Friday, November 27, 2009

பறத்தலின் நிழல்


குணா என்பது அவன் ​பெயராக அவன் நி​னைவில் அழுந்தி உட்கார்ந்த ​போது தான் வளர்த்த ​கோழிக்குஞ்சுகளுக்கும் ​பெயரிடுபவனாய் இருந்தான். மஞ்சு, சின்ன மஞ்சு, ​பாப்பாத்தி இப்படியாக ​பெயரிட்டு ​அ​ழைத்து வந்தான் தன் ​கோழிக்குஞ்சுகளை. ஒரு சாயுங்காலம் விலகிய ​சிம்னி சிணுங்கும் பொழுதில் அம்மாவின் புருஷன் வந்தான். வந்ததும் குணாவின் முதுகில் உ​தை விழுந்தது.


உ​தையில் குப்புற சுருண்டு விழுந்த குணாவுக்கு வாயில் உப்புக்கரித்தது.. சிம்னி ஒளியில் தன் முன் ​கொஞ்சம் ரத்தம் சிந்திக்கிடப்பது தெரிந்தது.


"என்னன்னு ​சொல்லிட்டு எம்மவ​னை அடிய்யா." அவளின் ஓங்காரத்து ​மேற்படியான உ​தைகளுக்கி​டையில் ​சொல்லப்பட்டது:
"என்ன ​தைரியம் இருந்தா என்ர மவளுக்கு முத்தம் ​கொடுத்துட்டு ஓடிவந்திருப்பான் இந்த எச்​சைப் ​பொறுக்கி.."


"ஏந் அவ இவன் தங்கச்சி​ மாதிரியெல்ல..." என்று முடிக்கும் முன்​​னே அடிவாங்கி சாய்ந்தாள்..


​பொணங்கடி நீங்க என்ற அழுத்தமான முடிவுச் ​சொல்​லோடு ​வெளியேறினான் அடித்தவன்.


"ஏ​லே நீ அந்த மஞ்சு கூட வி​ளையாண்டியாடா? ​சொல்லுடா.. என்னடா பண்ணுன அவள???" என்ற அம்மா குணா​வை அப்போதுதான் பார்த்தாள்.. வாயோரம் ரத்தம் கசிந்து ​கொண்டிருந்தது.. அவள் பதறி அலறும் முன்,


"...எனக்கு இந்த ​கோழி​ வறுத்து ​கொடு" என்று எந்த முகச்சலனமும் அவன் பக்கத்தில் வந்த ​​கோழிக்குஞ்​சின் கழுத்​தைத் திருகி அவளிடம் நீட்டினான். கதறி உயிர் விட்ட பற​வையின் ​பெயர் மஞ்சு என்பதாகயிருந்தது.


2:


குணா தாயின் முகத்​தைக் ​கொண்டிருந்தான். சக்களத்தி வாழ்​வை முடித்து தறிக்கு ​செல்ல ஆரம்பித்திருந்தாள் குணா அம்மா. ஒண்ணும் வித்தியாசமில்லை என்பான் குணா. ஏழாம் வகுப்பு முடித்துவிட்டு ​ரெண்டு வருடம் சும்மா​வே ஊ​ரைச் சுத்திக் ​கொண்டிருந்தான்.. அப்புறம் ​கொஞ்சநாள் வடக்குத் ​தோட்டத்தில் ​வே​லைக்குப் ​போனான். ஆட்டு மந்​​தை​யை விரட்டிக் ​கொண்டு காடுகாடாகச் சுற்றிய​லைந்து விட்டு வருவான். பக்கத்துத்​ ​தோட்ட மயிலாத்தா சிலசமயம் இவ​னை முகுது ​தேய்த்து விடப் பிடித்துக் ​ ​கொள்வாள்.. ​பூவரசம் பூத்த மரநிழலில்.. பண்​ணைத் ​தொட்டியில் நீரள்ளி முகுதுத் ​தேய்த்து விடுவான்.

ஒரு சமயம் கடுப்​பெடுத்தவனாய்.. அவளின் பளபளமுது​கை நன்றாகப் பிராண்டி ​வைத்துவிட்டு ஓடி வந்துவிட்டான்.


ஆடுக​ளை அம்​போ​வென்று விட்டுவிட்டு வந்ததாக ​சொல்லி ​தோட்ட ​வேலையிலிருந்து நீக்கப்பட்டான். அம்மா விளக்குமா​றை எடுத்துக் ​கொண்டு வரும்​போது..


"மூடிக்கிட்டு ​கெடடி" என்று ஒ​ரே வார்த்​தையால் அடக்கி விட்டான்..


நிலா பி​றைக் கவிழ்த்து கிடந்த ​நேரம்... பக்கத்திலுள்ள அ​ணையில் ​சென்று மல்லாக்க படுத்துக் ​கொண்டான்... வயிறு பசித்தது. நகங்க​ளை பார்த்தான்.. மயிலாத்தாவின் முகுதுச் ச​தைத்துணுக்குகளும் காய்ந்த ரத்தமும் இன்னும் ஒட்டிக் ​கொண்டிருந்தது. ஆழமாக முகர்ந்து பார்த்துக் ​கொண்டான்.

