Monday, August 31, 2009

பேச்சிலர் பார்ட்டி!!

பார்ட்டி-1:சாம்பல் தட்டு

பாஸ்கிக்கு கல்யாணம். கிருஷ்ணகிரியில். வழக்கம் போல ரூம்.. மாப்பிள்ளையின் தம்பியின் கவனிப்பு, பாட்டில்கள், நொறுக்குத் தீனிகள்.. இரவு முழுவதும் பேச்சு.. என்று சுகமாய் கழிந்தது. அப்புறம் ஒவ்வொருத்தனும்.. கன ஜோராக ஏத்தல், இழுத்தல், பினாத்தல், பேத்தல், அனத்தல் என்று போதையின் ஒவ்வொரு படிநிலையிலும் நின்று கதவைத் தட்ட ஆரம்பித்தோம்.

நான் ஹாப் பாட்டில் ஸிக்னேச்சர் + மிக்சர் + பரோட்டா என்று என் சிற்றுரையை முடித்துக் கொண்டேன். அமைதியாக தூங்கி எழுந்து காலையில் கல்யாணத்துக்கு கூட(!?) போனோம். பேசிக்கொண்டிருக்கும் போது பிரகாஷிடம்,

"நல்லவேளை நைட் சரக்கடிச்சிட்டு யாரும் ஹாப்-பாயில் போடலே" என்றேன்.
அதுக்கு பிரகாஷ் சொன்னான்..

"ஆமா! ஆனா நீதான் சாப்பிடும்போது, பரோட்டா பதிலா.. பக்கத்தில் இருந்த ஆஷ்ட்ரேயில் கைவைச்சிட்ட; விட்டிருந்தா வாயில போட்டிருப்பே!"
பார்ட்டி-2: கர்த்தரின் தீர்ப்பு

காலேஜ் ஜுனியர் ஸ்டாலினுக்கு கல்யாணம்! ஊட்டியில இருக்கிற ஒரு கிறித்துவ சபையில்.

காலையில் சர்ச்சில் தம்பதியினர் ஆஜர். சொந்தங்கள், பந்தங்கள், நண்பர்கள், பந்துக்கள் அனைவரும் திரண்டிருக்க.. சர்ச் பாதிரியார்.. சம்பிரதாயங்களை செய்து கொண்டிருக்கிறார். சர்ச்சின் கடைசி வரிசையில் ஸ்டாலினின் தோழர்கள். எல்லோரும் விழி பிதுங்கும் அளவுக்கு டைட். அதில் ஒருவன்.. உட்கார முடியாமல் கண்கள் சொருக சரிய ஆரம்பித்திருக்கிறான். மப்பு வாசனை வேறு கர்த்தர் வரைக்கும் போயிருக்கிறது. பொறுமையிழந்த பாதிரியார்.. மைக்கில் சொன்னது:

"அந்த சிறுவர்களைத் திருச்சபையிலிருந்து வெளியேற்றுங்கள்"

பார்ட்டி-3: ஒரு 'சந்தோஷ' சம்பவம்!

மும்பைக்கு வேலையாக சென்ற ஜே செந்தில், நண்பன் சந்தோஷை பார்த்திருக்கிறான். வாடா மாப்ளே.. நல்ல பப்புக்கு போவோம் என்று அழைத்திருக்கிறான். சந்தோஷ் கூடவே அவனின்​மும்பை நண்பனையும் அழைத்தான். அந்த மும்பைக்காரன்தான் ஸ்பான்சராம். ஒரு ரவுண்ட் முடிந்ததும். ஸ்பான்ஸரர் டிஸ்கொதேக்கு சென்று ஆ(ட்)ட ஆரம்பித்து விட்டாராம். சந்தோஷ் சொன்னானாம்..

"செந்திலு, நாமளும் போயி டான்ஸ் ஆடிட்டு வரலாம்டா"

"என்னடா இது புதுசா? நாம எப்ப ஆடியிருக்கோம்?"

