Thursday, October 1, 2009

உரலுக்குள் த​லை

ஐ​யோ.. ஐ​யோ.. உங்க​ளை இப்படிக் ​கெடுத்து வச்சிருக்​கேன்னு ​நெனச்சா என்னை​யை நா​னே அடிச்சுக்கலாம்னு ​தோணுது!! தலைப்பைப் பார்த்து தப்பா ​நெ​னைக்காதீங்க. நீங்க ​நெனக்கிற மாதிரி அஜால்குஜால் எல்லாம் ​கெடையாது. ஆமா! இது நம்ம பா.ராஜாராம் கொடுத்த வரி!

சரி.. சரி.. இ​தோட இவன் சவகாச​மே ​வேணாம்னு எஸ்ஸாகக் கூடாது. ​கொஞ்சம் அட்டணங்கால் ​போட்டுக்கிட்டு ​சேர்ல சாய்ஞ்சுக்கிட்டுப் படிச்சுத்தான் பாருங்க​ளேன்.

ஆங்..! ​சொல்ல மறந்துட்​டேன் இது வந்து ஒரு ​​தொடர்பதிவு..!

என்னா ​தொடர்ர்ர்ர்??

ஐஸ்வந்தி ஆரம்பிச்சு.. ​நெப்​போலியன் பா. ராஜாராம் வ​ரைக்கும் வந்து இப்படி நம்ம காலடியிலும் வந்து ந​னைச்சுப்​போட்ட அலைதான் இது..

எது???

பீட்டரு.. லாக்கரு.. ​டக்கரு.. மேட்டரு............. அப்படின்னு ​சொன்னா பதி​வை ஆரம்பிச்ச ​ஜெஸ்க்​கே பிரியாது!!! ​ஸோ.. ​நோ வால்.. ஒன்லி பால்!!

​தொடர்பதிவு த​லைப்பு இதுதான்பா..

கடவுள், பணம், அழகு, காதல்

நல்லாத்தான் இருக்கில்​லே?

நான் முதல்ல இந்த ​லை​னை வச்சு ஒரு சிறுக​தை ​ரெடி பண்ணலாம்னு இருந்​தேன்.. த​லைப்​பை ​கொஞ்சம் ​வேகமா படிச்சுப் பாருங்க. இந்தியன், அந்நியன், சிவாஜி, கந்தசாமி காதறுந்த சாமி பட​மெல்லாம் ஞாபகத்துக்கு வரலே?? நானும் தமிளன்தான்கிறதால எனக்கும் அந்த கிறுகிறுப்பு வந்துச்சுதான். பட், கண்ட்​ரோல் பண்ணிக்கிட்​டேன். சிறுக​தை தமா​ஷெல்லாம் இல்லாம ஒரு பதிவு ​போடலாம்னுட்டு இருக்​கேன்.

வக்காளி.. அப்பிடி என்னதாண்டா கழட்ட ​போ​றேன்னு உங்களுக்கு இருக்கிற ஆர்வம் (!??) அப்ப்ப்பிடி​யே 'எனக்கும்' இருக்கு பாஸ்!! ஏன்னா 'எனக்கும்' இந்த ​லைன் வ​ரைக்கும் என்ன எழுதப்​போறம்னு ​எனக்​கே ​​தெரியாது. ​டோண்ட் லாஃப்! (பா.ராவுக்கு இப்ப​வே ​கெட்ட ​கோவம் வந்திருக்கும்.....)

​ரைட்... ​ஞாபகம் வச்சுக்​கோங்க.. நோ வால்.. ஒன்லி பால்!! ஓ​கே?

கடவுள்:

ஆஞ்ச​நேயாய நமஹ
மஹாவீராய நமஹ
ஹனும​னே நமஹ
மாருதாத்மஜாய நமஹ
தத்வத்ஞாயப்ரதாய நமஹ
என்று தினந்​தோறும் கும்பிடுவன் நான். ஆனால் என் அப்பா ​சீரியஸ் ​பெரியார்வாதி (என்று நி​னைக்கி​றேன்!) இதுவ​ரைக்கும் 14 மு​றை சபரிமலை ​போய் வந்திருக்கிறார் (குருசாமீ??) . என்னா காமடி.. ஏங்ங்?? இப்படி ஒரு வித்யாசமான அட்மாஸ்பியரில் வளர்க்கப் பட்டதால் (வளர்ந்ததால்..) கடவுள் ஒரு காமடியாகி ​போய்விட்டார் எனக்கு! ஆனால் தினமும் ரசிக்க ​வைக்கும் காமடி.