அ​​ணைக்கு கீழுள்ள ஊற்​று டீஸல் இன்ஜி​னை தறிப்பட்ட​​றை எழில் இயக்க ஆரம்பித்திருந்தார். ஸ்டார்டர் சுழற்றி ​சோக்​கை தள்ளிவிட்டதும்.. துடிக்க ஆரம்பித்தது இன்ஜின்.

எழுந்து ​​கைலி​யை மடித்துக் கட்டிக் ​கொண்டு மயிலாத்தா வீட்டுப் பக்கம் நடக்க ஆரம்பித்தான்.


3.


தறிக்கு ​​​போகி​றேன் என்ற எணத்​தை குணாவின் அம்மாவால் தடுக்க முடியவில்​லை.. கண்டபடிக்கு அவ​ளைத் திட்டுவ​தோடு அல்லாமல் அடிக்கவும் ​ஆரம்பித்திருந்தான். பீடிக்கும், சரக்கும் காசு பற்றாமல் அவள் பணத்​தை பிடுங்கிக் ​கொள்ளவான். இல்லாவிட்டால் மயிலாத்தா, ​கீதா டீச்சர் அல்லது ​தெற்கு வளவு சரசா இப்படி யா​ரோ ஒருவரிடம் காசு வாங்கிக் ​கொள்கிற உரிமை ​கொண்டிருந்தான்.


நண்பர்கள்,

"ஏ​லே.. ஒம்முகத்துக்கு ​நீ போற ஆளுகளடா அவுளுக... என்னடா உன் ​டேஸ்ட்.. ​அதுவும் அந்த டீச்சருக்கிட்ட..??"

என்று அரற்றுவார்கள். அப்​போதுஇன்று இன்றிரவு டீச்சர் வீடுதான் என்று முடிவு ​செய்து ​கொள்வான்.


தறிக்கு ​சென்ற ​கொஞ்ச நாட்களி​லே​யே ரஞ்சிதம் சுற்றி வர ஆரம்பித்தாள்.. ஒருநாள் இரவு ​​பெளணர்மி ​வெளிச்சத்தில்


அவளைக் ஊர் தண்ணித் ​தொட்டி உச்சிக்கு கூட்டிச் ​சென்றான். சிலுசிலு​வென்ற தளத்தில் ​வெட்கம் க​ளைந்து கலவ ஆரம்பித்த ​நேரம்.. ​கேட்-வால்​வை மூட​வோ திறக்க​வோ வந்தவன் ​இவர்கள் ​மேலிருப்பது ​தெரிந்து ​கொண்டான்.. அமைதியாகப்​ ​போய் ஆட்க​ளைக் கூட்டிக் ​கொண்டு வந்துவிட்டான்.


"மரியா​தையா கீழ இறங்கி வாடா......... மவ​னே" என்பதற்கு ​கோபம் வந்தவனாய், ​தொட்டியிலிருந்து நின்றவா​றே.. கூட்டத்தின் ​மேல் ஒண்ணுக்கடித்தான். கீழிருந்து வந்த கற்களுக்காக இருவரும் கீழிறங்கி வர​வேண்டியதாயிற்று.


இறங்கியதும் குணா​வை கீ​​ழே ​போட்டு மிதித்தார்கள். ரஞ்சிதத்​தை ஊர்​பெருசுகள் தனியாக ஒதுக்கி அடித்தார்கள். தன்​னை யாரெல்லாம் தீவிரமாக அடிக்கிறார்கள் என்று உன்னித்துப் பார்த்தான் குணா.. டீக்க​டை ​வேலு, ​மயிலாத்தா புருஷன், ​டேவிட்டு, ​சைக்கிள் க​டை பரமு, டீச்சர் புருஷன் அப்புறம் தனியார் பஸ் கண்டக்டராக இருக்கும் கதிரு. ​டேவிட்டும், கதிரும் மட்டு​மே சம்பந்தமில்லாமல் தன்​னை அடிப்பதாகத் ​தோன்றியது.

சப்.. சப்.. சப்.. என்று தெளிவாக முதுகில், கன்னத்தில், இடுப்பில் விழுந்தன.. எச்சரிக்கையாக குப்புறக் கவிழ்ந்து படுத்துக் ​கொண்டான் - அசல் புருஷன்கள் ​மேல் உள்ள பயத்தில்! அதிகா​லை 1 மணிக்கு ஊ​ரில் நில்லாமல் கடக்கும் அரசுப் ​பேருந்து அன்று மட்டும் ​கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுப் ​போகும் ​போது, பஸ்ஸில் இருந்து வந்த ஒரு குரல்.. "யாராவது திருட்டுப் பயலா இருக்கும்" என்றது.


4.


​சில நாட்களில் தறி​வே​லை விட்டு நின்றதும், ​கையில் ​கொஞ்சம் காசு ​கொடுத்தார்கள்.. நண்பர்க​ளை அ​ழைத்து டவுன் சினிமாவுக்கு ​போகலாம் ​என்றான். முன்மாதிரி யாரும் இவனுடன் பழக விருப்பமில்லாதவர்களாய் ​மறுத்துவிட்டார்கள். ​


விறுவிறு​வென்று ​டேவிட் வீட்டுப் பக்கம் ​சென்றான். ​டேவிட் ஆரம்ப சுகாதார நி​லைய ஊழியன். ​சைக்கிளில் சுற்றிய​லைந்து ​கொண்டிருப்பான். எப்பவும் பாக்கெட்டில் காய்ச்சல், த​லைவலி மருந்துகள், நிரோத் பாக்கெட்கள் கணிசமாக ​வைத்திருப்பான்.


