Monday, November 9, 2009

ஒ​ரே கல்லு 2 ​மாங்கா!!!



மாங்கா 1:நி​னைவில் ந​னைதல்

​தோப்புக்காரர்: ​பெரியண்ணன் ​சென்ஷி


நான் ஏன் பிளாக்கு​றேன் என்ப​தை விளக்கவும் இல்​லை குழப்பவும் என்று இங்கு கல்லு வுட்ட ​​சென்ஷிக்கு நன்றி!


நம்ம பஸ்ஸும் உங்க ரூட்டுத்தாங்க.. காமிக்ஸ் - அம்புலிமாமா - ரா​ஜேஷ்குமார் - சுபா - ஓவியங்கள் - பாலகுமாரன் - குமுதம் - சுஜாதா - ஆனந்த விகடன் - இ​சை - லாசரா - குபரா - புல்லாங்குழல் - சுரா - ​யூமா. வாசுகி - சுப்ரபாரதிமணியன் - சிக​ரெட் - கல்லூரி - க. சீ. சிவக்குமார் - ​காமசூத்ரா - அழகிய​பெரியவன் - காதல்கள் - கீரனூர் ஜாகிர்ராஜா - ​ஜெய​மோகன் - கிளாமர் - காதல் ​தோல்விகள் - வாமு ​கோமு - சாரு நி​வேதிதா - ம​னோஜ் - எஸ்.ரா - சரக்கு - வாந்தி - த​லை​நோவு....

சரி வுடுங்க.. ஆரம்பத்தி​லே​யே கவனிச்சிருக்கணுங்கிறது இப்பத்தான் புரியுது.
அண்ணர்-நண்பர் க.சீ. சிவக்குமாருடன் ஆன நட்பு புதிய இலக்கியங்க​ளையும் இலக்கியவாதிக​ளையும் ஓசி குடி​யையும் ​புத்தக ​வெளியீட்டுக்கப்பாலான ​மொட்​டை மாடி சபாக்க​ளையும் அறிமுகப்படுத்தியது.

கன்னிவாடி என்ற ஊரில் வசித்து வந்த​போது.. என் அ​றையில் ​​கொஞ்சம் புத்தகம்
, நி​றைய பிரஸ்கள், ​கொஞ்சம் புல்லாங்குழல் என்ற வாழ்ந்து வந்​​தேன். ஓவியங்களில் ​கோடு பற்றி​யே நல்ல சிறுக​தைகள், நாவல்க​ளை கண்டடைந்திருக்கி​றேன். சந்தானத்தின் ​கோட்​டோவியங்கள், ட்ராஸ்கி மருதுவின் அப்ராஸ்ட், சந்ருவின் கிறுக்கல்கள், எபி​னேசரின் சார்க்​கோல், மனோகரின் வண்ணங்கள், ம.​செவின் மங்கலான நீ​ரோவியங்கள்.. இப்படி படங்க​ளைப் பற்றித்தான் இலக்கியம் பக்கம் வந்த வழிதவறிய காட்டாடு நான்.

இயந்திரவியல் ​பொறியியல் தர்மபுரியில் படித்​தேன். அப்​போது என்​னை வாரிச்சுருட்டிக் ​கொண்டது தர்மபுரி நூலகம். அங்கு கி​டைத்த புத்தகங்களுக்கு இன்னும் என் நன்றிகள்!

இங்கு வ​லைப்பதிவு எழுத வந்ததுக்கு காரணம்.. இது ப்ரீன்னு ​சொன்னாங்க!!! ​முதலில் படிக்க வந்ததும்.. இந்த கிரவுண்ட் நல்லாத்தான் இருக்கு என்று இம்ம்ம்மீடியட்டாக நானும் ஆரம்பித்துவிட்​டேன் காலடி ​வைக்க!

காலடி ஒரு அளவு, பதிவு, மற்றும் அ​டையாளம். மிக முக்கியமாக உயிர்த்தன்மை நி​றைந்த உருவம். அதன் எளிய உருவத்தில் பு​தைந்து ​போய் இ​​ளைப்பாறப் பிடித்திருக்கிறது!

