Thursday, October 8, 2009

உங்களுக்கு வடை கிடையாது!

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு: No Donuts for you! இதை விளக்கறதுக்கு முன்னாடி டோனட்-ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கிறது மொக்கியம்!

டோனட்டை doughnut, donut இப்படி, எப்பிடி வேணாலும் வளைச்சு வழைச்சு உச்சரிக்கலாம். பிரச்சினையில்லை.. டோனட் ஒரு வளையமான, பொரிச்ச, மாவில செய்யற தின்பண்டம்.. சுருக்கமா நம்மூரு ஓட்டை உளுந்து வடை!

நோ டோனட்ஸ் ஃபார் யூ-ன்னா, உங்களுக்கு ஒரு விருதும் கிடையாது, நயா பைசா கூட கிடையாது, ப்பெப்பப்பே என்று அர்த்தம். ஆக, உங்களுக்கு வடை கிடையாதுன்னா உங்களுக்கு ப்பெப்பப்பே என்று கொள்க. இதை வடை போச்சே என்று கூட சொல்லலாம்!! பட், அது சுய புலம்பல் வகை என்று அறியப்படுகிறது.

அப்படி எந்தெந்த விஷயங்களுக்​கெல்லாம் நமக்கு வடையில்லாம போகுதுங்கிறதை ஆராயலாமா?

Ø

பயங்கர ஸ்பீடா நாலுகால் பாய்ச்சல்ல ஓடி, பஸ்ஸைப் பிடிச்சாலும்.... அது நாம போக வேண்டிய பஸ் இல்லேன்னு தெரிஞ்ச பின்னாடியும்... அமைதியா வேர்வையைத் தொடச்சிக்கிட்டு, நெக்ஸ்ட் ஸ்டாப் ஒண்ணு கொடுங்கன்னு டிக்கெட் எடுக்கிறப்போ.... (நீங்க ஓடின ஓட்டதுக்காக...) உங்களுக்கு வடை கிடையாது!

Ø

மேல கீழ லெப்டு ரைட்டு யூ டர்ன் இஞ்சி மரப்பான் எல்லாம் போட்டு இண்டர்வியூவுக்கு தயார் பண்ணியிருந்தாலும்... ஏன் இப்ப இருக்கிற வடையை.. ஸாரி வேலையை விடுவேன்னு அடம்பண்ணறீங்க என்ற பிசாத்து கேள்விக்கு.. நீங்க முழிக்கும்​போது... உங்களுக்கு வடை கிடையாதுங் சார்!

Ø

எஸ்எம்எஸ்-லேயே பிரண்ட்ஸ்களை வரவழைச்சு, சாமர்த்தியமா ஒருத்தன் தலையில பில்லைக் கட்டி, புல், வாட்டர் பாட்டில், பியர், முறுக்கு, மிக்ஸர், கடலை, ஊறுகாய், சரக்கு கலக்கிறதுக்கு(ன்னே) ஒரு பேனா இப்படி ஜபர்தஸ்தா எல்லாம் ரெடி பண்ணியிருந்தாலும்... மூணாவது ரவுண்டை முடிச்சிட்டு, முட்டிப் ​போட்டு ஒக்காந்து நீங்க மட்டும் தனியா... ஓய்ய்ய்ய்ய்.. ஓவ்வ்வ்வ்வ்வோவ் என்று ​பைக்கை ஸெல்ப்-ஸ்டார்ட் பண்ணினாக்க.... ​நோ வடை ஃபார் யூ!

Ø

ரைட்டு.. சரக்குப் ​போட்டாச்சு.. மம்மி-டாடிக்கிட்ட இருந்து தப்பிக்கணுங்கிறதுக்காக.. ஹால்ஸ், ஜிஞ்சர் ஹால்ஸ், க்ளோரெட்ஸ், ஆர்பிட், நிஜாம் பாக்கு, வாழைப்பழம், புதின் ஹரா, பூமர் சூயிங் கம், கொய்யா இலை (!?) இப்படி மாடு மாதிரி எதைஎதையோ அசைப்​போட்டுக்கிட்டு கனகச்சிதமாக வூட்டுக்குப் ​போயி... காலிங் பெல்லை அமுக்கி விட்டு, மம்மீ வந்து திறப்பதற்குள்... நின்றவாக்கில்.. கதவிலேயே தலையை சரித்து பிளாட் ஆகி விட்டால்.. ​ரொம்ப ஸாரி.. உங்களுக்கு வடை கிடையாது!

