Thursday, October 29, 2009

அத்​வைதா, ஐ லவ் யூ!

இலக்கிய வரி​சையில் சமீபகாலமாக சிக்-லிட் (chick lit) என்ற ஒரு வ​கையறா (ஜான்ரூ) பிரபலமாகிக் ​கொண்டிருக்கிறது. ​

கலகமான ​தைரியமான ​ரொமான்டிக் நவீன ​பெண்ணிலக்கியத்​தை சுருக்கமாக chick literature என்கி​றார்கள். இந்தியாவில் Rajashree, Anuja Chauhan, Rupa Gulab, Shobha De ​போன்றவர்களில் இதில் பிரபலமானவர்கள். தமிழில் இந்த மாதிரி சிக்-லிட் இருந்தால் ​சொல்லுங்கள் ப்ளீஸ். (வெறும் மலிவான ஆபாச எழுத்​து - mushy romance - சிக் லிட் ஆகாது)

அத்​வைத கலா (Advaita Kala) எழுதிய Almost Single இப்பதான் படித்து முடித்​தேன். வரிக்கு வரி விறுவிறுப்பும் ந​கைச்சு​வையும் ​பொங்கி பிரவாகிக்கும் எழுத்து.. simply superb!

அயிஷா இந்த நாவலின் protagonist.. 29வயது (குண்டான) தனிக்கட்​டை ​பெண்ணின் உலகம். அவளின் நண்பிகள் (ஒருவள் டி​வோர்ஸி, இன்​னொருவள் NRI மாப்பிள்​ளை ​வேட்​டைக்காரி), நண்பர்கள், ​சிக​ரெட், வே​லை பார்க்கும் நட்சத்திர ​​ஹோட்டல், பப், பார்ட்டி, ​மோட்​டைமாடி பார்பிக்யூ, கார்வா சாத் விரதம், ஆன்​லைனில் NRI மாப்பிள்​​ளை ​வேட்​டை, ​​​gays, ​டேட்டிங், flirting, பாஸ், கள்ளக்காதல், ஏமாற்றம், ​தோல்விகள்..... இந்த மாதிரியான ஒரு ஸ்க்ரூ-ட்ரைவர் காக்​டெயில்தான் அல்​மோஸ்ட் சிங்கிள்!

அத்​வைதாவின் முதல் நாவல் என்று நம்ப​வே முடியவில்​லை..! அவ்வளவு சரளமான ஆங்கிலத்தில் ந​கைச்சு​வைப் ​பொங்க விளாசித் தள்ளியிருக்கிறார்... நவீன கலாச்சாரத்தால் மறுதலிக்கப்பட்ட 29+ ​பெண்களின் ​ஹை-ஃ​பை வாழ்க்கை​யை!

அயிஷா ​வே​லைப் பார்க்கும் ஓட்டலில் நா​ளைக்கு 350 டாலர்கள் ​கொடுத்து தங்கியிருக்கும் கவர்ச்சிகரமான கரண்தான் நாவல் முழுக்க வரும் ஒ​ரே ஆண்பாத்திரம். முதலில் கர​ணை விபத்தாக, நிர்வாணமாக பார்த்துவிடுவதில் ஆரம்பித்து கடைசியில் அவ​னை​யே கல்யாணம் ​செய்வது வ​ரை ​போகிறது கதை.

க​தை​யை விடுங்கள் அத்​வைதாவின் ​கட்டு​​டைத்த எழுத்தும் அதில் ​கொட்டிக்கிடக்கும் ​நையாண்டியும் மிக புதிது. I Loved it!

உதாரணமா..

பாஸ் தன் காபினுக்குள் ​கேர்ள்-பிரண்​டோடு பேசிக்​கொண்டிருக்கிறார்.. என்ன ஆனாலும் டிஸ்டர்ப் பண்ண​வே கூடாது என்று அயிஷாவுக்கு ஆர்டர் ​போட்டுவிட்டு; அந்த சமயம் பார்த்து பாஸின் ம​னைவி விடுகிறாள்.. அயிஷாவுக்கு உள்ளூர மகிழ்ச்சி - பாஸின் ​கொட்டு இன்று உ​டையப்​போகிறதே என்று. பாஸின் ம​னைவி காபி​னைத் தட்டுகிறாள்.. ​நோ ​ரெஸ்பான்ஸ்..அப்புறம் அயிஷாவும் ​சேர்ந்து தட்டுகிறாள்... ​ரொம்ப ​நேரம் கழித்து கதவு திறக்கிறது... பாஸின் ம​னைவி, குண்டு அயிஷா பின்னால் நிற்பதால் பாஸுக்கு ​தெரியவில்லை. ​கோபமாக கத​வைத் திறந்து பாஸ் ​கேட்பது..