முக்கியமாக ஒன்று.. காலடி என்பதுதான் வ​லைப்பதிவு. ​ஜெகநாதன் அல்ல. ​நீங்களும் காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள்தான் - ​ஜெகநாதனுக்கு அல்ல!!! நான் இந்த காலடியின் ஒரு ஊழியன் அவ்வ்வள​வே!


இந்த மாங்கா நல்லாயிருக்கில்ல??


(')


மாங்கா 2: பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

​தோப்புக்காரர்: ​ஜெய்ஹிந்த்புரம் பீர்


1. அரசியல் தலைவர்

பிடித்தவர்: படித்த அரசியல்வாதிகள்

பிடிக்காதவர்: பழுத்த அரசியல்வாதிகள்



2. எழுத்தாளர்

பிடித்தவர்: சுப்ரபாரதிமணியன்

பிடிக்காதவர்: ​டுமிதுல் சுயம்​போ என்ற ஆப்ரிக்க நாட்டு எழுத்தாளன் (​மேலும் டீட்​டேலுக்கு என் முதல் பதி​வைப் பார்க்கலாம்)


3. கவிஞர்

பிடித்தவர்: யூமா. வாசுகி

பிடிக்காதவர்: அப்படி யாரும் கி​டையாது. இவ்விடத்தில் ஒரு அறிவிப்பு: கவிஞ ​பெருமக்கா.. உங்க​ளை யாரும் பிடிக்க​லேன்னு ​சொன்னா கவ​லைப் படாதீங்க... உட​னே நம் காலடியின் கவி​தை பட்ட​றையில் பங்​கேற்று, கவிஞர் அ​டையாள அட்​டையும் ​பெற்றுக் ​கொள்ளவும். உங்க​ளை பிடிக்காது என்று ​சொன்னவர்கள் ​​மேல் ஆஸிட் அல்லது நீங்க​​ளே எழுதிய கவி​தைப் புத்தகம் வீசப்படும்!


4. திரைப்பட இயக்குனர்

பிடித்தவர்: சாம் ஆண்டர்சன் பட இயக்குநர்

பிடிக்காதவர்: என் பிடிச்ச ​டைரக்டரு ​பார்த்த பின்னாடியும் எப்படி இந்த ​கேள்வி ​​கேட்கத் ​தோணுதுங்க??


5. நடிகர்/கை

பிடித்தவர்: வினு சக்ரவர்த்தி / காந்திமதி

பிடிக்காதவர்: இதுவும் தப்பான ​கேள்வி


6. விளையாட்டு வீரர்

பிடித்தவர்: ந​ரேன் கார்த்தி​கேயன்

பிடிக்காதவர்: ஒரு வி​ளையாட்​டே எனக்கு பிடிக்காது - கிரிக்​கெட்!!


7. தொழில் அதிபர்

பிடித்தவர்: Subroto Bagchi, Chief Operating Officer, MindTree

பிடிக்காதவர்: ​இருட்டு பைபாஸ் ​ரோடுகளில் லாரிக​ளை மறிக்கும் 'தொழில்' அதிபர்கள்!


8. மதத் தலைவர்

பிடித்தவர்: யாருமில்​லை

பிடிக்காதவர்: மதத்த​லைவர்கள் என்று ​சொல்லிக்​கொள்ளும் எல்​லோரும்


9. மருத்துவர்

பிடித்தவர்: ஊசிப் ​போடாதவர்

பிடிக்காதவர்: நர்ஸ்கள் இல்லாமல் ஆசுபத்திரி நடத்துபவர்


10. வலைபதிவர்

பிடித்தவர்: ஹ​லோ... ஹ​லோவ்வ்வ்வ.. இங்க டவர் சரியா இல்லீங்க..!

பிடிக்காதவர்: ...ஆங்.. நான் அப்புறமா ​பேச​றேங்க....!

(')

32 comments:

☀நான் ஆதவன்☀ said...

ரெண்டாவது மாங்காவுக்கான எல்லா பதிலும் ஜூப்பரு அண்ணே

☀நான் ஆதவன்☀ said...