Ø

பக்கத்துத் தெரு ஃபிகரை மடிக்கணுங்கிறதுக்காக, அந்த தெரு ஸ்கூல்மெட்டைத் தேடிப் பிடிச்சு ப்ரெண்ட் பண்ணிக்கிட்டு, அப்பிடியே பக்கத்துத் தெரு ப்ரெண்ட் சர்க்கிளை இன்னும் கொஞ்சம் 'எக்ஸ்டென்ட்' பண்ணுனா பிற்காலத்தில ஒடம்புக்கு நல்லதே என்று.. நீங்கள் அந்தத் ​தெரு இந்து முண்ணனி அமைப்பினர், விஜய் ரசிகர் மன்றத்தினர், பழனியாண்டவர் காவடிக்குழு, பால்காரர், டீக்கடைக்காரர், பக்கத்துவீட்டுக்காரர்,​மேல்வீட்டுக்காரர் என்று பயங்கர ப்ரெண்ட் பண்ணி... கடைசியில் ஃபிகரின் அண்ணனையே ப்ரெண்ட் பண்ணி... அந்த அண்ணன் உங்களையும் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயி.. பிகர் கூட அறிமுகம் எல்லாம் ஆன பின்னாடி... உங்கள் தெருவுக்கு வந்து, நண்பர்களிடம் "ஆயிரந்தான் இருந்தாலும் அவ என் ப்ரண்ட்டு தங்கச்சிடா. டாவு கட்ட மனசு வர்லே!" என்று ​பேக்-ஃபுட் போட்டால்... உங்களுக்கு வடைன்னு எழுதிக்கூட கிடையாது!

* * *

ஓகே. நான் இந்த ஸ்டாப்பிலேயே இறங்கிக்கிறேன்... நம்ம காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள்.. இதை இன்னும் கன்டினியூ பண்ணலாம். உங்களுக்குத் தோணற நல்ல உவகி-வை பின்னூவா அனுப்புங்க. யாருது பெஸ்ட்டுன்னு பாப்போம்.

நானே அல்ரெடி மொக்கைக்கு சக்க டிமாண்ட்ல முழி பிதுங்கி திரியறேன்.. இதுல உன் பதிவுல வந்து பின்னூவா என் மொக்கையை வேஸ்ட் பண்ணனுமான்னு நினைக்கிற ரசிகக் கண்மணிகள்.. அவங்க பதிவிலேயே உவகி-யைப் போட்டுத் தாக்கலாம் (அப்ப, எனக்கு வடை கிடையாதா???)

* * *

46 comments:

கோவி.கண்ணன் said...

//நானே அல்ரெடி மொக்கைக்கு சக்க டிமாண்ட்ல முழி பிதுங்கி திரியறேன்.. //
:)

வடை நல்லா இருக்கு !

துளசி கோபால் said...

வடை...........கிடையாதா?

பயந்துபோய் ஓடிவந்தேன்:-)))))

சென்ஷி said...

என்னைப் பத்திய உண்மைகளை என்னிடமிருந்து வடை கிடைக்காத யாரோ தாறுமாறாய் உங்ககிட்ட சொல்லியிருக்காங்கன்னு நல்லாத் தெரியுது.

எதாயிருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம் வாத்தியாரே.. இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல எல்லா மேட்டரையும் எழுத ஆரம்பிச்சா எப்படி!? :-)

முரளிகண்ணன் said...

உங்களுக்கு நிச்சயம் வடை உண்டு

Beski said...

எனக்கு ஒரு வடையும் கெடைக்கல மாம்ஸ்.

☀நான் ஆதவன்☀ said...