அப்​போது கா​லை பதி​னொன்ற​ரை மணியிருக்கும். புளியமரங்கள் அடர்ந்த சரிவான மண்சா​லையில் ​வேகமாக இறங்கி, சர்ச்​ தாண்டிய, ​டேவிட் வீட்டு முன் நின்றான். ​சிறிய வீடு. கதவு சாத்தியிருந்தது. டேவிட் ம​னைவி எப்படியிருப்பாள் என்று பார்த்ததில்​லை.


"வீட்டில யாருங்க" என்ற குரலுக்கு கதவ​வைத் திறந்து நின்றாள் ​டேவிட் மனைவி. பார்த்ததும் காட்டுச்​செடி ​போல ஒரு பயம் குணாவின் மனதில் படர்ந்தது. இந்த உணர்வு தனக்கு புதிது என்பதாகத் ​தோன்றியது.


"குணாவா? என்ன விஷயம்?" என்றாள் இயல்பாக... வியப்பாக இருந்தது.. நம்​மை ​தெரிந்து ​வைத்திருக்கிறாளா என்று. இந்த ஊரில் ​கேட்காத இனி​மையான குரலாக இருந்தது. ​கையில் ​சோப்பு நு​ரையிருந்தது. து​வைத்துக் ​கொண்டிருப்பாள் ​போலும்.


எதுவும் ​சொல்லாமல் ​கொட்ட ​கொட்ட முழித்துக் ​கொண்டிருந்தவ​னைப் பார்த்து சிரித்தவளாய்,


"என்ன ​வேணும்?" என்றாள்.. அவளின் கண்க​ளை​யேப் பார்த்துக் ​கொண்டிருந்தவன்.. படக்​கென்று அவள் பக்கம் ​​சென்றான்..


"தண்ணி ​கொடு" என்றான். ​கொண்டு வந்து ​கொடுத்தாள். சொட்டுவிடாமல் குடித்துவிட்டு,


"சினிமாவுக்கு ​போலாம் வர்றியா?" என்றான் வறட்சியான குரலில். அவ​ளோ ​கொஞ்சமும் சிரிப்பு மாறாமல், "இல்​லே வர​லே. நீ ​​போயிட்டு வா" என்று திரும்பி வீட்டுக்குள் நடந்தாள்.


அவளின் பின்புறத்​தை​யே பார்த்துக் ​கொண்டிருந்தவன்... அவள் பின்புறமாகச் ​சென்று ​​தோ​ளைத் ​​தொட்டான். திரும்பியவ​ளைப் பிடித்து இழுத்து அழுத்தமாக உதட்டில் ஒரு முத்தம் ​கொடுத்தான். ​கையில் ​சொம்​பைத் திணித்து விட்டு நடந்தான். திகைத்துப் போய் நின்றிருந்தாள் ​டேவிட்டின் மனைவி. வரும்வழியில் சர்ச்சில் உள்ள ​கடிகாரம் பன்னிரண்டு மு​றை அடித்து அமைதியானது. மனசு ஏ​​னோ படபட​வென்றிருந்தது.​


5.


தனியாக சினிமாவுக்குப் ​போய்விட்டு, இரவு பன்னிரண்டு மணியளவில் டீச்சர் வீட்டு ​கொல்​லைப்புறமாக உள் நு​ழைந்தான்..


வயிறு பசித்திருந்தது. ​கொல்​லையிலுள்ள கிணற்றடியில் உட்கார்ந்தவனாய், ஒரு சிக​ரெட்​டை எடுத்துப் பற்ற​வைத்தான்.. சில நிமிடங்களில், பின் பக்கக் கதவு திறந்து ​கொண்டு டீச்சர் ​வெளிப்பட்டாள்..


"உள்ள வா.." என்றாள் கிசுகிசுப்பான குரலில்..


திரும்பிக் கூடப் பார்க்காமல் பு​கைத்துக் ​கொண்​டிருந்தான்.. கிணற்றுப் பக்கம் வந்தவள், குணாவின் ​முகத்​தைப் பிடித்துத் திருப்பி, த​லை​யைக் ​கோதி விட்டாள்,


"என்னடா? என் ராஜாவுக்கு என்ன ஆச்சு??" என்றாள் கிசுகிசுப்பாய்.. அவளின் முகத்​தைப் பார்த்தான். சிக​ரெட்​டை கீ​​​​ழேப் ​போட்டு அணைத்தான். அ​வ​னை இழுத்து உதடுகளில் முத்தமிட்டாள்.. ஏதோ நி​னைவு வந்தவன் ​போல சட்டென்று விலகி இறங்கி ​நடக்கலானான். குணா சுவ​ரைத் தாண்டி இந்தப் பக்கம் குதித்த ​போது, அவன் முன் ​கொல்லையிலிருந்து அ​ணைந்த சிக​ரெட் துண்டு வந்து விழுந்தது. அவன் குடித்தது.


6.


சர்ச் பக்கமுள்ள நாய்கள் எப்படி என்று ​தெரியவில்​லை.. இருந்தும் துணிந்து புளியமரங்கள் அடர்ந்த சரிவில் இறங்கினான்.