"நீ வேற.. ஸ்பான்ஸர் பண்றவனுக்கு டான்ஸ் ஆடலேன்னா கோபம் வந்துரும்... அப்புறம் ரெண்டாவது ரவுண்ட் கிடைக்காது.. இப்ப நாம போயி ஆடுனாதான் சைட்டிஷ்ஷே ஆர்டர் பண்ணுவான்"

"அடப்பாவி"

"விடறா.. நமக்கு அடிக்கிறதில ஆசை.. அவனுக்கு ஆடறதில்ல ஆசை"

பார்ட்டி-4: கல்யாணப் பரிசு!

எனக்கு கல்யாணம் நிச்சயமானது. நண்பர்களுக்குப் பத்திரிக்கை கொடுக்க சென்னை சென்றிருந்தேன். நண்பர்கள் எங்களுக்கு இப்பவே ஒரு பேச்சிலர் 'ஓப்பனிங்' பார்ட்டி.. அப்புறம் மாரேஜ் முந்தின ராத்திரி தனியா ஒரு 'பினிஷிங்' பார்ட்டி என்று கேட்டிருந்தார்கள்.

சரியென்று.. அங்கே 10 நண்பர்களுக்கு ஓப்பனிங் ஆயிற்று. ஒவ்வொருத்தனும் கொலை மப்பு..! வேலுவும் பாண்டியும் தனியா ரொம்ப நேரம் டிஸ்கஸ் பண்ணிக்​கொண்டிருந்தார்கள்.அப்புறம் வேலு என்னிடம் சொன்னான்.

"மச்சி, கல்யாணத்து உனக்கு டிவியைக் கிப்டா கொழுத்திரலாம்னு இழுக்கம்டா"

எனக்கு தனியாக ஒரு கட்டிங் சாப்பிட்ட மாதிரி இருந்தாலும், பவ்யமாக,

"அதெல்லாம் எதுக்குடா, நீங்க வந்தாலே போதும்டா"

பாண்டி குறுக்கிட்டு, "சேசே.. என்ன ஜெகனு அப்படி சொழ்ழிட்டே? டிவிதான் வாங்கப் போழோம்.. என்ன பிழாண்டு வேழும்னு மட்டும் சொல்லு? எழ்ஜி...? சாம்சங்..?"

வேலு, "பாண்டியா, அதெல்லாம் நழ்ழ பிழாண்டா நாம பாழ்த்து வாங்கிக்கலாம்... " என்று, என்னிடம் திரும்பி,

"மச்சி, நீ வேற யார்கிட்டயும் டிவி கிப்ட் வாங்கிடாதே.. இப்பவே சொழ்ழிரு.. பசங்க அழ்ரெடி டிவி வாழ்ங்கித் த(ர)ழதா இருக்குன்னு"

நண்பர்களை வியந்தவாறே ஊர் திரும்பிவிட்டேன். ஈரோட்டில் கல்யாணம்.. நண்பர்களும் வந்திருந்தார்கள். இரண்டு அறை புக் செய்திருந்தேன்.. பத்தாது என்று மூன்றாவதாக ஒரு அறையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்... சரக்குக்கு மட்டும் பத்தாயிரம் அன்றைய இரவிலேயே செலவாகியிருந்தது. பக்கத்திலிருந்த அம்மணி பாத்து வியப்பது தெரிந்தது.. நமட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன்.

காலையில் முகூர்த்தம் எல்லாம் முடிந்து, சுமார் 2 மணி நேரம் கழித்து வந்தார்கள் நண்பர் பெருமக்கள்! டிவியை சென்னையிலிருந்தே பேக் பண்ணி எடுத்துட்டு வராங்களா, இல்லை இங்க ஈரோட்டில வாங்கிட்டு வராங்களான்னு ஒரே பரபரப்பா இருந்தது.