முன்னொல்லாம் ஏழு மணிக்கு மேலயும் வேலை பார்த்தா பிட்சா வாங்கி கொடுத்த டீம் மேனஜரை மனசுல நினைச்சுகிட்டு ரிஸிஸன் பீரியடான இப்ப ஏழு மணிக்கு மேல வேலை பார்த்தா......டீம் மேனேஜர் “டீயும் வடையும்” வாங்கி தந்தா.... அப்ப ”வடை கிடைச்சு வடை போச்சே”...

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

நீங்க இருக்க ஊருல வகை வகையா வடை கிடைக்குமாமே, உண்மையா??

Jawahar said...

நல்ல வேளை, இந்தப் பதிவை நான் படிக்காம விட்டிருந்தா 'வடை போச்சே' ன்னு வருத்தப் பட்டிருப்பேன். தடை பல வந்திடினும் வலை பல சென்று வடை பல தின்பேன்!!

http://kgjawarlal.wordpress.com

ஹேமா said...

ஜெகன்,வடை காக்கா கொண்டு போச்சாம்.உங்களுக்கு இல்லையாம்.

Anonymous said...

:) எல்லாரை மாதிரியும் எனக்கும் வடை கிடையாது.

வால்பையன் said...

சூப்பரா இருக்கு தல!

உங்களுக்கு பின்னூட்ட வடை உண்டு!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

சரக்கு கலக்க ரெனால்ட்ஸ் பேனாத்தான் பெஸ்ட்! என்ன சொல்லுறீங்க ஜெகன்?

Starjan (ஸ்டார்ஜன்) said...

வடை நல்ல ருசி

நேசமித்ரன் said...

//நானே அல்ரெடி மொக்கைக்கு சக்க டிமாண்ட்ல முழி பிதுங்கி திரியறேன்.. //

FISHING FOR.......

:)

நேசமித்ரன் said...

வடை நல்லா இருந்தது தலைவரே !
ஒரு சந்தேகம் எல்லாரும் வடை வடைன்னு சொல்றீங்க என்ன வடைன்னு சொல்ல மாட்டேன்குரீன்களே
:)

நந்தாகுமாரன் said...

Donuts are sweet right? I like your comedy sense.

நந்தாகுமாரன் said...

idea ... இனிமேல் மொக்கைப் பஞ்சம் ஏற்பட்டால் - கொக்கரக்கோ கும்மாங்கோ - எனும் தலைப்பில் ஒரு கவுஜ எழுதி விடுங்கள்

Nathanjagk said...

நன்றி GK! உங்களுக்கு எக்ஸ்ட்ரா ஒரு ப்ளேட் வடை!

Nathanjagk said...

வாங்க துளசி ​கோபால்!! தலைப்புலதான் வடை கிடையாது.. ஆனா உங்களுக்கு மசால் வடை பார்சலே உண்டு! நன்றி!

Nathanjagk said...

பெரியண்ணன் சென்ஷி,
இதெல்லாம் உங்க அனுபவங்களா??? ​ஜோர்!​பேசித் தீரா விஷயங்களாயிற்றே இதுவெல்லாம்?
-
காலடியின் காரிய கமிட்டி இது மூலம் ​சொல்லிக்​கொள்வது என்னவென்றால்.. நாங்கள் எங்கள் வடைகளை நாங்களாகவே சுயமாக ஊற​வைத்து, ஆட்டி, தாளித்து, பொன்னிறமாகப் ​பொறித்து தயார் செய்கிறோம்.
:-)

Nathanjagk said...

அன்பு முரளிக்கண்ணன்,
தங்கள் வடைக்கு நான் கடமைப்பட்டவனாகிறேன்!

Nathanjagk said...

விடுங்க மாப்ள ஏனாஓனா..!
நீங்க அசல் வடைக்கு ஒரு சூப்பர் ​ரெஸிபி போடுங்க. அது போதும்! நன்றி!!!

Nathanjagk said...

ஹாய் ஆதவன்...
நீங்க ஒருத்தர்தான் உகிவ எழுதியிருக்கீங்க!! நீங்க வாழ்க! உங்கள் ​கொற்றம் வாழ்க! உங்க ​கொட்டம் வாழ்க!
பீட்ஸா-டு-வடை!! ஹும்ம்ம்.. பயங்கரமாயிருக்கு இந்த ஜர்னி!!