//நம்ம பஸ்ஸும் உங்க ரூட்டுத்தாங்க.. காமிக்ஸ் - அம்புலிமாமா - ரா​ஜேஷ்குமார் - சுபா - ஓவியங்கள் - பாலகுமாரன் - குமுதம் - சுஜாதா - ஆனந்த விகடன் - இ​சை - லாசரா - குபரா - புல்லாங்குழல் - சுரா - ​யூமா. வாசுகி - சுப்ரபாரதிமணியன் - சிக​ரெட் - கல்லூரி - க. சீ. சிவக்குமார் - ​காமசூத்ரா - அழகிய​பெரியவன் - காதல்கள் - கீரனூர் ஜாகிர்ராஜா - ​ஜெய​மோகன் - கிளாமர் - காதல் ​தோல்விகள் - வாமு ​கோமு - சாரு நி​வேதிதா - ம​னோஜ் - எஸ்.ரா - சரக்கு - வாந்தி - த​லை​நோவு....//

ஹி ஹி ஹி கிட்டதட்ட எல்லாருக்கும் இதே தான் போல :))

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லாருக்கு ஜெகநாதன் பதில்கள் அருமை

மாங்கா புளிச்சதா... இனிச்சதா ..

வினோத் கெளதம் said...

தல நீங்க சொல்லி இருக்குற பேரு எல்லாமே வித்தியாசமா இருக்கே..
இருந்தாலும் கலக்கல்..

அப்புறம் நான் கூட ஒரு தொடரபதிவுக்கு உங்களை அழைத்தேன்..நேரம் இருந்தால் எழுதுங்கள்..

நேசமித்ரன் said...

நக்கல் நைய்யாண்டி காலடி நல்ல பதிவுண்ணே

Anonymous said...

திரைப்பட இயக்குனருக்கான பதிலைப்பாத்து கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன்.:)

பீர் | Peer said...

கிரிக்கெட் :)) ஸேம் ப்ளட்...

//ஹி ஹி ஹி கிட்டதட்ட எல்லாருக்கும் இதே தான் போல :))//

ஹலோ ஆதவன், அப்டில்லாம் இல்லை... எனக்கு காமிக்ஸ்லேயே தலைநோவு வந்துடுச்சு. (ஒண்ணுமே புரியாம) :))

ஹேமா said...

மாங்காய் புளிக்கும்.மாம்பழம்தான் இனிக்கும் இயல்பில்.இங்கே இரண்டு மாங்கய்களும் நிறைந்த சுவாரஸ்யத்தோடு இனிக்குதே !

//10. வலைபதிவர்
பிடித்தவர்: ஹ​லோ... ஹ​லோவ்வ்வ்வ.. இங்க டவர் சரியா இல்லீங்க..!
பிடிக்காதவர்: ...ஆங்.. நான் அப்புறமா ​பேச​றேங்க....!

//அருமை ஜெகா.அடுத்தவங்களுக்குத் துன்பம் கொடுக்கக்கூடாதுங்கிற நல்ல மனசு இருக்கு உங்களுக்கு.

சிநேகிதன் அக்பர் said...

மாங்கா 1:

மாப்பு இம்புட்டு பெரிய ஆளா நீங்க, அப்போ இன்னும் நீங்க நிறைய எழுதனும்.

மாங்கா 2 :

//பிடித்தவர்: ஊசிப் ​போடாதவர்
பிடிக்காதவர்: நர்ஸ்கள் இல்லாமல் ஆசுபத்திரி நடத்துபவர்//

எப்படி ஒரே மாதிரி. முடியல‌

சென்ஷி said...

:)

நேர்த்தியான வாக்கிய அமைப்புங்கறதை சிலரோட பதிவுகள்ல எப்பவுமே பார்க்க கிடைக்கும். இந்தப் பதிவுலயும் உங்க நேர்த்தி எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்குது...

ஓவியக்கோடுகளில் கிடைக்கும் கதைகள் - கரைதல் வெளிப்படுத்தும் தன்மய நிறம் - நண்பனைச் சுற்றி பறக்கும் காதல் - கடிதத்தில் ஆட்காட்டிவிரல் பேனா மசி - எல்லா இலைகளும் உதிர்க்கும் பறக்கும் முத்தம்..

தொடர்பில்லாத ஏதோ ஒரு தொடர்புக்கான அத்தனை வசியங்களும் நிரம்பி வழியும் எழுத்தில் நேசமித்ரனும் நீங்களும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள்...

