Sunday, February 14, 2010

அம்மிணி அன்போட குப்புனு


To: அம்மிணி@ஜி​மெயில்.காம்

அன்னைக்கு நீ 7அப் கேட்டப்ப நான் போகமுடியாதுன்னு சொன்னேன். நீ திரும்ப திரும்ப கேட்டே. நானும் முடியாதுன்னு சொல்லிட்டு கம்ப்யூட்டரை பாக்க ஆரம்பிச்சிட்டேன். இருந்தாலும் மனசு கேக்கலே. போயி வாங்கிட்டு வந்து கொடுத்துருவோம்னு கெளம்பிட்டேன். அப்ப நான் வெறும் பெர்முடாஸ் மட்டும்தான் ​போட்டிருந்தேன். அது வேற சரியான லூஸு பெர்முடாஸ். தலைக்கு நிறைய எண்ணெய் வச்சு நீதான் மஸாஜ் பண்ணி விட்டிருந்தே. முடியெல்லாம் கோணல் மாணலா தூக்கிட்டு நிக்குது. மூஞ்சில எண்ணெய் வழியல் வேற.


பரவாயில்ல, நைட் நேரந்தானே பக்கத்திலதானேன்னு வாங்க போனேன். நம்ம வீட்டுக் கடை பூட்டியிருந்தது. சரி, ஐஸ்க்ரீம் ஆண்டி கடை பக்கம்தானே, அப்படியே போயி வாங்கிட்டு வந்திருவோம்னு போனா அதுவும் பூட்டிக்கிடக்கு. பேசாம வீட்டுக்கே போயிடலாமான்னு நெனச்சேன். இருந்தும் ஏதோ ஒரு உந்துதல். மெயின் ரோடு ஜுஸ் கடையில கண்டிப்பா இருக்கும், வாங்கிட்டே வந்துடலாம்னு கெளம்பினேன். லூஸ் பெர்முடாஸோட எப்படி போறது? அங்க வேற கூட்டமா இருப்பாங்களேன்னு பலதயும் யோசிச்சுகிட்டு, பெர்முடாஸ் பாக்கெட்ஸ்ல கைய விட்டு லைட்டா தூக்குனாப்ல புடிச்சுக்கிட்டே ஜுஸ் கடைக்கு போயிட்டேன்.


போயி, 7அப் கொடி-ன்னு கேட்டா, அங்க இருக்கிறவன்.. நிதானமா ஜுஸ் போட்டு, வெளியில சேர்ல உக்காந்திருக்கிறவங்களுக்கு கொடுத்துட்டு வந்து... என்ன வேணும்னு கேட்கிறான். பெர்முடாஸ் பாக்கெட்ல இருந்து கைய வெளிய எடுக்காம 7 அப் கொடின்னு திரும்பவும் கேட்டேன். கடையில அப்ப நல்ல கூட்டம். ​பொண்ணுங்க வேற உக்காந்திருக்காங்க. நான் ஒருத்தன் தான் இந்த மாதிரி தலைவிரி கோலமா, எண்ணெய் வழிய, லூஸ் பெர்முடாஸோட நிக்கிறேன்.

அப்புறம் ஏன் இவன் 7அப் வாங்காம வந்தான்னுதானே நினைக்கிறே? சொல்றேன்.

கடைக்காரன் ப்ரிட்ஜ்ல இருந்து அரை லிட்டர் 7அப் எடுத்துக் கொடுத்தான். லைட் கூலிங்தான். கையில 25 ரூபா இருந்தது. பாட்டில் விலை ரூ.20ன்னு போட்டிருந்தது. சரின்னுட்டு 20 ரூபாய அவன்கிட்ட கொடுத்துட்டு பாட்டிலை எடுத்துட்டு திரும்பினேன். கடைக்காரன் என்னைக் கூப்பிட்டு "இன்னு 2 ரூபா கொட்றி" அப்பிடின்னா. நான் பாட்டில் போட்டிருக்கிற ரேட்டைக் காமிச்சு "யாக்கே?" ன்னு கேட்டேன். அவன் ப்ரிட்ஜ், கரெண்ட் சார்ஜ் ​ரேட்டெல்லாம் சேத்து 22ரூபாய்ங்கிறான். எனக்கு கடுப்பாயிடுச்சு. "ஓகே. கூலிங் பேடா. வார்ம் கொடி" ன்னு ​கேட்டேன். அதுக்கு கடைக்காரன் "வார்ம் 7அப் இல்லா" அப்படின்னுட்டான். கடையில ஜுஸ் குடிக்கிறவங்க எல்லாம் என்னையவே பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஞாயிற்றுகிழமை, ஏதாவது சண்டை ஏதும் நடக்குமான்னு பாத்திருப்பாங்க போல.