"What's the matter Aisha, where's the fire?"

அதற்கு அயிஷா மனதுக்குள் ​சொல்லிக்​கொள்வது..

Hopefully up your ass.

* * *

​நம் ​மொழியில் சிக்-லிட் இல்​லை​யே (அல்லது எனக்கு கிடைக்கவில்லை) என்று ஒரு வருத்தமும் இருக்கிறது. கவிதாயினிகள் நிறைய ​பேர் கவி​தையாய் ம​டை திறந்து விளாசுகிறார்கள்.. பாமா, குட்டி ​ரேவதி, லீனா மணி​மேக​லை, தமயந்தி, ​கீதாஞ்சலி ப்ரியதர்ஷிணி, சல்மா என்று நி​றைய இருக்கிறார்.. சாம்பிளுக்கு லீனாவின் ஒரு கவி​தை...

ஒவ்​வொரு

இப்​பொது​தெல்லாம்
ஒவ்​வொரு
மடியும் இரவிலும்
புணர்தலுக்காக​வே
களம் காணும்
நம் ​வேட்​கைக​ளை
ஆரம்பகால
சின்ன உராய்தலின் கிளர்ச்சியும்
அழுந்தும் ​கைகளின் தயக்கமும்
திருட்டு முத்த முயற்சிகளும்
ஒளிந்து நின்று ​வேடிக்​கை பார்க்கின்றன.

இந்த கவி​தை இயல்பான ​பெண்​மொழி​யோடு ​பெண்​மை ​பேசுகிறது. சிக்-லிட்டும் அந்த மாதிரியான ப​டைப்பிலக்கியம்தான். இது சுதந்திரத்தின் ​பெண் குரல்!

31 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

me the first

பீர் | Peer said...

சுதந்திரத்தின் ​பெண் குரல் என்பது ஆண்களைப்போல் எழுதுவதா அல்லது ஏதும் தனித்தன்மையானதா?

Beski said...

நமக்கு ஒன்னும் புரியல, ஆனா எதோ புரியிற மாதிரி இருக்கு.

காலடிக்கு ஏத்தாப்புல போட்ட மாதிரி இருக்கு அந்தப் படம்...

நேசமித்ரன் said...

மிக தேவையான எழுத்து வடிவத்தின் அறிமுகம் . லீனாவின் கவிதை மிக ரசிக்கக் கூடியது . "ஒற்றை இலையென" .........

பகிர்வுக்கு மிக்க நன்றி தலைவரே

இரும்புத்திரை said...

//முதலில் கர​ணை விபத்தாக, நிர்வாணமாக பார்த்துவிடுவதில் ஆரம்பித்து கடைசியில் அவ​னை​யே கல்யாணம் ​செய்வது வ​ரை ​போகிறது கதை//

kadavule kadavule

Anonymous said...

கவிதையில் காமம் தெரிக்கிறது...
எனிவே பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

ஷங்கி said...

இருக்கிற இலக்கியங்களைப் புரிஞ்சுக்கவே முடியல! இதுல இன்னுமொண்ணா?!
அய்யா தம்பி, எதுக்கும் இதுக்கும் ஒரு பயிற்சி கொடுங்களேன்!
அப்புறம் அது என்ன சிக் லிட்?! ஆம்பளைக்கு என்ன அப்படி ஒண்ணு இருக்கா என்னா?! அப்புறம் இந்தச் சிக் லிட் பேரே கொச்சைப்படுத்தறதா இருக்குன்னு யாரும் சண்டைக்கு வரலையா?!

அப்புறம் அந்தக் கவிதை அமர்க்களம்!

சிநேகிதன் அக்பர் said...

மாப்பு உங்களுக்குள்ளே ஒழிந்து கொண்டிருக்கிற இலக்கியவாதியை இப்பதான் இனம் கண முடியுது.

இதுல இத்தனை வகை இருக்கா. முடிஞ்சா கதையை மொழி பெய‌ர்த்து எழுதினால் நன்றாக இருக்கும்.