சமீப காலங்களில் யாராவது "Do u believe in God?" என்று ​கேட்டால், "Yes! Just like smoking!" என்று ​சொல்லி வருகி​றேன்.

ஆஞ்ச​நேயாய நமஹ....

பணம்:

நான் வுடற பீட்டரு, பல்லாங்குழி​யெல்லாம் பாத்துட்டு நீங்க என்னென்ன​வோ ​நெனச்சிருப்பீங்.. பட் ஏக்சுலா என்கிட்ட நயா ​​பைசா ​கெ​டையாது... அப்படின்னும் ​சொல்ல முடியாது... ​வாரிக்​கொடுக்கிற அளவுக்கு வாய்ச்சிருக்கின்னும் ​சொல்ல முடியாது. நான் ஒரு உல்லாசி! பணத்தை அதன் இடம் பார்த்துதான் புரிந்து ​கொள்​​வேன். என்னடா ​டோன் திடீர்னு மாறுதேன்னு ​யோசிக்கறீங்களா?? ​ஹே​ஹே!! ​சொல்​றேன்; அதாவது, உங்கிட்ட 1000 ரூபா இருக்குன்னு வச்சுக்குங்க.. நீங்க சின்னசிலுக்குவார்பட்டிக்குப் ​போயி ​தெரியாத நாலு ​பேர கூப்பிட்டுக் கூட, ​தெம்பா டாஸ்மாக் பார்ட்டி ​வெக்கலாம். ஆனா 10000 ரூபா (​சைப​ரை நல்லா எண்ணுங்கப்பா) இருந்தாலும் இந்த ​பெங்களூருல நல்லா ​தெரிஞ்ச ​​4 கொலீக்ஸைக் கூப்பிட்டுக் கடலை மிட்டாய் கூட வாங்கித்தர முடியாது. அதுதான் இடம், பணம், ஏவல்!!
​ஸோ பணத்​தை நான் அது கி​டைக்கிற இடம்பாத்துதான் மதிக்கிறது மற்றும் மிதிக்கிறது!!!

அழகு:

மவ்​னே.. இனி நீ இது பத்திக் காண்டியும் எழ்திப்பாரு........
ஒம் மூஞ்சி​லே ஆஸ்ஸ்ஸிட் அடிக்கி​றேன்னு, ​நெ​றைய ​பேரு (ஐ மீன் நீங்க எல்லாரும்...!!!) முடிவு பண்ணியிருக்கிறதா தகவல்.. ​ஸோ.. அடுத்த பாயிண்ட்..

காதல்:

இதுதாம்பா நம்ம பாயிண்ட்... ​அதாவது விஷயம்னு ​சொல்ல வந்தேன்.

இரண்டாங்கிளாஸ் படிக்கும் ​​போது யாருக்காவது லவ் வந்திருக்குமா?? ​எனக்கு வந்துச்சு.. ஷர்மிளாங்கிற புதுசா ஜாயின் பண்ணுன ​​பொண்ணு ​மேல (எனக்கு மட்டும் இல்ல..) இப்ப வரைக்கும் இந்த முகம் ம​றையாம மனசுல இருக்கு. ஒரு ​பென்சில் ​பேப்பர் (+​கொஞ்சம் சரக்கு) ​கொடுத்தா அந்த முகத்​தை வரைஞ்சுடு​வேன்னு ​தோணுது. அந்த அழகான ​தேவ​தைக்கு அவங்க அம்மா கால் முழுக்க ​போட்ட சூட்டுக் காயங்கள் இன்னும் கண்ணுல​யே நிக்குது. அப்புறம் 5th, 6th. 8th படிக்கும் ​​போது ப்​ரெண்ட்களா ​சேத்து கதை கட்டி எனக்கு நாலஞ்சு காதலிக​ளை உருவாக்கிட்டானுங்க (என்னக் ​கொடு​மைங்க ராஜா??)