எனக்கு 2 ரூபாய் அநியாயத்துக்கு கொடுக்க பிடிக்கலே. அது ஒரு ஏமாத்து வேலைன்னு தோணுது. சரி விடுன்னுட்டு, திரும்பவும் பெர்முடாஸ் பாக்கெட்ல கைய விட்டுக்கிட்டு, எதுவும் வாங்காம வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சிட்டேன். அப்பயும் சிவானந்தா சர்க்கிள்ட்ட போயி ஒரு 7அப் வாங்கிட்டு வந்துடலாம்னு ​நெனச்சேன். லூஸ் பெர்முடாஸ விட அலங்கோலமா தூக்கிட்டு நிக்கிற முடிதான் என்னை ​போக வேணாம்னு தடுத்திருச்சு. அதவிட முக்கியமா, அந்தக் கடையிலயும் இந்த மாதிரிதான் 2 ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்டு ஏமாத்துவாங்கன்னு தோணிருச்சு. ​

இவ்வளவு தூரம் பெர்முடாஸோட, எண்ணெய் தலையோட வந்து, எதுவும் வாங்காம போறோங்கிற ஏமாற்றமும்...... ஒரு 7அப் ப்ரிட்ஜ்ல வெச்சிருக்கிறதுக்கு, கரண்ட் பில் 2 ரூபாய்ன்னு ​கொள்ளையடிக்கிறாங்களேங்கிற ஆத்திரமும் சேர்ந்துதான்....... நான் அன்னிக்கு உங்கிட்ட எரிஞ்சு விழ ​வேண்டியதா போச்சு. மோசமாவும் நடந்துக்கிட்டேன். அது என் தப்புதான்.

உன்கிட்ட சண்டை போட்டு முடிச்சதும் நான் பண்ணின காரியம் பெப்ஸிகோ (7அப் தயாரிக்கிறவங்க) கம்​பெனிக்கு இப்படி ரெண்டு ரூபாய் எக்ஸ்ட்ராவா வசூல் பண்றாங்கன்னு மெயில் பண்ணிட்டேன்.

உங்கிட்ட அப்பவே சமாதானம் பேசியிருக்கலாம்.. ஆனா சமாதானம் பேசப் போயி அது உன்னை இன்னும் ​டென்ஷனாக்கிடுமோன்னு கம்முன்னு அமைதியா இருந்துட்டேன்.

சரி.. இந்த கோபத்தை என்னதான் பண்றது? எனக்குத் தெரியலே. போன்னு தூர தள்ளிவிட்டாலும் கூடவே வருது கோபம். கோபம் மேலயும் எனக்குக் கோபமா வருது.

புருஷன்-பொண்டாட்டி உறவு விட்டுக் கொடுத்து நடக்கிறதில மட்டும் கிடையாது. விட்டுக்​கொடுக்கிற மாதிரியான சூழ்நிலை வராம பாத்திருக்கிறதிலயும் இருக்கு. ஆனா அது எப்பயும் முடியற காரியமா தெரியலே.

என்ன பண்றதுன்னு தெரியலே.

இப்படிக்கு,

குப்புனு@ஜி​மெயில்.காம்


டிஸ்கி:

உண்மையாகவே அம்மிணிக்கு எழுதிய ஒரு ஈமெயில் இதுங்க. சில வரிகளை நீக்கியதைத் தவிர எதுவும் திருத்தம் செய்யாததுங்க. தாகங்கள் தீர்வதில்​லை.. பாட்டில்களும் தீர்ப்பதில்​லை. ​சொல்லாத தாகத்​தைவிட தீராத தாகம்தான் ​ரொம்ப உசத்தி காதலில். இல்லிங்களா? வாலன்​டைன்ஸ் ​டே வாழ்த்துங்க!