Nathanjagk said...

கிறுக்கல் கிறுக்கன் said...
//நீங்க இருக்க ஊருல வகை வகையா வடை கிடைக்குமாமே, உண்மையா??//
ஆமாங்க கிகி!
விலை ரூ.1000லிருந்து ஸ்டார்ட் ஆகுது!
சில வடைகள் 1 மணி​நேரம் சாப்பிடறதுக்கே ரூ.4000/- வரை ஆகுது. ஆனால் நல்ல குவாலிட்டியான வடைகள்!!! சில பாரின் வடைகள் கூட கிடைக்கின்றன! கூகிளில் தேடினாலே வடைக்கடைக்காரர்கள் ​தொடர்பு எண் எளிதில் கிடைக்கும்!
நீங்கள் இங்கு, பெங்களூர் வந்தால் கட்டாயம் சாப்பிடலாம்! என்ன ​சொல்றீங்க?

Nathanjagk said...

ஜவஹர்! என்ன ஆளையே காணோம்? உங்க வடை எங்கயும் போகாது! உங்க ஸ்லோகன் // தடை பல வந்திடினும் வலை பல சென்று வடை பல தின்பேன்!!
//
​ரொம்ம்ம்ப நல்லா இருக்கு!

Nathanjagk said...

ஐய் ஹேமா!!!
//ஜெகன்,வடை காக்கா கொண்டு போச்சாம்.உங்களுக்கு இல்லையாம்.//
சூப்பராயிருக்கு இந்த கதை!! ஆனா எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு!!!
* * *
நீங்கதான் இனிமே நம்ம காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்களின் மந்திரி!!
மந்திரி மீன்ஸ்.. பயந்த ரசிகர்களுக்கு மந்திரித்து விடுவது, விபூதி பூசிவிடுவது மற்றும் வேப்பிலையடிப்பது போன்ற ​செயல்களை முன்னெடுத்து ​செயலாற்றுவது!
* * *
ஆண்+அழகு பதிவிலிருந்து நீங்கள் அனுப்பும் பின்னூஸ்களை ​வைத்து இந்த ​பொறுப்புக்கு நீங்களே உசிதமானவர் என்று காலடியின் காரிய கமிட்டி கதறுகிறது.
மிக்க நன்றி!

Nathanjagk said...

அன்பு சின்ன அம்மிணி!
நோ வடை!?? இட்ஸ் ஓகே!
நமக்கு வடை எப்ப ​கொடுக்கணுங்கிறதை மேலயிருக்கிறவனுக்கு நல்லாத் ​தெரியும்! ஹாஹ்ஹாஹ்ஹா!!!

வடை லேட்டா வந்தாலும் ப்ளேட்டா வரும் சின்ன அம்மிணி!!

Nathanjagk said...

வால்பையன்
//உங்களுக்கு பின்னூட்ட வடை உண்டு!//
தாங்கஸ்பா!
சில பதிவுகளுக்கு பின்னூட்டங்கிற வாடையே இருக்க மாட்டேங்குது!! அந்தமாதிரி சமயங்களில்தான் மனம் வடை வடையாய் சிந்திக்கிறது!!

Anonymous said...

//நம்ம காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள்.. இதை இன்னும் கன்டினியூ பண்ணலாம்.//
~
சத்தியமா என்னால முடியாது.
குருவை மிஞ்சிய சிஷ்யனு பீர் எடுக்க ச்சி பேர் எடுக்க ஆசை தான். ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்....
~

Anonymous said...

(அப்ப, எனக்கு வடை கிடையாதா???)
~
கிடைக்க வாய்ப்பு இருக்கு.......
~

ஷங்கி said...