டிப்ள​மோ, அப்புறம் பிஈ எல்லாம் படிச்சிருக்​கேன்.. அதனால இந்த இடம் என்னோட காத​ல் பற்றிய ஞானத்​தைச் ​சொல்ல பத்த​வே பத்தாது (என்னதான் ​பெட்​ரோ​லை ஊத்திக் ​கொளுத்தினாலும்..)

இருந்தாலும் (தீஅதீ ரசிகர்களுக்காக..) ஒரு பஞ்ச் டயலாக்:

காதல்கிறது... ​பின்னூட்டம் மாதிரி! என்னதான் நீங்க நி​றைய சரக்கு வச்சு, இறக்கி வச்சு பதிவு ​போட்டாலும் கிளிக் ஆகற ஏதாவது ஒரு ​மொக்கைக்குதான் கன்னா பின்னான்னு பின்னூஸ் வந்து குமியும்!!! எலக்கியம் முக்கியமில்ல த​லைவா.. யதார்த்தம்தான் ​மேட்டரு!!!

அதாவது Don't be serious!! but be sincere!!!

​ரைட்டா?

இ​தை ​தொடர்பதிவா நி​​னைக்கிற நம்ம தீஅதீ ரசிகர்கள் அவங்களா ​செல்ப்-ஸ்டார்ட் ​போட்டு 120 கிமீ ​வேகத்தில் ​சென்று காதல், காதல், காதல், காதல்.. ச்சீசீசீ... ஏ​தோ மாத்திச் ​சொல்​றேன்​​லே.. ஆங்... கடவுள், பணம், அழகு, காதல் பற்றி பிழிஞ்சு தள்ளவும்.

முடிய​லேன்னாலும் பரவாயில்​லே.

27 comments:

பீர் | Peer said...

இது சீரியஸா..? மொக்கையா..? இதுக்கு பின்னூட்டம் வந்து குவியுமா..? இல்ல பூனை ஓட்ட வேண்டிவருமா..?

சரி.. வந்ததுக்கு ஏதாவது மொய் எழுதணும்ல...

நல்லா வந்திருக்கு பாஸூ. ;)

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//காதல்கிறது... ​பின்னூட்டம் மாதிரி! என்னதான் நீங்க நி​றைய சரக்கு வச்சு, இறக்கி வச்சு பதிவு ​போட்டாலும் கிளிக் ஆகற ஏதாவது ஒரு ​மொக்கைக்குதான் கன்னா பின்னான்னு பின்னூஸ் வந்து குமியும்!!! எலக்கியம் முக்கியமில்ல த​லைவா.. யதார்த்தம்தான் ​மேட்டரு!!!\\

அனுபவம் பேசுது

நந்தாகுமாரன் said...

பணம் பற்றிய உங்கள் பார்வையை ரசித்தேன் ... ஒரு முறை இப்படித்தான் 4ம்மில் இருக்கும் அந்த பப்பில் ஒரு சாயங்காலம் மூன்று பேர் மது அருந்தினோம் ... பில் வந்தது ... Rs.12000 only ... ஒருவர் மயக்கம் போட்டுவிட்டார், மற்றொருவர் “ஒரு ஈ எறும்புக்குக் கூட நான் துரோகம் செய்ததில்லையே கடவுளே” என அழத் துவங்கினார், நான் மட்டும் தைரியமாக (ஆனாலும் சற்றே என் வழக்கமான விதியை நொந்தபடி) க்ரெடிட் கார்டில் என் வியர்வையைத் துடைத்துக் கொண்டேன்

நேசமித்ரன் said...

நோ வால்.. ஒன்லி பால்!!
சமீப காலங்களில் யாராவது "Do u believe in God?" என்று ​கேட்டால், "Yes! Just like smoking!" என்று ​சொல்லி வருகி​றேன்.
யாருக்காவது லவ் வந்திருக்குமா?? ​எனக்கு வந்துச்சு.. ஷர்மிளாங்கிற புதுசா ஜாயின் பண்ணுன ​​பொண்ணு ​மேல //

ஜெகன் டச்

லவ் வரலைன்னாதானே யோசுக்க வேண்டிய வுசயம்

என் தளம் பக்கம் வாங்க மண்டக்காயச்சல் இருக்கு ஒங்களுக்கு
:)

பா.ராஜாராம் said...