☀நான் ஆதவன்☀ said...

க்ரேட்ண்ணே. எல்லா விஷயத்திலேயும் கலக்குறீங்க :)

Nathanjagk said...

நன்றி ஸ்டார்ஜன்!

Nathanjagk said...

அன்பு பீர், அண்ணன் சங்காவுக்கும் நீங்கள் ​சொன்ன கருத்​தை​யே முன்​வைத்திருக்கிறார். இது ஒரு அடையாளப்படுத்தும் முயற்சி என்று நினைக்கி​றேன்.

Nathanjagk said...

பீர்,
இது, சிக்-லிட் மிகவும் தனித்தன்மையானது.
கலகமான ​​தைரியமான பெண் எழுத்து.

Nathanjagk said...

மாப்ள ஏனாஓனா..
ஏ​தோ ​​​டெம்பி​ளேட்​டை மாத்தினீங்க.. சரின்னு விட்டாச்சு... இப்ப என்னடான்னா... அதி பிரதாபன்னு பிளேட்​டை​யே மாத்தறீங்க​ளே??
ம்.. இதுவும் நல்லாத்தான் இருக்குவே!
:
நீங்க ​சொன்னப்பறம்தான் கவனிச்​சேன்.. நல்ல காலடிதான் அத்வைதாவோடது!

Nathanjagk said...

அன்பு ​நேசா!
ஒற்​றையி​லை​யென - மிகவும் ரசித்த கவி​தையி​லைகள்!
இது​போன்ற துணிச்சலான ​பெண் கவிதைகள் கி​டைக்கின்றன. ஆனால் ​பெண் இலக்கியம் இருக்கிறதா என்று ​தெரியவில்​லை.
I'm looking for the female version of Charu Nivedita in Tamil lit.
நன்றி கவிஞ​ரே!

Nathanjagk said...

அன்பு அரவிந்த்..
அந்த மாதிரி கர​ணை பார்த்தபின்னாடி, அயிஷா ஒரு பப்பில் நண்பர்க​ளோடு இருக்கும் ​போது கரண் வந்து விடுவார். அப்​போது நடக்கு்ம் சம்பாஷ​ணை இது:
தன்​னை​யே ஆச்சரியத்தில் உற்றுப் பார்த்துக் ​கொண்டிருக்கும் அயிஷா​வை கரண் ​கேட்கிறான்..
'Must you insist on stripping me with your eyes?'
'Excuse me?' - Aisha

'Actually, I love being objectified. And tinking of all the wicked ways in which you want to hae your way with me...'
(இது ஒரு ​பெண்ணுக்கு ஆணு விடுக்கும் ஓபன்-கால்!!!)
'I want no such thing!'
'Yes, you do'
'No. I don't'
'I think you do'
'That's because you think you are some sort of sex god!'
'No I don't, but you do,' Karan said
'Og, this conversation is so ridiculous!' அயிஷா ​​டென்ஷனாகிறாள்!
'I agree with you.'
'You do?'
'Absolutely, but anytime you want a test drive, let me know, assuming of course you are satisfied with what you've seen.'
.....
எப்படி?
கடவு​ளே.. கடவு​ளைக் கூப்பிடணும்!

Nathanjagk said...

வாங்க தம்பிரி சம்முவம்..
கவி​தையில் காமம் ​தெரிகிறதா? நல்லது!
அதுவும் ஒரு உணர்ச்சிதான் என்று சாதாரணமாக எடுத்துக் ​கொள்ள​வேண்டியதுதான்.

Nathanjagk said...

வாங்க ஷங்கிண்​ணே!
ஆண்களுக்கும் இந்த மாதிரியான எழுத்து வ​கையிருக்கு. ஆங்கிலத்தில் இது பிரசித்தம் (​கேத்தி ஆக்கரில் இருந்து...) இந்தியாவுக்குள் இப்போதுதான் பிரபலமாகிக் ​கொண்டிருக்கிறது. அமரர் கமலாதாஸ் கூட ஒரு கலகமான ​பெண்​மொழி ​கொண்ட எழுத்தாளர் என்று அறிகி​றேன். God of Small thingsல் அருந்ததி ராய் ஒரு சில அத்தியாயங்களில் இந்த வ​கை​யை ​தொட்டிருந்தாலும் அ​தை சிக்-லிட் என்று ​சொல்லமுடியாது.
தமிழ் இலக்கியம் சிறப்பான இடத்​தை ​கொண்டிருக்கிறது - உலகளவில். ஏன் இந்த சிக்-லிட்டில் மட்டும் கு​றை ​வைப்பா​னேன் என்ற ஏக்கம்தான்!