30 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

ஜெகா இதவிட நான் தயிர் கேட்டுவாங்குறதுக்கு பட்ட பாடு இருக்கே கடக்காரவங்க ஒரு அம்மிணி பக்கத்துல நிறைய அம்மிணிக ம்ஹ்ஹும் ஒரு ஒன் ஹவர் கழிச்சுத்தான் கடை ஓனரய்யா வந்த பிறகுதான் வாங்கினேன்

என்ன பாக்குறீக கன்னடத்தில தயிருக்கு வேற வேற பேராமா... அப்பிடித்தான் ஏலுதாரு...

ஆனாலும் இந்த மொழி பிரச்சினை பயங்கர பிரச்சினை

அண்ணாமலையான் said...

அருமையான மெயிலு....

Starjan (ஸ்டார்ஜன்) said...

கடைசியில் என்னாச்சு ஜெகா ,
கம்ளைண்ட் கொடுத்தீரா இல்லையா ..

காதலிக்காக 2 ரூபா போனாலும் தப்பில்லை அப்படித்தானே ஜெகா ..

Starjan (ஸ்டார்ஜன்) said...

தும்ப சென்னாக்கீது ,

சிநேகிதன் அக்பர் said...

//"வார்ம் 7அப் இல்லா" //

எதுக்கு வார்ம் அப் பண்ணுறதுக்கா.

மாம்ஸ் உங்க கோபம் நியாயமானதுதான். அதுக்காக இதெல்லாம் டூ மச்.

இதுக்கு பேர்தான் காதல் தாகமா மாம்ஸ்.

கலக்குங்க.

படம் க்ளாஸ். (பாட்டில்தானே இருக்குன்னு கேட்கப்படாது.

பா.ராஜாராம் said...

செம குசும்புய்யா நீர்!

:-))))))

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

நீங்க இதுக்கு மேல 7UP 'கலந்துக்க' பழகிட்டா, இந்த மாதிரி கஷ்டப்பட வேண்டி இருக்காது ஜெகன். நம்ம வீட்டு பிரிட்ஜிலே எப்பவும் இருக்கும் பாருங்க! நானு ஹெளுத்தாயுதர ஐடியா சென்னாகில்லன்தரே, பிட்பிடி. தயபிட்டு கோபாமாடுக்கோபேடா!

தாராபுரத்தான் said...

கம்முன்னு இருந்ததால் சும்மா கும்முன்னு எழுதிப்போட்டீங்க.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கடைக்கண் பார்வைங்கறது............,

கடைக்குப் போய் சும்மா வரும்போது பார்க்கறதா தல..,

☀நான் ஆதவன்☀ said...

அண்ணே இனிமேலாவது பெர்முடாவுக்கு உள்ள ஏதாவது போட்டுட்டு வெளிய போங்க :))

Raju said...

ரைட்ல வந்து லெஃப்ட்டுல போயி கடைசில யூ டர்னா..?

அந்த படம் சூப்பர் ஓவியரே..!

Baski.. said...

//தாகங்கள் தீர்வதில்​லை.. பாட்டில்களும் தீர்ப்பதில்​லை. ​சொல்லாத தாகத்​தைவிட தீராத தாகம்தான் ​ரொம்ப உசத்தி காதலில். இல்லிங்களா? //

super

கலா said...

முதலில் அருமையான அழகான உங்கள்
தோற்றமுடைய...{நான் உங்களைப் பார்த்ததில்லை}
ஓவியத்துக்கு நன்றி ஜெகன்!

உங்கள் இடுகை சொல்லுவது ஒன்றை.
எனக்குத் தோணுகிறது அதுதான்!ஆனால்....
இடமாட்டேன்

சினிமா காட்சியுடன்....
ஏழ ப்பு சேர்ந்து இழப்பு {ஒன்றின்}
னால்....வந்த எரிச்சலும் கோபமும்
நன்றாகத்தான் இருக்கிறது.ஹாஹா..ஹா...

ஹேமா said...

//தாகங்கள் தீர்வதில்​லை.. பாட்டில்களும் தீர்ப்பதில்​லை.//

இது அனுபவம் !

சுவாமி ஜே...கண்ணைத் திறக்கணும்.உப்புக் கடலுக்கு நடுவில நிக்கிறவனுக்கு தாகம் எடுத்தா என்ன கதி ?அதுதான் சில காதல்.

