணிடம் தந்தேன். அப்படியே சார்ஜர்களும். அதற்கப்புறம் எப்போதாவது கண்களில் சிக்குவான். காதுகளில் ஹெட்போனின் வெண்ணிற வயர்கள் சுற்ற அவன் திரிவதைக் கண்டால் அசல் எலக்ட்ரீஷியன்தான் என நம்பலாம்.

இம்மொபைலுக்கு வரும் குறுஞ்செய்திகளை வெயிலில் படிக்க முடிவதில்லை. குறுஞ்செய்திகள் பகல்-இரவு வித்யாசம் கிடையாது என்பது எனக்குத் தெரியும்.

அவன் கொடுத்த மொபைலில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சார்ஜர் மட்டும் பிரச்சினை செய்து கொண்டிருந்தது. ஒருநாள் அறைக்கு வந்த மாஸ்டர் மொபைலைப் பார்த்துவிட்டு விசாரிக்க எல்லாவற்றையும் சொன்னேன்.

'நீங்க ஒரு கேனைங்க..... ஏன் உங்க மொபைலை கொடுத்தீங்க? ஸப்போஸ் இது திருட்டு மொபைலா இருந்தா என்னாகிறது??'

பண்புப்பெயரில் ஆரம்பித்து வினாக்களில் முடியுமாறு அமையும் வாக்கியங்கள் நிம்மதியைக் குலைத்து விடுகின்றன.

'ச்சேசே.. அப்படியெல்லாம் இருக்காதுங்க'

'என்னங்க இப்படி இருக்கீங்க.. டூப்ளிகேட் சார்ஜரைப் பார்த்துமா உங்களுக்குத் தெரியலே?'

அப்படியா? இருக்கலாம். வஸ்துகளைக் கொண்டு மனிதர்களை எடைபோடும் திறன் எனக்கில்லையோ? வயரின் உள்கம்பி போல யார் வேணாலும் பற்களில் கடித்து இழுத்துக் கொள்ளலாமோ?

இது Samsung T-100 மொபைல். எம்பி3, எஃப்எம் என்று எந்த இசையும் கிடையாது. Sam'sung'-ல் உள்ள singன் இறந்த காலம் இதற்கு சாட்சி.

மூன்றாவது ரவுண்டில் சரவணன் முன்பு சொன்னது:

'ஜெகன்.. அம்மாவுக்கு நான் இந்த வேலைக்கு போறதே பிடிக்காது'
'....'
'அப்பா ஈ.பி. லதான் வயர்மேனா இருந்தாரு..'
'....'
'ஒருநாள் டூட்டியில் கரண்ட் அடிச்சி செத்துப் போயிட்டாரு. ஆனா, எனக்கு கரண்ட் வேலைன்னா சின்ன வயசில இருந்தே ரொம்ப பிடிக்கும். கரண்ட் இருக்கிற கம்பியை கையிலயே பிடிப்பேன்.'
'....'
மின்சாரம் மனிதர்களவுக்கு கொடூரம் இல்லை போலிருக்கிறது. சிரிப்புகள் ஒளியும் ஒலியுமாக மின்சாரத் தன்மையோடு இருக்கின்றன. சிரித்த முகங்களாக நினைவுக்கு வருபவர்கள் எப்போதும் மறப்பதில்லை.

12 மணிநேரங்களுக்கு மேல் பேட்டரி சார்ஜ் இருப்பதில்லை. ஆனால் பாருங்கள்.. 24 மணிநேரமும் சார்ஜரில் போட்டுவைத்தாலும் அதுபாட்டுக்கு சார்ஜ் ஏறிக்கொண்டேயிருக்கும்.
நான்காண்டுகள் கழிந்துவிட்டன. இன்னும் சரவண மொபைல்தான் கைவசம். என்றேனும் எதிர்ப்பட்டு, பாஸ்​மொபைலைத் திருப்பிக் கொடுங்க என்று சரவணன் கேட்க நில-கால-டவர் சாத்தியம் உண்டுதான்.