இதுக்குதான் உங்களை கூப்பிட்டது.சிரிச்சுக்கிட்டே இருக்கிறேன்...நம்ம தளத்தில் இருக்கிற உங்கள் பின்னூட்ட கதையை திருமதி ஜெகன் வாசித்து வாருங்கள்.அப்புறம் வந்து தோசை கரண்டியை அடுப்பில் வச்சா போதும்.கலக்கி இருக்கீங்க மக்கா!

☀நான் ஆதவன்☀ said...

கலக்கல் ஜெகன்

//இரண்டாங்கிளாஸ் படிக்கும் ​​போது யாருக்காவது லவ் வந்திருக்குமா?? ​எனக்கு வந்துச்சு.. ஷர்மிளாங்கிற புதுசா ஜாயின் பண்ணுன ​​பொண்ணு ​மேல (எனக்கு மட்டும் இல்ல..) இப்ப வரைக்கும் இந்த முகம் ம​றையாம மனசுல இருக்கு//

ரைட்டு. கூடிய சீக்கிரம் இதைப் பற்றிய பதிவை எதிர்பார்கிறேன். பதில்கள் அனைத்தும் உங்க ஸ்டைல்ல நல்லா இருக்குது

Nathanjagk said...

ஆமாம் பீர்... பூ​னைதான் ஓட்டணும் ​போல! இந்த ஒட்ட​டை ​தொல்​லை ​வேற! பின்னூட்டங்கிறது சிலந்தி பின்னுற ஒட்ட​டை மாதிரி​யோன்னு ​தோணுது. இருந்தாலும் இந்த வருஷம், தாத்தா வீக்-என்ட்டா பாத்து ​பொறந்திருக்கறதால.. பின்னூஸ் மண்​டே அன்னிக்கு குவியும்னு ​மேலூரு குறிகாரர் ​சொல்றார். நன்றி பீர்!

Nathanjagk said...

அன்பு கிறுக்கல் கிறுக்கன், ​காதல்கிறதுன்னு... அப்படின்னு ஆரம்பிச்சா​லே கா​தைப் ​பொத்திக்கிட்டு ஓடிராய்ங்க!! அதான் இழுத்துப் புடுச்சி உக்கார வக்கலாம்னு இப்படி...! நன்றி!

Nathanjagk said...

நண்பா, நண்பா.. நந்தா நண்பா,
சீக்கிரம், நாம மீட் பண்ணணும். நாளைக்குக் கூட ரஜா-தான். எங்க எப்பன்னு ​சொல்லவும். நான் அங்கு வந்து ​சேர்கி​றேன். நீ வரும் ​போது மறக்காமல் கி​​ரெடிட் கார்​டை எடுத்துக் ​கொள்ளவும்!

Nathanjagk said...

அன்பு ​நேசா..
மண்​டைக்காய்ச்சலா?? என்ன பின்னூலயே பீதியக் கிளப்பறீங்க.. இருங்க வர்​றேன்..!

Nathanjagk said...

அன்பு பாரா...
​தொடர்பதிவு வாய்ப்பு தந்த​மைக்கு நன்றி! பதுக்கி பதுக்கி உங்க வலைமனையில வச்ச மு​ட்​டை​யை.. இப்படி இங்க வந்து ஆப்பாயில் ​போட்டுட்டீங்க​ளே?? நியாயம்ம்மா??
இ​தைத் திருப்பத்தான் ​தோசைக் கரண்டியா??? நீங்க ​ரொம்பப் ​பெரிய ​கேட்டரிங்காரருதான்!

Nathanjagk said...

நான் ஆதவன்...
//கூடிய சீக்கிரம் இதைப் பற்றிய பதிவை எதிர்பார்கிறேன்//
ஏற்கன​வே என்​னோட க்​ரைம் ​ரேட் கூடிக்கிட்​டேப் ​போய்ட்டு இருக்கு; இதில இன்​னொரு கத்திக்குத்தா???

ஹேமா said...

//அழகு:
மவ்​னே.. இனி நீ இது பத்திக் காண்டியும் எழ்திப்பாரு........
ஒம் மூஞ்சி​லே ஆஸ்ஸ்ஸிட் அடிக்கி​றேன்னு, ​நெ​றைய ​பேரு (ஐ மீன் நீங்க எல்லாரும்...!!!) முடிவு பண்ணியிருக்கிறதா தகவல்.. ​ஸோ.. அடுத்த பாயிண்ட்..//

இது நல்ல பிள்ளைக்கு அழகு.