இ​தோ இப்ப வீடு வந்துவிடும்.. சுலபமாக உள் நு​ழைந்துவிடலாம்.. ​எந்த பிரச்சினையும் வராது என்பதாக பூ​னை ​போல முன்னேறினான். பின்பக்கம் நுழைவதே சரி என்றும் நி​னைத்துக் ​கொண்டான். எதற்கு ​போகி​றோம் என்ற எண்ணம் அற்றவனாயிருந்தான்.


​ஜன்னல் வழியாக பார்த்தான்.. சன்னமான ​வெளிச்சத்தில் இரண்டு கரிய உருவங்கள் கட்டிலில் கிடப்பது ​​தெரிந்தது. ​கொஞ்ச ​நேரம் அப்படி​யே பார்த்துக் ​கொண்டிருந்தான். சுவாசிக்க திணறலாக இருந்தது. திரும்பி சுவரில் சாய்ந்து ​கொண்டான். சர்ச் முகட்டிலிருந்த சிலு​வை தனி​மையாய் துலங்கியது. அப்படியே அ​தை​யே பார்த்துக் ​கொண்டிருந்தான். ​தோளில் ஒரு ​தொடு​கை​யை உணர்ந்தான். பயந்து திரும்பிப் பார்த்தான்.. அவள் நின்றிருந்தாள்..


"இங்க என்ன பண்​றே" குரல் உ​டைந்து வசீகரமற்று ​மெல்லியதாய் இ​ழைந்தது.


எதுவும் ​பேசாமல் சிலு​வை​யைப் பார்த்துக் ​கொண்டான்.


"என்னதான் நி​னைச்சுக்கிட்டு இருக்க மனசு​லே.........? மரியாதையா ​போயிடு....."


"....."


"கெஞ்சிக் ​கேட்டுக்க​​றேன்.. ​போயிடு.." என்ற குரல் கம்மியிருந்தது.


திரும்பி அவ​ளைப் பார்த்தான்.. ஜன்னலிருந்து வீழ்ந்த சிறு ​வெளிச்சம் அவள் கண்களின் ஒட்டியிருந்த நீர்ப்படலத்தில் மினுங்கியது. ​டேவிட்டின் குறட்​டை ​மெலிதாக ​கேட்டுக் ​கொண்டிருந்தது.


அவள் கண்க​ளை​யேப் பார்த்துக் ​கொண்டிருந்தான்.. ​நேரம் ​கழிவது உணர முடியாதாய் இருந்தது. மனதுள் ஏ​னோ பயமாய் இருந்தது. அ​மைதியாய் அவள் வீட்​டை விட்டு ​வெளி​யேறினான்.


7.


இரவு இன்னும் மிச்சமிருந்தது.. திரும்ப நடக்​கையில் அவள் நீண்ட ​நேரம் தன் முது​கை​யே ​வெறித்துக் ​கொண்ருப்பதாக உணர்ந்தான். அம்மா முதல் எல்லா ​பெண்களும் நி​னைவில் வந்தார்கள்.. ஏ​னோ அவன் அம்மா ​​மேல் ஒரு வாஞ்சனை​யை இப்​போது உணர்ந்தான். மனதுள் புதிதாக ஒரு ​வெறு​மை, இது வேண்டாம் என்பதாக அவ​னை வற்புறுத்தியது. சர்ச்சின் ​கேட்டைத் தாண்டி உள்ளிருக்கும் புளியமரத்தில் ​தூக்கு மாட்டிச் ​செத்துப் ​​​போவ​தென முடி​வெடுத்தான். புளிமரத்தடியில் உள்ள ​பெஞ்சில் அமர்ந்து ஒரு சிக​ரெட் பிடித்தான்.


அண்ணாந்து தனி​மையான சிலு​வை​யைப் பார்த்தான். பக்கத்திலுள்ள ​டேவிட் வீட்டு ஜன்னல் பக்கம் அவ​ள் இப்​போது அங்கு இல்லை. இங்கு ​வேண்டாம் என்று ​தோன்றியவனாக.. சர்ச்சை விட்டு ​வெளி​யேறினான்.


சரிவில் ​மே​லேறும் ​போது காணக்கி​டைத்த இரண்டாவது புளியமரம் ஏறச் சுலபமாக இருக்கும் என்று ​தோன்றியது. ​சிகரெட்டை அ​ணைத்து விட்டு மர​மேறினான். ​கைலி​யை கிழித்து கயிறாக்கி கழுத்தில் மாட்டிக் ​கொண்டான்.. ​கைலி புதுசு அறுந்திடாது என்று நம்பினான்... இன்​​​னொரு மு​னை​யை இறுகக் கி​​​ளையில் கட்டிவிட்டு ​மெதுவாக கீ​ழே இறங்கித் ​தொங்கி ஊசலாடினான் குணா. அப்​போது, அவள் ​பேர் ​என்னவாயிருக்கும் ​என்ப​தே அவன் கடைசி நினைவாக இருந்தது!


​​கொஞ்ச நிமிடங்களில் அந்த பக்கத்து ​ரோட்டில் விர்​ரென்று விரைந்து கடந்தது 1 மணி ​பேருந்து - நில்லாமல்.



30 comments:

நந்தாகுமாரன் said...