திருமணம் நிச்சயமானதும் மனைவிக்கு வாங்கித் தந்த மொபைல் கேமரா வசதி கொண்டது. கூடவே அப்பாவுக்கும் ஒரு மொபைல் வாங்கினேன். என் மொபைலில் கேமரா இல்லியா என்றார் தந்தை.

எதிர்படுகிற மனிதர்கள் செல்களால் தங்கள் ஆளுமையை மெய்ப்பிக்கிறார்கள். வஸ்துக்களால் மனிதர்களை மதிப்பிடத் துவங்கிவிட்டேனோ என்று சந்தேகமாக இருக்கிறது. மெல்லிய மாடல்கள் இப்போது மறைந்து விட்டன. ஜியோமென்ட்ரி பாக்ஸ் அல்லது டிபன் பாக்ஸ் அளவுகளில் எடுத்துப் பேசப்படும் மொபைல்கள் உன்னதமானவை. ப்ளூடூத் கடித்தக் காதுகளாக ஹாண்ட்ஸ்-ப்ரீயாக பேசும் நபர்கள் திடுக்கிட வைக்கிறார்கள்.

இந்த மொபைலில் சில பட்டன்களை புல்லாங்குழல் துளைகள் போல தொடவேண்டும், சிலவற்றின் மேல் விரல்கள் குத்தாட்டம் போட வேண்டியிருக்கும்.

சமீபத்தில் பெங்களூர் வந்திருந்த அப்பாவிடம் புது மொபைல் இருந்தது. அதில் 3 மெகாபிக்ஸல் கேமாரா கூட உண்டு. நான் வாங்கித் தந்த மொபைல்?

'அது வொர்க் ஆகலடா. அதான் மாத்திட்டேன். நீ இன்னும் அதே மொபைல்தானா? வேணா இதை எடுத்துக்க'

வேண்டாம். பளுவை சுமந்து கொண்டிருப்பதை விட அதை பெற்றுக் கொள்ளும் கணமே வலியானது. அப்பாக்கள் மகன்களின் பரிசுகளை 3ஜி அவரசத்தில் கடாசுதல் இயல்பே. எதுவும் சுலபம்தான். ஒரு பொருளில் சிரிப்பைக் காணும் திறனும் பெற்றுவிட்டேன் போல. உயிர்ப்புள்ள சிரிப்பாக அதிரும் மொபைல் என்னைத் தவிர வேறு யாரிடமும் இருக்குமா என்ன?

39 comments:

விஜய் said...

புரையேறும் மனிதர்களா ஜெகன் !

விஜய்

Ananya Mahadevan said...

//எம்பி3, எஃப்எம் என்று எந்த இசையும் கிடையாது. Sam'sung'-ல் உள்ள singன் இறந்த காலம் இதற்கு சாட்சி.// superb jagan.
கடைசி வரியைப்படிச்சப்போ உண்மைதான்னு சொல்லிகிட்டேன். வாழ்த்துக்கள். வழக்கம்போல புதிய கோணம். அருமையான நரேஷன். படமும் சூப்பர்.

Mythees said...

gr8 story ............

எல் கே said...

//உயிர்ப்புள்ள சிரிப்பாக அதிரும் மொபைல் என்னைத் தவிர வேறு யாரிடமும் இருக்குமா என்ன?
Posted by ஜெகநாதன் at 8:37 AM //

excellent

vasu balaji said...

v.good one.:)

கௌதமன் said...

// பளுவை சுமந்து கொண்டிருப்பதை விட அதை பெற்றுக் கொள்ளும் கணமே வலியானது. அப்பாக்கள் மகன்களின் பரிசுகளை 3ஜி அவரசத்தில் கடாசுதல் இயல்பே. எதுவும் சுலபம்தான். ஒரு பொருளில் சிரிப்பைக் காணும் திறனும் பெற்றுவிட்டேன் போல. உயிர்ப்புள்ள சிரிப்பாக அதிரும் மொபைல் என்னைத் தவிர வேறு யாரிடமும் இருக்குமா என்ன?//
இங்கேதான் நிற்கிறார் ஜகன். வெரி குட்.

geethasmbsvm6 said...