தொடர் பங்கெடுப்பில் பங்கெடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

ஷங்கா அண்ணாத்தையைத்தான் ஆளையேக் காணோம் :(

சென்ஷி said...

//கன்னிவாடி என்ற ஊரில் வசித்து வந்த​போது..//

உங்க ஊர் பேருகூட இப்படித்தான் இருக்குதா தலைவரே! :)

சென்ஷி said...

//பிடிக்காதவர்: நர்ஸ்கள் இல்லாமல் ஆசுபத்திரி நடத்துபவர்//

:(

ஷார்ஜாவுல இந்தக் கொடுமைக்குத்தான் நான் ஆஸ்பத்திரிக்கே போறது கிடையாது.

Shanmugam Rajamanickam said...

முதலில் நான் சாரி கேட்டுக்குறேன்

Nathanjagk said...

அன்பு தம்பி ஆதவன்!
மிக்க நன்றி!
இந்த ரூட்​டையும் தாண்டி ​போகணுங்கிறதுதான் என்​னேர் அ(வ்வ்வ்)வா!
ப்ரான்ஸ் காஃப்கா - சார்த்தர் - ழீன் ​ஜெ​னே - ​தெரிதா - மார்க்​வெஸ் -... இப்படி! ஆனா ​ரூட் ​கொஞ்சம் கரடுமுரடுங்கிறாங்க.
பார்ப்​போம்... பல காலடிகள் தடவி தடவித்தா​னே பாதை​யே விழுகிறது!

Nathanjagk said...

மாம்ஸ் ஸ்டார்ஜன்..
மாங்காவும் புளிக்க​லே மாமாவும் புளிக்க​லே! நன்றி!

Nathanjagk said...

அன்பு வினு..
நீங்க ​சொல்லி எழுதாம இருக்க முடியுமா? ​ரொம்ப நன்றி மக்கா!
Gummie bears & worms பற்றி கும்மி எடுத்துட​றேன்!

Nathanjagk said...

அன்பு கவி ​நேசா!
​ரொம்ப நன்றி! பின்னூட்டத்தில் ஒளித்து ​வைத்திருக்கிறாய் நம் சியர்ஸ் சங்கீதத்​தை!

Nathanjagk said...

வாங்க சின்ன அம்மிணி!
சாம் படத்​தைப் பாத்து நான் இடிஞ்​சே ​போயிட்​டேன்!

Nathanjagk said...

பாருங்க நம்ம பீர் புலம்பற​தை?
காமிக்ஸ்ல​யே ​நொந்தவரா நீங்க? புரட்சிப் ​பெண் ஷீலா, மாடஸ்தி எல்லாம் ​கொஞ்சம் புரட்டிப் பாருங்க ​தெம்பாயிடுவீங்க!

Nathanjagk said...

வாங்க ​ஹேமா ​மேடம்..
மாங்கா கிடக்கட்டும்! ரத்னபுரியில் சில வித்யாசமான பழவ​கைகள் உண்டு என்று அம்மா ​சொல்லியிருக்காங்க... மங்கூஸ், லா​வோ... இந்த மாதிரி. அப்படியா?

அடுத்தவங்களுக்கு துன்பம் தராத, அன்பா நடந்துக்கிற மனசு இப்பத்தான் ​கொஞ்சநாளா வாய்ச்சிருக்குங்க!

Nathanjagk said...

மாப்ள அக்பர்!
இன்னும் நி​றைய எழுதலாம். எனக்கும் ஆ​சை.. ​ரெண்டு மூணு வாரமா ​கொஞ்சம் பிஸி! அதுதான் உங்க ​தொடர்பதி​வை இப்ப ​வெளியிட முடிய​லே. அடுத்த கல்லு உங்க மாங்காவுக்குதான் மாப்ள!

Nathanjagk said...

​பெரியண்ணன் ​சென்ஷி!
​ரொம்ப நன்றி!
சமீபத்து பதிவுல உங்க ​போட்டோவைப் பாத்​தேன்! சர்வர் சுந்தரம் நா​கேஷ் மாதிரி ஸ்லிம்மா இருக்கீங்களே?? ஆனா பதிவு ஒவ்​வொண்ணும் ​மோட்டார் சுந்தரம் மாதிரி பறக்குதில!