முதலில் அஞ்சு பேரு வந்து கைகுலுக்கினாங்க! போட்டோ எடுத்துக்கிட்டாங்க! வீடியோவுக்கும் அசையாம நின்னு போஸ் கொடுத்திட்டு, கிளம்பறோம்டா மச்சின்னு கெளம்பிட்டாங்க.. சரி அடுத்த செட் பசங்களாவது பெருசா எதாச்சும் தூக்கிட்டு வருவாங்கன்னு பாத்தா.. அவிங்களும் அதே கைகுலுக்கல், போஸ், டாடா பைபை!!! கடைசியா ஒரு குரூப் வந்தது.. அவங்க கையிலயும் ஒண்ணையும் காணோம்... ஒரு சின்ன கிப்ட் பாக்ஸ்.. ​கவர்.. கர்ச்சீப் எதுவும் இல்லை.. bursting the bubbleன்னா என்ன்னு அப்பதான் புரிஞ்சுது!
வாய்விட்டே கேட்டுட்டேன் செந்தில்ராஜிடம்,

"டே கோழி! ஏதோ டிவி கொடுக்கப் போறதா பசங்க சொன்னாங்க?"

அதுக்கு கூலா அவன் சொன்னது.. இப்ப கூட எந்த கிப்டைப் பாத்தாலும் ஞாபகத்து வந்து நிக்குது!!

"மச்சி, தங்கியிருந்த லாட்ஜ்ல கூட ஒரு டிவி பாத்தோம்.. நல்லாதான் இருந்தது! பசங்க இதையே எடுத்திட்டுப் போயி ஜெகனுக்கு கொடுத்திடலாம்னு சொன்னாங்க.. பட், அந்த லாட்ஜ்ல ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. சரி வரட்டுமா?"

இப்படி என் கல்யாணத்து சிறப்பா மங்களம் பாடுனது இந்த நண்பர்கள்தான்!

பார்ட்டி-5 - நம்ம ஊர்ல பார்ட்டி!!

சந்தோஷ் அப்ப எனக்கு சின்சியரான சிஷ்யன்.. அவன் ஊர் தர்மபுரி பக்கம் இருந்த பெரியாம்பட்டி! ஒருநாள் கிளாஸ் ரூமிலேயே வயிற்று வலியால் சுருண்டான். ஊர் திருவிழா என்று கொஞ்சம் ஓவராக சாப்பிட்டுவிட்டானாம்.

ரொம்ப நாள் கழித்து பேசிக்கொண்டிருக்கும் போது, நண்பன் கைலாஷ், சந்தோஷ் ஊர் திருவிழா எப்படி கொண்டாடுகிறார்கள் என்று விளக்கியது இப்படி:

"மச்சி,சந்தோஷ் ஊர்ல பெரிய்ய்ய திருவிழாவும்.. மொத்த ஊரும் திரண்டு வந்து, ஒரு ஃபுல்லு, ஒரு ஹாப்பு, ஒரு குவாட்டரு அப்புறம் ஒரு கட்டிங்ன்னு வாங்கி அவங்க ஊர் கிணற்றில் ஊத்திட்டாங்களாம்.. ஊர்ல இருக்கிற ஒவ்வொருத்தரும்.. மொண்டு மொண்டு குடிக்கிறாங்களாம்.. எல்லார்த்துக்கும் செம மப்பாம்... சந்தோஷ் மட்டும் பாட்டில்ல மிச்சம் இருக்கிற ஒரே ஒரு சொட்டு சரக்கை அப்படியே ராவா ஊத்திட்டானாம்... அதுதான் பயங்கர மப்பாகி.. வயிறே வலிக்க ஆரம்பிச்சிருச்சாம்..!"
* * *

30 comments:

டவுசர் பாண்டி said...

அல்லாருக்கும் நம்ப ஏரியாவுல இருந்து, சல்பேட்டா வாங்கி குத்து இருந்தீன்னா !! உன் கல்யாணத்துக்கு தோஸ்துந்கொ அல்லாரும் ஆசுபித்திரில இல்ல இருந்து இருப்பாங்கோ !!

அத்த வுட்டுட்டீயே தல !!

சங்கர் தியாகராஜன் said...

பழசையெல்லாம் கிளறி விட்டுட்டீங்க.

இரும்புத்திரை said...

மாமா பிஸ்கோத்து(சரக்கு) எனக்கு கிடைக்குமா மானும் எல்.ஜி டிவி வாங்கியாறேன்

☀நான் ஆதவன்☀ said...

உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா அங்கிள்?

ஷங்கி said...