ஒரு பொருளில் சிரிப்பைக் காணும் திறனும் பெற்றுவிட்டேன் போல. உயிர்ப்புள்ள சிரிப்பாக அதிரும் மொபைல் என்னைத் தவிர வேறு யாரிடமும் இருக்குமா என்ன? //

கண்ணீர் வர வைத்த வரிகள்.

Raju said...

சிக்ஸர்!

கிருஷ்ண மூர்த்தி S said...

/இந்த மொபைலில் சில பட்டன்களை புல்லாங்குழல் துளைகள் போல தொடவேண்டும், சிலவற்றின் மேல் விரல்கள் குத்தாட்டம் போட வேண்டியிருக்கும்./

அப்ப வித்தை கை வந்தாச்சுன்னு சொல்றீங்க!

:-)))

Vidhoosh said...

எதிர்பார்த்ததுக்கும் மேலேயே அழகான எழுத்து. நீங்கதானே, அதனால் ஆச்சரியமா இல்லை.

நலமா>?

பத்மநாபன் said...

ஜூன் 1 ஆம் தேதியிட்ட பதிவு 7 ஆம் தேதி தான் என் கண்ணில் படுகிறதே என்ற வருத்தத்தில் அவசரமாக படித்து முடித்துவிட்டு பின்னூட்டம் இடுகையில் பார்க்கும் பொழுது சக நட்புக்களும் இன்று தான் பார்த்திருக்கிறார்கள் என்பது சிறு ஆசுவாசம் மீண்டும் நிதானமாக படிப்பதற்கு ....

///பற்களில் கடித்து இழுக்கப்படும் வயரின் உள் கம்பியாக இலகுவாக இருந்துவிடுகிறோம்/// நம்பும்படி சொல்லும் நட்பு நெருக்கத்தை காட்டும் அழகான உவமை .

//பண்புப்பெயரில் ஆரம்பித்து வினாக்களில் முடியுமாறு அமையும் வாக்கியங்கள் நிம்மதியைக் குலைத்து விடுகின்றன.// உரையாடல் இலக்கணத்தை நீங்கள் தாரளாமாக பாடம் நடத்தலாம் .....தற்போதைக்கு பதிவுலகிற்கு தேவையான் பாடம் ....

// Sam'sung'-ல் உள்ள singன் இறந்த காலம் இதற்கு சாட்சி. /// இந்த சொல்லாடல் சாம் சங்கின் பத்து வருட பக்தனாகிய எனக்கே சிரிப்பு வரவைத்தது ...

///மின்சாரம் மனிதர்களவுக்கு கொடூரம் இல்லை போலிருக்கிறது. சிரிப்புகள் ஒளியும் ஒலியுமாக மின்சாரத் தன்மையோடு இருக்கின்றன. சிரித்த முகங்களாக நினைவுக்கு வருபவர்கள் எப்போதும் மறப்பதில்லை.// மின்சார காரனாகிய எனக்கு மிக பிடித்த வரிகள் ...லஞ்ச் முடிந்து அலுவலகத்திற்கு இவ்வரிகளின் நினைவில் கிட்டத்தட்ட மிதந்து தான் வந்தேன் ...

மொத்தத்தில் உங்களை தொடர்பு எல்லைக்குள் நான் வைத்துகொள்ள வைத்த எழுத்து ..... வாழ்த்துக்கள் ...

பத்மா said...

நான் சொல்லணும்ன்னு நெனச்சதெல்லாம் எல்லாரும் சொல்லிட்டாங்க .இருந்தாலும் சொல்றேன்

"ஜன்னலைத் திறந்தது போன்ற சிரிப்பைக் கொண்டிருப்பான் சரவணன்".

இந்த வரிகள் கண் முன்னே ஒரு பெரிய வெகுளிச் சிரிப்பை கொண்டு வருகிறது ..நாம் பழகும் அத்தனை பேரை பற்றியுமா எழுத முடிகிறது?
சரவணனின் சிரிப்பு உங்கள் மனதை விட்டு அகலாததைப் போல் இந்த எழுத்தும் எங்கள் மனது விட்டு போகாது ..