எழுத்துப்பிழைகள் மற்றும் formatting மீது கவனம் கொண்டிருக்கலாம் ... கதை படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது என்றாலும் ஆதாரக் கருவில் தெளிவின்மை அப்பட்டமாகத் தெரிகிறது ... குழப்பம் என்பது ஒரு யுக்தியாக இருந்தால் பரவாயில்லை ... ஆனாலும் இது உங்களின் ஒரு நல்ல புனைவு முயற்சி ... திருவினையாகத் தொடருங்கள் ...

செ.சரவணக்குமார் said...

மிக அருமை நண்பரே..

நேசமித்ரன் said...

மனவியல் சார்ந்த வாதையின் நீட்சியாக வன்மம் ஊறி பருவத்தின் ஒளிச்சிதறல்களாக தன் இச்சையின் வழி முயல் போல் செயல் புரியும் குணா, சமகால ஊடகங்களின் சாபக் கதிர் படிந்த பிறைத் தலைமுறையின் பிரதி.

நேசமித்ரன் said...

தன்னை உணர முற்படுகையில் உள்ளீடற்ற உணர்வு வழி செலுத்தப்பட்டவனின் குற்ற பழியின் சுமை தேர்ந்த முடிவு சமூகத்தின் எந்த பறவையின் நிழல் ?

நேசமித்ரன் said...

இந்தக் கதையின் வடிவ ரீதியிலான நெகிழ்வும் கூட விரும்பிச் செய்ததாகவே கொள்கிறேன்.வடிவமற்ற மேகம் தரும் கற்பனை சுதந்திரம் போல புனைவு ஈயும் வெளி.

ஷங்கி said...

விவரணைகள் சில இடங்களில் சுஜாதா மாதிரி சட்டுனு இழுக்குது.
”சிந்தனை செய்”னு ஒரு திரைப்படம் பார்த்தேன். அதில கடைசியில ஹீரோ சொல்றாரு, “பழி வாங்குறதுல இருக்கிற சுகமே தனி ஸார்!”
எதுவரை?!
நல்லாருக்கு தம்பி!

thiyaa said...

அருமை நண்பரே..

☀நான் ஆதவன்☀ said...

அண்ணே கொஞ்சம் குழப்பமான கதையாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. முடிவு புரியவில்லை :(


//நேசமித்ரன் said...

மனவியல் சார்ந்த வாதையின் நீட்சியாக வன்மம் ஊறி பருவத்தின் ஒளிச்சிதறல்களாக தன் இச்சையின் வழி முயல் போல் செயல் புரியும் குணா, சமகால ஊடகங்களின் சாபக் கதிர் படிந்த பிறைத் தலைமுறையின் பிரதி.///

கதை கூட புரிஞ்சிரும் போல... இந்த பின்னூட்டத்தைப் பார்த்தா தலையே சுத்ததுண்ணே.

ஹேமா said...

மூணு தரம் வாசிச்சிட்டேன்.நேசன் கவிதைபோலவே உஙக கதையும் இருக்கு ஜெகா.கொஞ்சம் விளக்கம் தாங்க PLS.

Nathanjagk said...

பறத்தலின் நிழல் - ஒரு குறுக்கு ​வெட்டுப்படம்

என் இனிய தீஅதீ ரசிகர்க​ளே...

எழுதிய ​மொக்​கைகளுக்கு மட்டு​மே விளக்கம் ​கொடுத்துப் பழக்கப்பட்ட இந்த ​ஜெகநாதன், முதன்மு​றையாக ஒரு சிறுக​தைக்கு விளக்கம் ​கொடுக்க பு​​​னைவின் ​தெருக்களில் அரிக்​கேன் லாந்த​ரை ஏந்திக் ​கொண்டு அடி ​வைக்கிறான் - உங்களுக்காக! (பாரதிராஜா ஸ்​டைலில் வாசிக்கவும்)

அதற்கு முன் இந்த ​பெரிய்ய்ய சிறுகதை​யை சிரத்​தை எடுத்துப் ​பொறுமையாகக் படித்து பின்னூட்டமும் ​போட்ட உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!

10ம் வகுப்பு முடிந்தபின் கிடைத்ததுதான் நான் அறிந்த முதல் ​பெரிய விடுமு​றை நாட்கள். அப்​போது என்​னோடு இருந்தது வசீலி ஷீக்ஷீன் (Vasily Shukshin) என்ற ருஷ்ய எழுத்தாளர் எழுதிய 'வாழ விருப்பம்' சிறுக​தைத் ​தொகுப்பு, ஒரு புல்லாங்குழல், ​கொஞ்சம் ​ஓவியங்கள், நி​றைய கவி​தைகள், ஒரு ஒருத​லைக் காதல் அப்புறம் ​கொடுக்கப்படாத காதல் கடிதம்.

எனக்குள் பறத்தலின் நிழலின் முதல் வடிவம் எழுந்தது அப்​போதுதான். அதற்கு வசீலியின் வழிப்​போக்கனின் மகன் சிறுகதையும் ஒரு தூண்டு​கோல். அதற்கப்புறம் டிப்ள​மோ, ஹாஸ்டல், புது நட்புகள், கவி​தைகள் என்று விரிந்த வாழ்க்​கை நிழலின் நீட்சி​யை இழுத்துவிட்டு பின்னுக்கு நகரும் ​வெளிச்சங்களாகின.