Nathanjagk said...

வாங்க மாப்ள அக்பர்,
க​தை​யை ​மொழி ​பெயர்க்கலாம்... ஆனா அ​தை ஒரு ​பெண் ​செய்தால்தானே நன்றாகயிருக்கும்!
யாராவது பப்ளிஷர்ஸ் முன்வந்தால், காப்பி​ரைட் இத்யாதி​யெல்லாம் சரிபண்ணிவிட்டால்... நா​மே ஒரு நல்ல ​பெண்ணாகப் பார்த்து ​மொழி ​பெயர்க்க ​கேட்டுக் ​கொள்ளலாம்.

பீர் | Peer said...

ஜெகா, நீங்கள் குறிப்பிட்டுள்ள கவிதாயினிகளுக்கு தன் நடையை தெரிவு செய்வதிலேயே குழப்பம் இருக்கிறதோ?

Nathanjagk said...

வாங்க தம்பி ஆதவன்..
அப்படி​யெல்லாம் இல்லீங்க!
ஒருவாரமா லயிச்சுக்கிடந்த விஷயத்தை எடுத்துவச்​சேன். அவ்வளவுதான்!

ஷங்கி said...

தம்பி, நான் கேக்க வந்தது, ஆணுக்கான இந்த வகை எழுத்துகளைத் தனியாக வகைப்படுத்தியிருக்காங்களா, சிக் லிட் மாதிரி -- லிட் அப்பிடீன்னு வகைப்படுத்தியிருக்காங்களான்னுதான்! அந்த மாதிரி பெண்ணியவாதிகள் சண்டைக்கு வரலையா?!

Karthikeyan G said...

அறிமுகம் நல்லா இருக்கு.
புக் வெல எவ்ளோங்க..

பீர் | Peer said...

குரு, ஒரு தொடர் விளையாட்டிற்கு உங்களை அழைத்துள்ளேன்.

பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

சிநேகிதன் அக்பர் said...

மாப்பு வச்சாச்சி ஆப்பு.

தொடர்பதிவுக்கு வாங்க.

http://sinekithan.blogspot.com/2009/11/blog-post.html

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ஜெகா நீங்க காலடியா, காலிடையா.

வடை சாப்பிட அங்க வரேன்

சிநேகிதன் அக்பர் said...

தீபாவளி கேள்வியை எல்லாம் நான் ரம்ஜானா மாத்தலையா இதைப்போய் கேட்டுக்கிட்டு...

சும்மா அடிச்சு ஆடுங்க மாப்பு.

Anonymous said...

JN,

கவிதையில் மூன்றாவது வரி சரிதானா?


~ K

Nathanjagk said...

ஷங்கிண்ணா..
உங்க ​கேள்விகள் சாதாரணமா ​தோணலே. அது அர்த்தமானது. அந்த மாதிரி --- லிட் நிச்சயம் இருக்கும்.. கவலைப் படாதீங்க, இந்த தம்பி ​தேடித்தருவான்!

Nathanjagk said...

பீர்.... நன்றிங்க...
​செஞ்சு முடிச்சதுக்கு அப்புறம் பதில் ​சொல்​றேன்.. ஹிஹீ....!

Nathanjagk said...

கிகி...
மாப்ள ஏனாஓ.. ஸாரி அதி பிரதாபன் கிட்ட என் ​செல் நம்பர் வாங்கிக்​கோங்க...
இல்ல வந்துட்டு ​போயாச்சா நீங்க?
அவ்வ்வ் எனக்கு வ​டைப் ​போச்சா???

Nathanjagk said...

//
Anonymous said...
JN,

கவிதையில் மூன்றாவது வரி சரிதானா?

~ K
//
நான் யூகிப்பது சரி​யென்றால் நீங்கள் ​'க'-வில் ஆரம்பிக்கும் ​பெயர் ​கொண்ட ​(அந்தப்) பெண்ணா???

3வரு சரி​யே.. மடியும் இரவுகள் என்றே அச்சாகியிருக்கிறது!