சிநேகிதன் அக்பர் said...

ஓகே! ஓகே!!

இன்னொரு செல்வாங்கி ரெண்டா யூஸ் பண்ணுங்க மாம்ஸ்.

என்ன ஃபீலிங்?!

அப்புறம் இந்த புது டெக்னிக்ல கதை சொல்றதை எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்களேன்.

நேசமித்ரன் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகான புனைவு .நெருக்கமாக நெய்த சொற்களுடன் .

நுண்மையின் கூறுகள் ஆழ்ந்துலவும் வெளியை தீண்டி மீள முடிந்தால் கதையின் பரிணாமங்கள் கிட்டுவதாய் இருக்கிறது கதையின் கிளைமொழி

சொல்லாடல்களில் செதுக்கியிருக்கிறார் ஜெகன் முன்னெப்போதையும் விட போதையாய்

ஹேமா said...

ஜன்னலின் சிரிப்புக் கொண்ட மனிதர்களைக் காண்பதே அரிது.
என்றாலும் ஜன்னலும் காற்றும் உள்ளவரை...!

நெகிழ்வு ஜே...!

பற்களில் கடித்து இழுக்கப்படும் வயரின் உள் கம்பியாக யார் வேணாலும் பற்களில் கடித்து இழுத்துக் கொள்ளலாமோ !

கலா said...

தொடர்பு எல்லைக்கு அப்பால்...\\\\\
இடுகை
எண்ணத்துக்கு இப் பால்
நன்றி


மின்னஞ்சல்.....
ஜெகன் ரசனைக்கும்
ஊக்குவிப்புக்கும்
மிக்க நன்றி

thamizhparavai said...

Nach....

ஷங்கி said...

ஒரு மாதிரியான நெகிழ்வான மனநிலையில் இருக்கிறீரோ? நெகிழ்விடுகைகள் தொடருதே?! அப்புறம் உவமானம்கூட அந்தந்த ஆட்கள்/வேலைக்குத் தகுந்த மாதிரி எழுதுறதுல தம்பி ஒரு கில்லாடிய்யா! போட்டுத் தாக்குறீரு!

adhiran said...

simply exellent jegan.

வால்பையன் said...

//நீங்கள் என்றாவது +919886814327 என்ற மொபைல் எண்ணை அழைத்திருக்கிறீர்களா? //


எஸ். டி. டி. பண்ணி இருக்குற பேலன்ஸ் போறதுக்கா!
அஸ்க்கு, புஸ்க்கு!

வால்பையன் said...

டச்சிங் டச்சிங்!

நெஞ்சை தான்!

ஷைலஜா said...

அனன்யா இங்க வழி காமிச்சிருக்காங்க....அசாத்தியமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் நீங்கனும் சொல்லி இருக்கா என் அன்புத்தங்கை! வாழ்த்துகள் ஜகன் ...முழுவதும் வாசித்துவிட்டு கருத்துக்களை பதிக்கிறேன்! பாராட்டுக்கள் அட்வான்சாக!

Nathanjagk said...

அன்பு கவித்தளபதியார் விஜய்,
புரையேறும் நண்பர்கள் மட்டுமல்ல..
புட்டி திருகும் நண்பர்களுமாவர் :))

-

அன்பு அநன்யாஜி,
உங்கள் பிரசன்னத்தால் புது நண்பர்கள் பிரவேசமும் நிகழ்வது மகிழ்ச்சி.
நன்றிகள் :))

-

அன்பு மைதீஸ்..
tan q :))

-
நன்றி எல்.கே!

-

நன்றி வானம்பாடிகள்!

Nathanjagk said...

அன்பு கெளதம்ஜி,
தங்கள் அன்பிற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

-

அன்பு கீதா மேடம்,
உங்கள் பின்னூட்டத்தை சிறந்த பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!

-

அன்பு ராஜு

//சிக்ஸர்!//
அப்ப சீர்லீடர்ஸ் எங்கே??