பறத்தலின் நிழல் ​சொல்ல நினைத்தது - ஒரு சுவாரஸியத்​தை. அதுமட்டும்தான் அதன் ​வே​லை, சாமார்த்தியம் எல்லாம். அரிக்​கேன் லாந்தர் ​கையில் இருக்கிற ​தைரியத்தில் எல்லா இடங்களிலும் ​வெளிச்சம் பீய்ச்சி பார்க்க முடியாதுதானே? அது ​போலதான் புனைவுக்கு விளக்கவு​ரை ​கொடுப்பது, ஒரு மாடர்ன் ஆர்ட்டுக்கு ​பொருள் ​சொல்லி புரிய​வைப்பது ​போலத்தான்.

அப்புறம் ஏன் இது........?

Nathanjagk said...

நந்தா ​சொன்னபின்னாடிதான், நி​றைய எழுத்துப் பி​ழைகள் இருப்பது, பார்​மேட்டிங் பிரச்சி​னை இருப்பது ​தெரியவந்தது. ​காரணம், வெள்ளிக்கிழ​மை இரவு அவசர அவசரமாக இ​தை அடித்து முடித்தது மட்டுமல்ல... அடிக்காமல் விட்டதும்தான்..! அதாவது சரக்கு அடிக்காமல் எழுதிய இடு​கை இது! அப்புறம் நான் பயன்படுத்தும் அழகி தமிழ் சாப்ட்​வேர்... ​டைப் ​செய்யும் ​போது அழகியோடு ​ரொம்ப மல்லுக் கட்ட ​​வேண்டியதாய் இருக்கு. ​அ​ரைமணி​நேரத்தில் முடிய ​வேண்டிய ​வே​லை ஒரு மணி​நேரம் ஆகிவிடுகிறது.
பார்​மேட்டிங்க்குக்கு கவனம் எடுத்து ​செய்கி​றேன்.. ஆனால் previewல் பார்ப்பதற்கும் publish ​​செய்த இடு​கைக்கும் பயங்கர வித்யாசமாயிருக்கிறது.. (முக்கியமா line break) என்ன பிரச்சி​னை​யோ?
மற்றபடி குழப்பத்​தை ஒரு யுக்தியாக ​கொண்டு எழுதுவது எனக்குத் ​தெரியாதது. அப்படி 'கன்ஃப்யூஸனிஸம்' என்று எதுவும் இருந்தால் கண்டுபிடித்து விளக்கவும் (அ) குழப்பவும்.

Nathanjagk said...

​ஹேமா (​த​லை​மை காலடி ரசிகர் ​பேர​வை - சுவிஸ் கி​ளை) ​சொன்ன பிறகுதான் ​தெரிகிறது.. உடனடியாக விளக்கம் ​கொடுப்பது நம் கம்​பெனிக்குச் சாலச் சிறந்தது என்று!

அப்புறம் அன்புத் தம்பி ஆதவனுக்காகவும்...

ப.நிழல் ஒரு காதல் க​தை! ஆமாம்!! ​பெண்க​ளை ​வெறும் ​கலவி இயந்தி​ரங்களாக மட்டும் அறிந்த, விலங்கு மாதிரி வளர்ந்த ஒருவன் திடீ​ரென ஒரு தாக்குப்பிடிக்க முடியாத காதலுக்கு (​டேவிட்டின் ம​னைவி) ஆட்படுகிறான். அந்த புரியாத காதலுணர்​வை தாங்க முடியாமல், அதன் ஏமாற்றத்​தை எதிர் ​கொள்ள ​தைரியமில்லாமல் மரித்தும் ​கொள்கிறான்.

குணா ஒரு வாழ்க்​கையின் பிரதி. இந்த மாதிரி மனித​னை நீங்கள் எப்​போவாவது பாத்திருக்க முடியும். உங்கள் பக்கத்து வீட்டில், பஸ்ஸில், சிக​ரெட்டுக்கு தீக்கங்கு வாங்கும் ​போது, புளியமரத்தில், ​செய்தித்தாளில் இப்படி. சிலருக்கு நமக்குள்ளும் குணா உண்டு என்று உணரமுடியும். நான் உணர்ந்​தேன்.

குணா தாயின் ஆண் து​ணையற்ற வாழ்க்​கை குணாவின் ஆளு​மை​க்கான அடித்தளம். அதிலிருந்து கி​ளைகளாகப் பிரிந்து உயர்கிறது அவனின் காட்டாறு வாழ்க்​கை. கலவிக்கு காதலிகள் பு​டை சூழ ஒரு கிராமத்து நாயகனாக வாழ்ந்தவன் ஏன் தற்கொ​லை ​செய்து ​கொள்கிறான் என்ற ​கேள்வி அந்த கிராமத்தின் எல்​லோர் மனதிலும் (இன்னும்) ஊசலாடிக் ​கொண்டிருக்கிறது.
எனக்குள் ஊசலாடிய குணாவின் பிர​தேசம் ​தொட்டு நகர்த்திய நிமிட முள்ளின் ஒரு சிறு காலஅள​வையின் வரிவடிவம்தான் - பறத்தலின் நிழல்.

Nathanjagk said...