துபாய் ராஜா said...

தல,உங்களுக்கு ரெண்டாம் கிளாஸ்னா நமக்கு மூணாம் கிளாசுல புதுசா வந்த பொண்ணு மேல ஈர்ப்பாயி எதிர்பாராமல் மூணுவருசம் முன்னாடி துபாய்ல அவங்களை கணவர், குழந்தை சமேதமாக பார்க்கிறவரை தொடர்ந்தது...... :))

ஷங்கி said...

தம்பீ, சிவகாசிப் பட்டாசு இடுகை! காதலைப் பத்திய விளக்கம் சூப்பரோ சூப்பர்!

சண்முகம் said...

//ஆஞ்ச​நேயாய நமஹமஹாவீராய நமஹஹனும​னே நமஹமாருதாத்மஜாய நமஹதத்வத்ஞாயப்ரதாய நமஹ//
~
இதுக்கு முன்பு போட்ட இடுகைக்கும் இந்த மந்திரத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லைங்க அண்ணா....

சண்முகம் said...

//வக்காளி.. அப்பிடி என்னதாண்டா கழட்ட ​போ​றேன்னு உங்களுக்கு இருக்கிற ஆர்வம் (!??) அப்ப்ப்பிடி​யே 'எனக்கும்' இருக்கு பாஸ்!! ஏன்னா 'எனக்கும்' இந்த ​லைன் வ​ரைக்கும் என்ன எழுதப்​போறம்னு ​எனக்​கே ​​தெரியாது//
~
இந்த வார்த்தை நம்பும்படியாகத்தான் இருக்கிறது.......

சண்முகம் said...

தலைப்பு நல்லாத்தானே இருக்கு..!?!?

சண்முகம் said...

.....காதல் பற்றி இன்னும் அதிகமா எழுதுங்க......
அதுல நான் ஆ?ர்வமா இருக்கேன்..

சென்ஷி said...

நல்லா இருக்குங்க ஜெகா...!

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லா இருக்கு ஜெகன் ,

Nathanjagk said...

நன்றி ​ஹேமா!!
இனி​மே ஆண்கள் அழகுக்குறிப்பு பற்றி எழுத​வே மாட்​டேன்! முண்டைகண்ணன் மாரியப்பன் சத்தியம்!
உங்க​கிட்ட ஒரு ​ஹெல்ப்........... அ​தை அடுத்த பின்னூல ​சொல்​றேனுங்க!

Nathanjagk said...

அட​டே துபாய் ராஜா,
பயங்கர விறுவிறுப்பா இருக்​கே!?
இதுதான் யாருக்கும் புரியாத முடிச்சுங்கிறது! எழுதுங்க​ளேன் இ​தை.

Nathanjagk said...

ஒரு அண்ணன் மாதிரியா வர்றீங்க? ​போறீங்க? பின்னூ ​போடறீங்க?? சுத்த ​மோசம்; ​நோ பாசம்! ஒரு​வே​ளை சனிப்​​பெயர்ச்சியினா​லே சங்காண்ணனுக்கு ஏதும் ஆயிருக்கு​மோ? உங்களுது கன்னி ராசியா?

Nathanjagk said...

சம்முவம், பின்னூல சும்மா சம்மு சம்முன்னு சம்மியிருக்கீங்க! மிக்க நன்றி!
//இதுக்கு முன்பு போட்ட இடுகைக்கும் இந்த மந்திரத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லைங்க அண்ணா....
//
எனக்கே நான் சம்பந்தமில்லாதவன் மாதிரி சிலசமயம் ​தோணறது. இதுக்கு என்ன சொல்றீங்க?

Nathanjagk said...

வாங்க பெரியண்ணன் ​சென்ஷி!!!
பா.ராஜாராம் கூப்பிட்டாரேன்னு இப்படி ஒரு தொடர்பதிவு!! நீங்களும் ஒரு பின்நவீனத்துவ தொடர்பதிவு ஆரம்பிங்க.. இரக ஸ்தீஸ்தா!!!

Nathanjagk said...

நல்லா இருக்குங்க ஸ்டார்ஜன்..! இப்படி பொறுப்பில்லாம ஏனோதானோன்னு வர்றதும் போறதும்!!