-

அன்பு கிருஷ்ணமூர்த்தி,
காது, வாய், விரல்கள் என எல்லாம் செல்போனோடு ட்யூன் சேர்ந்து கொள்கிறது.
நன்றி!!

Nathanjagk said...

அன்பு விதூஷ்,
நலமே.. நலஜுன்! நலமா?
ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!!

-

அன்பு பத்மநாபன்,
ஜி.. அசதியான பஸ்பயணத்தில் ஏதோவொரு நிறுத்தத்தில் வந்தமரும் ஒரு நபர். எப்போதும் மறக்க முடியாத அனுபவத்தை பேசிவிட்டு தன் நிறுத்தத்தில் இறங்கிச் செல்வார். அவரது வார்த்தைகள் மனசுக்குள் பதியம் போட்ட மாதிரி வளர்ந்து கொண்டேயிருக்கும். அப்படியொரு நெகிழ்வை தங்களின் பின்னூட்டத்தில் காண்கிறேன். தங்கள் அன்பிற்கு மெத்த நன்றி!!

-

அன்பு பத்மாஜி,

உண்மைதான். அழகாகச் சிரிக்கும் ஆத்மாக்கள் ஏதோவொரு பருவத்தையோ அல்லது விருட்சத்தையோ நினைவூட்டுகிறார்கள். சுற்றுவெளி அப்படியே மறைந்தும் தொலைந்தும் போகும்படி பல்வெளியில் புதிதாய் ஒரு பால்வெளிக் காட்ட சிலரின் சிரிப்புகளுக்கேச் சாத்தியம்.
மிக்க நன்றி பத்மா!!

-


அக்பர் மாப்ள,

நீங்க சொல்றதுதான் நடைமுறை. பழைய செல்போன் பயன்பாட்டால் நரம்புகளுக்கு பாதிப்பு அதிகம் என்று சொல்கிறார்கள். கதை சொல்வது எப்படின்னு ஒரு இடுகையேப் போட்டுடலாமான்னு ரோசனையா இருக்கு. இல்லே சிறுகதை சீராக்க பயிற்சி முகாம் - இந்தமாதிரி நடத்தலாமான்னு பார்க்கிறேன் :))
நன்றி!

-

அன்பின் இனிய நேசன்,
இறுகிய பாறைகளும் நெகிழ்ந்த லாவாச் சரித்திரம் கொண்டது என அறிய முடிகிறது. எதையும் மெழுகாக்கி காட்டும் கர்த்தாவான இந்த ஆத்மாவுக்கு மிக்க நன்றி!

Nathanjagk said...

அன்பு சிரிப்புப் பத்ரகாளி @ அப்பாவி தங்கமணி,
செல்போனை சிம் வைக்க மட்டும் பயன்படுத்துவோர் சங்கம் சார்பாக தங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
இப்போது மொபைல்களில் எல்லாமே கிடைக்கிறது. அட்டாச்டு பாத்ரூம் கூட கூடிய சீக்கிரம் வர வாய்ப்புண்டு :))
எனக்கு(ம்) செல்போனில் அடாவடி வசதிகள் இருப்பது ஒவ்வாது. பலருக்கு தங்கள் கைவசம் உள்ள போனில் உள்ள வசதிகள் கூட தெரியாது. ச்சும்மானாச்சும் வாங்கி சோபியில் போட்டுக்குவாங்க.
மிக்க நன்றி!!

-

அன்பு ஹேமா,

சிலரிடம் மட்டும் காற்றாக வீசும் சிரிப்பைப் பெறமுடியும். வெகுசிலரிடம் மட்டும் நாம் இயல்பாக சிரிக்க முடிகிறது.
அரிதாக சிலரிடம் மட்டும் உண்மையாக இருக்க முடிகிறது. அபூர்வமாகவே சிலரிடம் நம்மை பத்திரமாகக் கொடுக்க முடிகிறது. வாழ்விலே ஒருமுறை மட்டும் யாரோ ஒருவரிடம் அத்தனையும் இழக்க வேண்டியதாகிறது - சந்தோஷமாக.
நன்றி ஹேமா!!