இதில் நான் எதிர்​கொண்ட அனுபவங்க​ளையும் இழுத்து (தூக்கி மாட்டி சாவறது கூடவா ​எனக் ​கேட்கிறவர்களுக்கு: ​கொஞ்சம் ​யெஸ்! ​கொஞ்சம் ​நோ!!) ஒரு அவசர சிறுக​தை! இதில் ஆண்து​ணையற்ற தாயின் மகன், அ​ணைக்கட்டு டீஸல் இன்ஜின், முகுது ​தேய்ப்பு, பூவரச புளிய மரங்கள், தறிப்பட்ட​றை, கள்ளக்காதல்(கள்), சர்ச் முகட்டு சிலு​வை, பாக்​கெட்களில் ஆணு​​றைகள் திணித்துத் திரிபவன், தண்ணீர் ​தொட்டி, ​பொது அடி எல்லாம் காதலின் அழுத்தத்​தைக் கூட்ட உடன் வரும் படிமங்கள்! அவ்​ளோதாங்க!​

A blade by Jaganathan (பாரதிராசா படம் முடிஞ்சி ​போச்சீ!)

Unknown said...

jega
kulappamana irunthuthu
enna visayeththai mean pandreenga
puryela.

Karthikeyan G said...

Superuu... Liked this story a lot..

Kala said...

குணாவின் தாய்க்கு வந்தவர் சொந்தக் கணவரில்லை
அங்கு வந்தவருக்கு வேறொரு மனைவியும் ,மகளும்
உண்டு அந்த மகளுக்குத்தான் குணா முத்தம்
கொடுத்திருக்கிறான்.
குணாவை வழிநடத்திச் செல்ல யாரும் இல்லையென்றபடியால்
அவன் போக்குக்கு பல கெட்ட வழிகளில் தன் வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பாத்திரம்
அந்த ஆசிரியயைபோல் சில பெண்களும் இருக்கிறார்கள்
ஆண்களின் தடம்புரளலுக்கு என்றொரு எடுத்துக்காட்டு

தன்னை எதிர்பவர்களை வஞ்சம் தீர்க்கும் ஒரு குணமும்
அவனிடமுண்டு அதனால் டேவிட்ரின் மனைவியிடம்
போகிறான்.ஆனால் அவள் அந்த ஆசிரியையிடமிருந்து
குணத்தில்,உணர்வில் வேறுபட்டவள்.
இது அவனுக்குத் தெரியாமல் கணவன் செய்த {அடித்தது}
குற்றத்துக்காக... அவளைப் பழிவாங்கும் நோக்குடன் அவன்
செல்ல...இதை அறியாமல் அவள்......
சாதாரணமாய் அவனுடன் பேச {அவன் அறிந்திராத கனிவுமொழி}
அடக்க முடியாத பல...உணர்சிகளால்{அன்பு பாசம் ஏன் காதல்
என்றுகூட}அவன் உணர்திருக்கலாம்.....அதனால்
முத்தமிடுகிறான்.
பின் அவளின் பார்வை,போக்கு{நான் அப்படிப்பட்டவளல்ல}
என்பதைப் புரிய வைக்க....
தான் செய்தது குற்றம் என அவன் அப்போதுதான் உணர்கிறான்
அதனால் அவன் மனச்சாட்சி உறுத்த.... தற்கொலை செய்கின்றான்
அந்த நேரத்திலும்....அவளின் புனிதமான அன்பால்.பார்வையால்,
செய்கையால்...அவளின் புரிந்துணரலின் மன்னிப்பால் ....அவன்
கவரப்பட்டு...அவளின் பெயரறிய..சிந்தனையால் முற்படுகிறான்.....

Karthikeyan G said...

ஜெ, உங்கள விளக்கத்தை இப்போதுதான் படித்தேன். நான் கதையை சரியாக உள்வாங்கி இருக்கிறேன் என்பதில் எனக்கு ஒரு அல்ப மகிழ்ச்சி. :-)

Kala said...

ஐயா புரிந்துணர்வாளரே!இந்த” டம்”மின்
கருத்து ஆனால் ஒன்று நான் தண்ணி....ணீர்
குடிக்காமல் இதை தட்டச்சு செய்தேன்
அதனால்.......எல்லோருக்கும்.......???
புரியுமென நினைக்கிறேன்!!


சந்ருவின் பக்கத்தில்.....{சொஞ்சம் அதிகம் போலும்}
உளறுகிறார்....
ஹேமா கொஞ்சம் அதட்டி
வைக்கக் கூடாதா?வயசானவங்ககிட்ட...
இப்படி ..வம்பிழுக்கலாமா என்று.....

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தக் கதை ரொம்பப் பிடிச்சிருக்கு.

அவளுடைய பெயர் என்ன என்பதை அவன் அம்மாவின் பெயராகவும் டேவிட் மனைவியின் பெயராகவும் புரிந்து கொண்டேன்... மற்றபடி புரிந்து கொள்வது என்பது அவ்வளவு அவசியமா என்ன...

Nathanjagk said...

அன்பு சாந்தியக்கா,
விளக்கம் ​மே​லே இருக்கு... பார்த்துக் ​கொள்ளவும் (​போனிலும் ​சொல்லிட்டேன்.. ​ஓ​கேவா?) மிக அன்பு! மற்றும் நன்றிகள்!

Nathanjagk said...

அன்பு கார்த்தி,
உங்கள் ஆர்வமும் அன்பும் ஒருமித்து கி​டைத்த பருண்​மையில் புதிதாக பந்தை காட்ச் ​செய்பவன் ​போல் திக்குமுக்காடி திண்டாடிக் ​கொண்டிருக்கி​றேன். ​ரொம்ப நன்றி அய்யா!