//பக்கத்துத் தெரு ஃபிகரை மடிக்கணுங்கிறதுக்காக, ...//
இதெல்லாம் நீட்டி முழக்க வேண்டியதேயில்லை என்னைய மாதிரி ஆளுக்கெல்லாம். நான் காதலிக்கலாமான்னு நினைக்கிறதுக்குள்ளேயே இன்னொருத்தன் கரெக்ட் பண்ணியிருப்பான். ஹிஹி!!!
மெட்ராஸ்ல ஒரு தடவை ஆகா கூட்டமேயில்லாம இருக்கேன்னு ஒரு பஸ்சுல வேகமா ஏறி ஹிஹின்னு சொல்லக்கூட கூச்சப்பட்டு படக்குனு குதிச்ச அனுபவம் உண்டு. இங்க அடிக்கடி நடக்குறது பார்க்கிங் வடை. ஆகா! அந்த ரெண்டு காருக்கு நடுவுல இடம் இருக்கே, எப்படி எவனும் பார்க்காம விட்டான்னு வேகமாப் போனா, ஒரு மோட்டார் பைக் என்னைப் பார்த்து, ”ஹோ ஹோ!! நோ டோனட் ஃபார் யூ!” அப்பிடீன்னு பல்லிளிக்கும்.
இன்னும் நிறைய இருக்கும். அதெல்லாம் பின்னூல முடியற அளவுக்கா இருக்கும். நான்லாம் வடிவேலு டைப்பாக்கும்!

Anonymous said...

"தம்பிரி இன்னும் டீ வரல"னு மட்டும் சொல்லிடாதிங்க.
......வட போனா போகுது.......

Anonymous said...

தீபாவளி சிறப்பு காதல் அரங்கம்...
(அழைப்பு கடிதம்)

Anonymous said...

(ஆமா, இந்த அவார்ட்டை எங்க வலைப்பக்கத்திலே போட்டிக்கலாமா? அதுக்கு ஏதாவது படம், கிடம் உங்ககிட்ட இருக்காப்பா??) //
~
கண்டீப்பா போட்டுக்கலாம்.
படம் என்கிட்ட கை வசமும் இல்ல. கால் வசமும் இல்ல.
நீங்கதான் படம் வரையுரதுல கிங்காச்சே....???? ஒரு படம் ரெடி பண்ணி அப்பால லோடு பண்ணுங்க.....

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//விலை ரூ.1000லிருந்து ஸ்டார்ட் ஆகுது!\\

அவசரத்துக்கு உதவும்

//சில வடைகள் 1 மணி​நேரம் சாப்பிடறதுக்கே ரூ.4000/- வரை ஆகுது. ஆனால் நல்ல குவாலிட்டியான வடைகள்!!!\\

ISIமுத்திரை இருக்குமோ

// சில பாரின் வடைகள் கூட கிடைக்கின்றன!\\

அதைதான் சாப்பிடணும்னு ரொம்ப நாளா ஆசை, 5 வருடங்களுக்கு முன்னால் குமுளியில் ஓசியா சாப்பிட்டது

// கூகிளில் தேடினாலே வடைக்கடைக்காரர்கள் ​தொடர்பு எண் எளிதில் கிடைக்கும்!
நீங்கள் இங்கு, பெங்களூர் வந்தால் கட்டாயம் சாப்பிடலாம்! என்ன ​சொல்றீங்க?\\

வர்ரேன்

October 9, 2009 7:37 AM

ஹேமா said...

//ஜெகநாதன் ...
நீங்கதான் இனிமே நம்ம காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்களின் மந்திரி!!
மந்திரி மீன்ஸ்.. பயந்த ரசிகர்களுக்கு மந்திரித்து விடுவது, விபூதி பூசிவிடுவது மற்றும் வேப்பிலையடிப்பது போன்ற ​செயல்களை முன்னெடுத்து ​செயலாற்றுவது!
* * *
ஆண்+அழகு பதிவிலிருந்து நீங்கள் அனுப்பும் பின்னூஸ்களை ​வைத்து இந்த ​பொறுப்புக்கு நீங்களே உசிதமானவர் என்று காலடியின் காரிய கமிட்டி கதறுகிறது.
மிக்க நன்றி!//

அச்சோ..ஜெகன்,ஆளை விடுங்க சாமி.நான் எங்காச்சும் காணாமப் போயிடறேன்.