-

அன்பு கலா,
தங்களின் கவிதை அழகு நிரம்பிய சிந்தனை. அதற்கு என் வாழ்த்துக்கள்!
ஊக்கத்திற்கு மிக்க நன்றி!!

-

அன்பு தமிழ்ப்பறவை (பரணி),
சந்திப்பும் சம்பாஷணையும் சிகரட்டுகளுமாய் இனியதாக இருக்கிறது நினைவுகள். நன்றி!

Nathanjagk said...

அன்பு சங்கா அண்ணன்,
மிகச்சரி. கடந்த பதிவுகள் எல்லாம் கொஞ்சம் நெகிழ்வுதான்.. வழவழகொழகொழான்னு கூட சொல்லலாம்.
இந்தமாதிரியான நெகிழ்வான மனநிலையைக் கடந்து வருதல்தான் நடைமுறைக்கு நல்லது என்று படுது. தற்சமயம் படித்துக் கொண்டு வருகிற Jack Canfieldன் (பழைய..) புத்தகம் நடைமுறையில் டக்டக்கென்று நடக்க உதவும் என்று நம்புகிறேன்.
இளகிய மனதுக்காரன் இந்த உலகுக்கு (இப்போது) தேவையில்லை. உழைப்புக்காரன்தான் முக்கியம். இல்லையா?
மீண்டும் சொல்கிறேன்.. றோம்... we miss you a lot. Please do write.

-

அன்பு ஆதிரன்..
நன்றி மகி!!

-


அன்பு வால்ஜி,
அது நெஜம்மாவே என் செல்-நம்பர்தான். ஊர்ப்பக்கம் வந்தா மீட் பண்ணலாம்.
அப்புறம் டச்சிங்-டச்சிங்தான்... கிளாஸ்ஸை தான் :))

Nathanjagk said...

அன்பு ஷைலஜா,
மிக்க நன்றி.. சந்தோஷமும் கூட!!
அநன்யாவுக்கும் நன்றி!

geethasmbsvm6 said...

சுஜாதா நைலான் கயிறு முதல்முறையாகச் சிறுகதையாக எழுதினப்போ கடைப்பிடித்த உத்தி உங்கள் காலடியில் இருக்கும்போது என் பதிவுக்கும் வந்து என்னைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.//

உங்கள் ஆழமான கண்ணோட்டம் பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துகளும் கூட. உயிரோட்டமுள்ள யதார்த்தமான எழுத்து.

(அப்பாடா, உண்மையாவே பாராட்டியாச்சு)

பத்மநாபன் said...

//அட்டாச்டு பாத்ரூம் கூட கூடிய சீக்கிரம் வர வாய்ப்புண்டு :))// உங்கள் பின்னூட்ட பதில்களையும் பதிவின் பாகமாக படித்து ரசிப்பதுண்டு..மேல் குறிப்பிட்டது.. குபீர் சிரிப்பை வரவைத்தது..( நிங்கள் பெங்களூரில் இருப்பதாலோ என்னவோ உங்களிடம் சுஜாதாத்தனம் அடிக்கடி எட்டி ப்பார்க்கிறது....)

Nathanjagk said...

அன்பு கீதா,
சுஜாதாவிடம் இருந்து யாசிக்க நிறைய யுக்திகள் உள்ளன. உதாரணமாக, இந்தக் கதை கனவில்தான் முடியப்போகிறது - முதல்லேயே சொல்லிட்டேன்.. என்று ஆரம்பித்து சொன்னபடி கனவிலேயே முடிப்பார். தமிழுக்கு ஒரு வரப்பிரசாதம் சுஜாதா.
தங்களின் வாழ்த்துக்கு நன்றி வைபவி அம்மா!