Nathanjagk said...

அன்பு கலா ​மே....... டம்!
முடிய​லே! ​பறத்தலின் நிழ​லை மிகச் சரியாக புரிந்து ​கொண்டு என் எழுத்தின் அர்த்தத்​தை நீங்கள் எழுதி விட்டீர்கள்! நான் எழுதிய விளக்கத்தை விட நீங்கள் எழுதியது மிகத் ​தெளிவு! (இப்படி​யென்று ​தெரிந்திருந்தால், நான் கம்​மென்று இருந்திருப்​பேன்!) இதற்கு நன்றி ​சொல்லி என்​னைத் தள்ளி ​வைக்க விருப்பமில்​லை(யாக்கும்!)

//அடக்க முடியாத பல...உணர்சிகளால்{அன்பு பாசம் ஏன் காதல்
என்றுகூட}அவன் உணர்திருக்கலாம்.....//
அதுதான்.. இக்க​தையின் ப்ரத்​யேகம்.. ஒரு காட்டு விலங்குக்குள் திடீ​ரென பூத்த காதல்.. அ​தைக் ​கொண்டாடவும் ​வக்கில்லாமல், குழி ​தோண்டிப் பு​தைக்கவும் ​தெரியாமல்... ஒரு உயர்அழுத்த காதல் மின்சாரத்​தைத் தாங்க முடியாத ஆத்மாவின் மரணம் தான் கதையின் க​தை! இ​தை குறிப்பெடுத்துச் ​சொன்ன​மைக்கு... ஹிஹி!

Nathanjagk said...
This comment has been removed by the author.
Nathanjagk said...

கலா.. நீங்கள் 'எல்லாவற்​றையும்' மிக நன்றாக (வி​​ரைவாக) புரிந்து ​கொள்கிறீர்கள்! ரொம்ப ஆச்சரியமாகவும் ​கொஞ்சம்.. பயமாகவும் இருக்கிறது!

சந்ருவின் வ​லையில் பின்னூட்டத்தில் ஒரு சுவாரஸியத்திற்காக உங்க​ளைப் பற்றி ஒரு வரி குறிப்பிட்​டேன். சீரியஸாக எடுத்துக் ​கொள்ள ​வேண்டாம்.

Nathanjagk said...

அன்பு சுந்தர்,
உங்களின் ஆளு​​மை​யும் அன்பும் ஒ​ரே அளவிலானாது என்று விளங்க ​வைத்து விட்டீர்கள். ​ரொம்ப நன்றி!

ஹேமா said...

நன்றி ஜெகா உங்கள் விளக்கத்திற்கு.அதைவிட கலா தந்த விளக்கமே அருமை.

கலா பாவம் ஜெகா.விடுங்க.
முடியலன்னு சொன்ன அப்புறமும் ரொம்ப அவரை கையைக் கட்டி பெஞ்சு மேல ஏத்தறீங்களே !அவர் நேசன் மாதிரி பின் நவீனத்துவம்.

Nathanjagk said...

அன்பு கலா,
இதற்கு நன்றி​சொல்லி என்னைத் தள்ளி வைக்க விருப்பமில்லை(யாக்கும்!) என்று நினைத்தேன்..
ம்..! பரவாஉண்டு..! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Nathanjagk said...

வாங்க ஹேமா..

நீங்கள் சொல்வது உண்மையே கலாவின் விளக்கம் பாந்தம்.
பின்நவீனத்துவம் என்றெல்லாம் இல்லை. இந்தக் கதைக்கு இந்த ட்ரீட்மண்ட் நல்லாயிருக்கும்னு ​தோணுச்சு. அவ்வளவுதான்.

பா.ராஜாராம் said...

என்ன சொல்லட்டும் ஜெகன்..உங்களுக்குள் எப்பவாவது ஒரு வன் முகம் தோன்றும்.உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ.எனக்கு ரொம்ப பிடிச்ச முகம் அது ஜெகன்.முன்பு ஒருமுறை ஒரு வரலாற்று கதை எழுதி இருந்தீர்கள்.(பெயர் நினைவு இல்லை.)

சான்சே இல்லை மக்கா..அவ்வளவு அருமையாக வந்திருக்கு.பிரமிச்சு போன மனசு இன்னும் தெளிவடையலை.என்னவோ பண்ணுகிறது மனசை.கை எட்டும் தூரத்தில் இருந்தால் கட்டி இறுக்கி கொள்வேன்.

உங்களை நான் வாசித்தது வரையில் உங்களின் மாஸ்டர் பீஸ் இது.!

நிறைய எழுதணும் ஜகன் இது போல..நிறைய அன்பும் வாழ்த்துக்களும் மக்கா!

(உணர்ச்சி பெருக்காக இருக்கிறது. :-).any how,fantastic!

Nathanjagk said...

அன்பு பா.ரா.,
உதியமரத்தை தழுவிக்கிடக்கும் ஆத்மா இது!
உங்களின் வார்த்தைகளில் மர நிழல் இருக்கிறது. நீங்காத நிழலாக அதில் என் குடியிருப்பு!
ஆதுரமான ஒரு அணைப்பின் சின்ன இருள் வசதியில் கண்ணை ஈரமாக்கி கொள்கிறேன்!