அன்பின் வாழ்த்துக்கள்
என்றும் காற்றோடு உங்களுக்கு !

Nathanjagk said...

ப்ரிய வசந்த்..
நல்ல காமிடியா இருக்கும் போல உங்க தயிர் பிரச்சினை. எழுங்களேன்
மொழியென்றாலே பிரச்சினை. தயிர்... சிலசமயம் உயிர் பிரச்சினை.

அன்பு BrotherHill நன்றி

அன்பு ஸ்டார்ஜன்,
ஹெங்கிதே​மைதி?
கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு.. ​கொடுத்து ஆச்சு! விடுங்க இதிலிருந்து நான் கூல்ட்டிரிங்க்ஸ் குடிக்கிறதில்லேன்னு சபதம் எடுத்துக்கிட்டேனாக்கும்.

அக்பர் மாப்ஸ்,
பல மாதங்களுக்கு முன் அம்மிணிக்கு எழுதிய மெயில் இது. அம்மிணி ​போட்ட மெயிலையும் இங்க​இணைத்திருந்தா நல்லா களை கட்டியிருக்கும்னு நினைக்கிறேன். நன்றி!

Nathanjagk said...

இனிய அன்பு பாரா மிக்க நன்றி!

டியர் ப்ரபஞ்சப்ரியன்,
ஐடியா அட்டகாசம்! நீரடிச்சு நீர் விலகாதுதான். இருந்தும் சரக்குடன் இனிக்கும் 7அப் சேர்க்கத் தயக்கம். வீட்டில் சேமித்து வைக்க முடியாத சில​பொருட்களில் 7அப்பும் உண்டு.

தாராபுரத்தான்...
இப்ப ஜிவ்வுனு இருக்கு!

Sureஷ் தல,
அது கடைக்கண் இல்லீங்க.. ​நெற்றிக்கண்!

Nathanjagk said...

வாங்க ஆதவன் தம்பி,
Buzzல ​போட்ட பாயிண்டை கப்புனு பிடிச்சிட்டீங்க..! சபாஷ்!

Nathanjagk said...

அன்பு ராஜு பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிய்யா!

அன்பு Baski இதமான தொடுகையாக தங்கள் வாழ்த்து.. நன்றி!

Nathanjagk said...

அன்பு கலா,
படம் அம்மிணியின் விருப்பத்தின் ​பேரில் வரைந்தது. அம்மிணிக்கு (ரொம்ப நாள் முன்பு எழுதிய) இந்த மெயில் மிகவும் பிடித்துப்​போய் இதை இடுகையாக​வெளியிடு என்று கேட்டுக் ​கொண்டார். சண்டையும் போச்சு.. இடுகையும் ஆச்சு!

ஏழப்பின் இழப்பு.. அட்டகாசமான தலைப்பு! தலைப்பு பற்றி ​பெண்களிடம்தான் தெரிந்து கொள்ள​வேண்டும்.

Nathanjagk said...

வாங்க ஹேமா,
சாமியாரா ஆக்கிட்டீங்களே?? இதுவும் நல்லாத்தான் இருக்கு!
உப்புக்கடல் தாகத்திற்கும் மழையுண்டுங்க மேடம்.
வாழ்த்துக்கு நன்றிகள்!!

Beski said...

நோட் பண்ணியாச்சு...

துபாய் ராஜா said...

//புருஷன்-பொண்டாட்டி உறவு விட்டுக் கொடுத்து நடக்கிறதில மட்டும் கிடையாது. விட்டுக்​கொடுக்கிற மாதிரியான சூழ்நிலை வராம பாத்திருக்கிறதிலயும் இருக்கு. ஆனா அது எப்பயும் முடியற காரியமா தெரியலே. என்ன பண்றதுன்னு தெரியலே.//

உண்மையான உண்மை ஜெகன். நாம வெளியே அலைந்து அலுத்து வீட்டுல ரிலாக்ஸா இருக்கலாம்ன்னா நினைச்சா அம்மிணிங்க வீட்டுலே இருந்து அலுத்து வெளியே போய் ரிலாக்ஸ் பண்ணனும்ன்னு நினைக்கிறாங்க. அந்த நேரத்துல ஆபிசு,டிராபிக் டென்சன் அவங்க மேலயும், அவங்களோட டென்சன் நம்ம மேலயும் பாயுது.