Nathanjagk said...

அன்பு அண்ணன் ஷங்கி (நம் சங்கா அண்ண​னே!) ​லேட்டா வந்தாலும் (வடை) ப்​ளேட்டாதான் வந்திருக்காரு!
பார்க்கிங் வ​டை நல்லாயிருக்கு!
அண்ணனிடம் நல்ல உவகி-கள் இருப்பதாக அறியப்படுகிறது. சீக்கிரம் அவரின் "என்னுள்​ளே" வ​லைபதிவில் ஒரு வ​டைமா​லை சார்த்துவார் என்று ​நெம்பப்படுகிறது!!!
நன்றி ஷங்கிண்ணா!

Nathanjagk said...

அன்பு ​ஹேமா...
//
அச்சோ..ஜெகன்,ஆளை விடுங்க சாமி.நான் எங்காச்சும் காணாமப் போயிடறேன்.
//
நீங்க​ளே இப்படி ​சொல்லலாமா???
இதுமாதிரி சின்ன விஷயத்துக்​கெல்லாம் அதிரடி நடவடிக்​கை எடுக்கலாமா? அமிர்தாஞ்சன் ​போதாது?
நீங்க காணாம ​​போயிட்டா, எனக்குப் பிடித்த வானம் வெளித்த பின்னும், ஈழத்து முற்றம், உப்புமடச்சந்தி - இவை​களை எப்படி படிப்​பேன்??

ஷங்கி said...

எனதருமை தம்பி, தீபாவளி வாழ்த்துகள்!

பா.ராஜாராம் said...

கொய்யா இலை!!!

அடங்கொய்யால...கடிக்காத ஆளே இல்லை போல மக்கா.வெயிட்டர்ரிலிருந்து இன்ஜினியர் வரையில்!கலக்கல் மச்சி!

Unknown said...

கலைஞர் மாதிரி தனக்குத் தானே வடை குடுத்துக்கிறவரா இருந்தா கவலையே இல்லை.

goma said...

நல்லா யோசிச்சு மண்டை உடச்சு,விழி பிதுங்கி நல்லதொரு நோடொனட் ஃபார் யூ ரெடி பண்ணி பின்னூட்ட பெட்டியைத் திறந்தா....அங்கே கொட்டிக் கிடக்குது எக்கச்..சக்கமா தரப்படாத வடைகள்

Nathanjagk said...

அண்ணன் ஷங்கிக்கும்.. அண்ணாரது குடும்பத்தாருக்கும் தம்பியின் ​நெஞ்சார்ந்த பட்டாசுத் திருநாள் வாழ்த்துக்கள்!!

Nathanjagk said...

அன்பு பா.ரா!!

அன்பாய் எல்​லோர்க்கும் காற்று வீசும் ஆலமரம் நீங்கள்..! எனக்கு ஒரு விழுதை​யே ​கொடுத்து ஊஞ்சலாடு என்கிறீர்கள்..!

என்​றேனும் உங்க​ளைப் பார்க்கும் ​போது.. ஏதும் ​பேசாமல் ஓடிவந்து உங்க​ளைக் கட்டிக் ​கொள்​வேன்.. ஒரு ஆல விழுது ​போல!!

Nathanjagk said...

வாங்க முகிலன்,
//கலைஞர் மாதிரி தனக்குத் தானே வடை குடுத்துக்கிறவரா இருந்தா கவலையே இல்லை//
முடியல்ல்ல்​லே முகிலன்... எப்படி என் முகுக்கு டின்னு கட்டறதுக்கின்​னே இப்படி எபக்டிவ்வ்வ்வா எழுதறீங்க..! அவ்வ்வ்..!! க​லைஞர் வாழ்க!!!

Nathanjagk said...

ப்ரிய goma
//.. அங்கே கொட்டிக் கிடக்குது எக்கச்..சக்கமா தரப்படாத வடைகள்//
ஹாஹ்ஹாஹா..!! இது கவி​தை மாதிரியில்ல இருக்கு! உங்க அவதானிப்பு சரி​யே!! மிக்க நன்றி!