உங்களின் போங்கடா! நீங்களும்.... உங்க காதலும் இடு​கைக்கு நான் ​போட்ட பின்னூ:
நின்று பெய்யாது
சென்ற மழையாய்
அத்தனை மேகத்திலும்
ஈரமாய்
காதலாய் உள்ளது - என்று எடுத்துக் ​கொள்கிறேன்
* * *
புயலின் தங்கைகள் ஹார்லிக்ஸ் குடிக்க ​வைக்கும் விளம்பரங்களாக​ இருப்பதால்தான்.. ​ஆதாம்கள் விஸ்கி குடிக்கப் போய்விடுகிறார்களோ?

//அவளது அதிக கோபங்களும் எனது ஆண் என்ற அகங்காரமும்//
படையப்பா!!?? யூ டூ ​பெரியண்ணன்???

எந்த பெண்ணும் எவரின் காதலும் சிறுகுறிப்புகளுக்குள் அடங்கி விடுவதில்லை என்ற உங்களுக்குப் பிடித்தவளை, எனக்கு (எங்களுக்கு) இந்த கணத்தில் பிடித்துப் போய்விட்டது!

//நேசித்த அத்தனை பெண்களின் ஜாடைகளும் அவள் உருவத்தில் ஒத்துப்போயிருக்க//
ஏன் ஒரு பூங்கொத்து நீட்டவில்லை.. எப்போதும் எல்லாயிடங்களிலும் விரும்பி முறையிட​ வேண்டிய உணர்ச்சி அல்லவா காதல்? காதலிப்பதை நிறுத்திவிட்டேன் என்று ​சொல்லும் நவீன ஆல்கஹாலிக் அனானிமஸ்கள் பேச்சுகளை நீங்களுமா நம்புகிறீர்கள்?

ஆண்கள் ஏமாற்றிய பெண்கள் கதைகள் நிச்சயம் நிறைய இருக்கும் (எனக்கு கூட 1,2 ​தெரியும்..!)
ஆனால் அந்த விஷயம் அதிகம் ​வெளிவராததற்கு காரணம்.. ​பெண்கள் தங்கள் தோல்விகளை பிரஸ்தாபிப்பதில்லை.. அமுக்கமா உள்ளுக்குள் புதைத்துக்​கொண்டு கல்யாணத்திற்கு ரெடியாகி விட​வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

உலகத்திலேயே பெண்ணடிமைத்தனம் ​செறிந்த விஷயம் - ஆண்கள் சட்டை ​மேல் பொத்தான்களை கழட்டிவிடும் திமிரை விட - இந்த ஆண்களின் காதல் தோல்வி கொண்டாட்டம்தான் (!??)
காதலில் தோற்ற ஆண்களை விரும்பி ​தேற்ற நண்பர்கள் உண்டு.. ​ஆறுதல் படுத்த கைகளும் கதைகளும் கூட உண்டு (தோல்விக் கதை இல்லாவிட்டாலும்.. இட்டு கட்டியாவது சொல்லப்படும்) ​கொண்டாட குடிஅரங்குகள்.. ​காதல் ​தோல்விக்கான காஸ்ட்யூம் - ​​கெட்டப் - பாடல் - வசனம் - தத்துவம் எல்லாவற்றையும் சினிமா கருப்பு-வெள்ளையிலிருந்து கவனமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.
ஆனால், பெண்களுக்குதான் தனியாக டாஸ்மாக் திறப்பதில்லை.. தாடியும் முளைப்பதில்லை..! (சமீபத்தில் படித்த Almost Single - by Advaita Kala நாவல் இந்த கனத்தை​ஒரு இடத்தில் தொட்டுக்காட்டுகிறது) கொண்டாட முடியாத காதல்-​தோல்விகள் (அல்லது ஏமாற்றங்கள்.. எஸ்கேப்புகள்) ​இருப்பத்திலேயே மிகவும் கொடியது என்று தோன்றுகிறது. அல்லவா?
*
உங்கள் இழப்புகளுக்கு ஏமாற்றங்களுக்கு தேறுதல் சொல்லும் இம்மனமே.. இன்னும் துணிந்து காதல் செய்க என்றும் சொல்கிறது. காதலிகள் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம்.. ஆனால் காதல் இல்லாமல் மட்டும் வாழாதீர்கள்.
*
தாடியை சிரைத்துவிட்டு, தோழியைத் தேடுங்கள்! இல்ல சங்காண்ணன்-கிட்டவாவது ​சொல்லுங்க.. அவரே ​பொண்ணு பார்த்திடுவாரு!
*
இதுக்கு 1ம் ​சொல்ல​வேயில்லி​யே?