-

அன்பு பத்மநாபன்,
பெங்களூர்வாசி-யாக மட்டுமில்லாமல் தினமும் நிறைய-வாசி என்ற கொள்கை உள்ளவர் சுஜாதா. அவரின் அந்திமக் காலத்தில் புதிதாக வெளியிடப்பட்ட புத்தகங்களாலேயே அவரை அர்ச்சித்தார்கள். தினமும் அவர் வீடு தேடி குறைந்தது 50 புத்தகங்கள் வருமாம். புத்தகம் எழுதியாச்சா?, பிரிண்டு போட்டாச்சா? போட்ட கையோட சுஜாதாவுக்கு ஒரு காப்பி அனுப்பிடும்மா என்ற பாலிஸி நிறைய பிரசுரங்கள் கொண்டிருந்தன.
வாசிப்பிலும் ஒரு நிதானத்தை கடைபிடித்தவர் சுஜாதா.. ஒரு நாளைக்கு 3 கவிதைகளுக்கு மேலாக வாசிப்பது கவிதைகளுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றார். நுட்பான கருத்து. இதைத்தான் ஆனந்த வாசிப்பு என்பார்களோ :)) சுஜாதா பற்றிப் பேசினால் பின்னூட்டங்கள் பெருத்து இடுகையாகிவிடும். அதுதான் ஏற்கனவே நீங்கள் எழுதியிருக்கிறீர்களே!!
அன்புக்கு மிக்க நன்றி பத்மநாபன்!

ஷங்கி said...

அன்புத் தம்பி ஜெகநாதன்,
”வழவழ கொழகொழா”ன்னு இல்லை.கதை ஜெட் வேகத்தில்தான் செல்கிறது. அதிலும் நீர் எழுதும் உவமான உவமேயங்கள் அருமை. ஆனால், எனக்கென்னவோ கொஞ்சம் நெகிழ்ந்த நிலையில் தாங்கள் இருப்பதுபோல் தோன்றியது (இடுகைகள் மூலம்), அதைத்தான் சொன்னேன்.
எதையாவது கிறுக்குவேன், சில மாதங்களுக்குப் பிறகு, வேறு தளத்தில். கிறுக்குப் பிடிக்கும்போது சொல்கிறேன்.

முனியாண்டி பெ. said...

மிக அருமை. படித்து முடித்தபோது என்னை அறியாமல் கண்கள் பனித்தன.

அண்ணாமலை..!! said...

உங்களின் எழுத்துநடை பிரமிக்க வைக்கிறது நண்பரே!
உயரம் தொடுவீர்கள்!

Nathanjagk said...

சங்காண்ணா,

அமைதிக்கு பெயர்தான் சங்கா என்று பாடிக்கொண்டே எழுத்திடுகிறேன். உங்கள் முகவரியாக என்னிடம் இருப்பது என்னுள்ளே வலைப்பதிவு மட்டும்தான். அதனால்தான் அடிக்கடி முகம் காட்டுங்கள் என கூவ வேண்டியவனாகிறேன். குழந்தை பருவத்தில் சுவரில் கிறுக்கிய பென்ஸில் ஓவியங்கள் வருடந்தோறும் வரும் சுண்ணாம்பு பூச்சுகளால் கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்ந்து மறைந்து போய்விடுகின்றன. காலம் ஒரு பெரிய சுண்ணாம்புப் பூச்சுக்காரன். ஆகவே, ஓவியத்தைக் காப்பாற்றுங்கள்.

பணிச்சுமை, புதுக்கடமைகள், கனவுகள், அதற்கான ஆயத்தங்கள், திட்டங்கள் என நிறைய பொறுப்புக்கள் இருக்க சாத்தியமுண்டு. பிளாக் எழுதுவது அதோடு ஒன்று என்று எண்ணிக்கொள்ளுங்கள். அலுவலக பணிச்சுமைக் கூட இடுகைக்கான திறவுதான். எதிர்படும் ஒவ்வொரு நிகழ்விலும் - நல்லதோ கெட்டதோ அல்லது 2ம் கெட்டானோ - இதிலிருந்து நான் பயன்பெறுவது என்ன? என்ற எண்ணம் இருக்கணும் என்கிறார் ஜேக் கான்ஃபீல்டு. பேனா மூடி தவறவிட்டு குனிந்து எடுப்பதிலும் ஏதாவது பயன் இருக்கும் என்று நம்பத்துவங்குகிறேன் இப்போதெல்லாம். உங்கள் அமைதியிலும் ஏதாவது குனிந்து எடுப்பேன் என்று தோன்றுகிறது. நீங்களும் எதையாவது எடுப்பீர்கள் என்றும் நம்புகிறேன். அமைதிக்கு வாழ்த்துக்கள்!