என்னதான் ஊடலுக்கு பின் கூடல்ன்னாலும் ஒரு கட்டத்தில் இரண்டு பேருக்குமே வெறுப்பும், சலிப்பும் வருவதும், வராமல் இருப்பதும் இருவரும் கொண்டுள்ள உண்மையான காதலிலும், புரிதலிலுமே உள்ளது.

வீட்டுக்கு வீடு வாசல் படி..வேறென்ன சொல்ல... :((

அப்புறம் மிக்ஸிங்க்குக்கு நம்ம சாய்ஸ் எப்பவுமே பழரசங்கள்தான்... :))

துபாய் ராஜா said...

அடுத்த பதிவு ஐம்பதாவது பதிவு. ச்ச்ச்ச்ச்ச்சும்மா அதிரடியா,அசத்தலா அதகளமா இருக்கணும் ஜெகன்... :))

Anonymous said...

நல்லா வாங்கி கட்டினீங்களா அன்னைக்கு. ஆனா ஒண்ணுங்க. இந்த சாமான் வாங்காதீங்கன்னு சொன்னாத்தான் , சேல்ல போட்டிருந்தான்னு ரங்க்ஸ் வாங்கீட்டு வருவார். நாம வாங்கிட்டு வர சொல்லற சாமான் அம்போ ஆகிருக்கும்.

ஷங்கி said...

காதலர்களுக்கு வாழ்த்துகள்!!!!!!!!!!! ஹிப் ஹிப் ஹூர்ரே!!!

Nathanjagk said...

மாப்பி பிரதாப்,
Buzz பிடிச்சு வந்திருக்கீங்க​போல!

Nathanjagk said...

அன்பு துபாய் ராஜா,

ஆணாதிக்கத்தை விட (சிலசமயம்)​ரொம்ப​மோசமானது ​பொண்டாட்டி-ஆதிக்கம் தான்.
கதறக்கூட முடியாம சில கணவன்மார்கள் சரக்கடித்து வாழ்கிறார்கள்.
வெளி உள்ளுக்குள் துரத்துகிறது.. உள் ​வெளியே துரத்துகிறது. வாழ்க்கையும் ஓடிவிடுகிறது.

உங்க பின்னூட்டத்தைப் படிச்சிட்டு virtualஆக உங்க ​தோளில் சாய்ந்து சமாதானம் ஆகிக்​கொள்கிறேன் (நம்மை நாமதானே​தேத்திக்கணும்)

50ல் ஆர்ப்பரிப்போம் நண்பரே!

Nathanjagk said...

அன்பு சின்னஅம்மிணி,

இடுகைக்கு பேர் வைக்கும் போது உங்களை நினைச்சுக்கிட்டேன். நீங்க எதுவும் தப்பா எடுத்துப்பீங்களோன்னு. இப்ப cool!

கணவனும் மனைவியும் ஹாய்-பாய் ​சொல்லிக்கிட்டு வாழமுடியுமா? அய்-புய்ன்னு காரஞ்சாரமா இருந்தானே இன்பம் கிடைக்கும்.. அட்லீஸ்ட் இடுகையாவது :))

Nathanjagk said...

அன்பு சங்காண்ணா,

நீங்க உங்க ஸ்டைலில் கலக்கலா ஒரு காதலர் தின இடுகை போடுவீங்கன்னு எதிர்பார்த்து ஏமாந்தேன்(தோம்)!

காதலர் தினம்(தினம்) வாழ்த்துக்கள்!

இரசிகை said...

naanum ithey pola kaduppaanathundu...

mejestic-kulla diarymilk kitkate vaanganumna 1 r 2 rs koodathaan kodukkanum.

7up ku naalum cooling nu sonnaaga...
ithukku?

kodumaithaan!

//
புருஷன்-பொண்டாட்டி உறவு விட்டுக் கொடுத்து நடக்கிறதில மட்டும் கிடையாது. விட்டுக்​கொடுக்கிற மாதிரியான சூழ்நிலை வராம பாத்திருக்கிறதிலயும் இருக்கு
//

:)

unmai.........!