Nathanjagk said...

​சென்ஷி..
//
//கன்னிவாடி என்ற ஊரில் வசித்து வந்த​போது..//

உங்க ஊர் பேருகூட இப்படித்தான் இருக்குதா தலைவரே! :)
//
இந்த ஊரின் அசல் இலக்கியவாதி இப்பத்தான் ​க​டை திறந்திருக்காரு! அவர்கிட்ட ​கேட்டுப் பாருங்க, ஏதாவது இஞ்சி மரப்பான் வச்சிருப்பாரு!!
http://sivakannivadi.blogspot.com

Nathanjagk said...

தம்பிரி சம்முவம்..
​ரெண்டாவதா என்ன ​கேக்கப் ​போறீங்க?

ஷங்கி said...

அடிச்ச மாங்காய்கள் அருமை! உங்கள் பாணியில் சூப்பர்!!!
//பிரபலப் பதிவர்தாங்கோ பின்னூட்டப் புயலுதாங்கோ
நானொரு எலக்கியவாதிதாங்கோ தில்லிருந்தா வாங்கோ// நான் எழுதியதை நிரூபிக்கும் இடுகை!!!
ஹிஹி!!!

Nathanjagk said...

வாங்க ஷங்கிண்ணா!
​லேட்டா வந்தாலும் எப்படி​யோ அட்டண்​டென்ஸ் ​போட்டுட்டீங்க!
//பிரபலப் பதிவர்தாங்கோ பின்னூட்டப் புயலுதாங்கோ
நானொரு எலக்கியவாதிதாங்கோ தில்லிருந்தா வாங்கோ//
என்​னைக்கு என்​னைக் கும்மப் ​போறாங்க​ளோ??? ஏன் இப்படி ​கொம்பு சீவிவிடறீங்க​ண்ணே?

பெசொவி said...
This comment has been removed by the author.
பெசொவி said...

// கவிஞ ​பெருமக்கா.. உங்க​ளை யாரும் பிடிக்க​லேன்னு ​சொன்னா கவ​லைப் படாதீங்க... உட​னே நம் காலடியின் கவி​தை பட்ட​றையில் பங்​கேற்று, கவிஞர் அ​டையாள அட்​டையும் ​பெற்றுக் ​கொள்ளவும். உங்க​ளை பிடிக்காது என்று ​சொன்னவர்கள் ​​மேல் ஆஸிட் அல்லது நீங்க​​ளே எழுதிய கவி​தைப் புத்தகம் வீசப்படும்!//
உங்களோட இந்த பதில நம்பி என்னோட கவிதையை(?) அனுப்பறேன். படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க.
ஒரே கல்லுல மூணு மாங்கா!! - என் வலைப்பூவுக்கு ஓசி விளம்பரம் தான் மூணாவது மாங்கா).
http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_15.html#comments

Nathanjagk said...

வாங்க ராஜா,
​பெருத்த சிரிப்பாப் ​போச்சா உங்களுக்கு? நன்றி!

Nathanjagk said...

அன்பு ​பெ​சொவி...
// படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க.
ஒரே கல்லுல மூணு மாங்கா!! - என் வலைப்பூவுக்கு ஓசி விளம்பரம் தான் மூணாவது மாங்கா).
//

பாருங்கடா...? என் கல்லுல உங்களுக்கு ஒரு மாங்காவா? எனக்கு எப்பயும் 2 மாங்காதான் பிடிக்கும்.

Unknown said...

jega
thanga mudiyela
epedi ippadi

Nathanjagk said...

வாங்க சாந்திக்கா!
நல்லாயிருக்கீங்களா?
வரு​கைக்கும் க​மெண்டிற்கும் நன்றி!