அன்பு முனியாண்டி,
தங்கள் ஈடுபாடான வாசிப்பிற்கும், கடிதத்திற்கும் நன்றி. வெகு-தூரத்துப் பச்சை விளக்கு போல துலங்குகிறது தங்கள் அன்பு! நன்றி!

அன்பு அண்ணாமலை,
தங்களின் கனிவிற்கு மிக்க நன்றி!

சரவணன் said...
This comment has been removed by the author.
சரவணன் said...

எங்கள் ஊரில் அணைத்து லைன்மேன்களும் மொபைல் வைத்திருக்கிறார்கள். கரண்டு கம்பத்தின் உச்சியில் அமர்ந்துகொண்டு நலம் விசாரிப்பதை பார்த்துள்ளேன். சில நேரங்களில் "கட்டிங் பிலேட வீசு, இண்டிகேட்டர வீசு" என்று கீழே நிற்கும் இன்னொரு காக்கி டவுசரிடமோ அல்லது "இழுத்துக்கட்டு" என்று மறு கம்ப உச்சியில் உள்ள டவுசரிடமோ மன்றாடவும் வாய்ப்புண்டு.

இதைவிட கொடுமை DTH குடை (டிஸ்) ரிப்பேர் செய்ய வரும் ஏஜண்டுகள். கூரை மீது குத்தவைதுக்கொண்டு குடையை ஆட்டி ஆட்டி "இப்ப தெரியுதா?, இப்ப?, இப்ப?" என்று மொபைல் போனில் தான் கேட்பார்கள், வீட்டிற்க்குள் TV -ஐ பார்த்துக்கொண்டு "இல்லை, இல்லை" என்று இன்னொருவர் பதிலளிப்பார். தேநீர் இடைவேளைக்குப் பின் அது மீண்டு தொடரும்.

சரவணன் said...

எங்கள் ஊரில் அணைத்து லைன்மேன்களும் மொபைல் வைத்திருக்கிறார்கள். கரண்டு கம்பத்தின் உச்சியில் அமர்ந்துகொண்டு நலம் விசாரிப்பதை பார்த்துள்ளேன். சில நேரங்களில் "கட்டிங் பிலேட வீசு, இண்டிகேட்டர வீசு" என்று கீழே நிற்கும் இன்னொரு காக்கி டவுசரிடமோ அல்லது "இழுத்துக்கட்டு" என்று மறு கம்ப உச்சியில் உள்ள டவுசரிடமோ மன்றாடவும் வாய்ப்புண்டு.

இதைவிட கொடுமை DTH குடை (டிஸ்) ரிப்பேர் செய்ய வரும் ஏஜண்டுகள். கூரை மீது குத்தவைதுக்கொண்டு குடையை ஆட்டி ஆட்டி "இப்ப தெரியுதா?, இப்ப?, இப்ப?" என்று மொபைல் போனில் தான் கேட்பார்கள், வீட்டிற்க்குள் TV -ஐ பார்த்துக்கொண்டு "இல்லை, இல்லை" என்று இன்னொருவர் பதிலளிப்பார். தேநீர் இடைவேளைக்குப் பின் அது மீண்டு தொடரும்.

Nathanjagk said...

அன்பு சரவணன்,

மேற்புறம் திறந்திருக்கிற குளியலறைகள் கொண்ட கிராமத்தின் லைன்மேனாக இருப்பதை விட ஆபத்தான வேலை உலகில் ஏதும் உண்டா?
கிராமங்களுக்கு இப்போது புதிதுபுதிதாக டவர் செவிகள் வருகின்றன.. முன்னேற்பாடாக குளியலறை மேற்சுவர்களும் கட்டப்பட்டு விடுகின்றன. செல் போகாத இடமில்லை. அயர்ன்பாக்ஸை செல்போன் என நினைத்து காதைத் தீய்த்துக் கொள்ளுகிற காலம்.