மலரும் நினைவுகளா?! உங்க சந்தோஷ் மாதிரியே என்னையும் நக்கல் பண்ணுவாங்க, நான் குடிப்பதில்லையாதலால். (ஒருத்தன் அவனுக்கு மூடில குடுடே என , இன்னொருத்தன் அவனுக்கு மூடில எதுக்குடே, வாசம் பிடிச்சா போதும்.)

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

யாருமே தப்புவது கிடையாதா, ஜெகன்? Same pinch!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

'வீடியோவுக்கும் அசையாம நின்னு போஸ் கொடுத்திட்டு, ' - அருமை! ( இந்த பழக்கம் எப்ப மாறுமோ? Still Camera வையும் video Camera வையும் ஒன்றாக வைப்பதால் இந்த பிரச்சனை என நினைக்கிறேன்.)

துபாய் ராஜா said...

//"ஆமா! ஆனா நீதான் சாப்பிடும்போது, பரோட்டா பதிலா.. பக்கத்தில் இருந்த ஆஷ்ட்ரேயில் கைவைச்சிட்ட; விட்டிருந்தா வாயில போட்டிருப்பே!" //

நல்லவேளை.சிக்கன்னு செருப்பை கடிக்காம இருந்தீங்களே..... :))

தல,ஆறாவது 'பார்'ட்டியை எங்க வச்சுக்கலாம். :))

Beski said...

இங்க காய்ச்சல் வந்து ஒரு வாரமா தண்ணியத் தொடாம காஞ்சு கிடக்குறேன்... இந்த நேரத்துல இப்பிடி உசுப்பி விடிறீயளே மாம்ஸ்?
---
ச்ச... உங்களுக்கு கலியாணம் ஆகிப்போச்சே... இல்லன்னா அந்த பேச்சலர் பார்ட்டிய அட்டன் பண்ண சான்ஸ் கிடச்சிருக்கும்... அடுத்து ஏதும் கல்யாணம் பண்ணுற மாதிரி ஐடியா இருந்தா சொல்லுங்க மாம்ஸ்.
---
பார்ட்டி 1, 2 சூப்பரோ சூப்பர்.
---
நம்ம கதையெல்லாம் ஞாபகத்துக்கு வருது.
வழக்கமா நாமளும் அப்படித்தான்... நைட்டு ஃபுல்லா ஏத்திட்டு , காலைல முகூர்த்தத்துக்கு அப்புறம் மதிய சாப்பாட்டுக்கும் முன்னாடிதான் போய் தள்ளாடிக்கிட்டு நிப்போம். அதுலயும் எங்க அண்ணன் ஒருத்தர் செம ரவுசு பண்ணுவார்.
ஒரு நாள் அவரோட கல்யாணமும் வந்தது, என்ன நெனச்சாரோ தெரியல, முகூர்த்தத்த 10 மணிக்கு மேல வச்சிட்டார். முதன் முதலா தாலி கட்டுறதுக்கு முன்னாடி போனது அவர் கல்யாணத்துக்குத்தான். (வரலன்னா தேடி வந்து அடிப்பேன்னு சொல்லிட்டார்)

சென்ஷி said...

கல்யாணம்னாலே பார்ட்டி தானே முக்கியம்.. :))

அனுபவக்குறிப்புகள் அருமை!

ப்ரியமுடன் வசந்த் said...

பின்னூட்டம் போட்டா பார்ட்டி எதுவும் குடுக்குற ஐடியா இருந்தா ரிலீஸ் பண்ணுங்க ஜெகன்....

அனுபவச்சத அழகா எழுத்துவடிவுல கொண்டுவந்துட்டீங்க ஜெகன்

Nathanjagk said...

டவுசர் பாண்டி! ​கெட்ஜட் திலகமே!! சூப்பரான ஐடியாவாத்தான் ​கொடுத்திருக்கீங்க! ஆமா உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?

Nathanjagk said...

அன்பு சங்கர்.. பழசுன்னா கிளறுவதும்.. பாட்டில் அடிச்சிட்டு உளறுவதும் சகஜந்தானே! உங்க அனுபவங்களையும் பகிருங்களேன்!

Nathanjagk said...

வாங்க அரவிந்த் மாப்பிள்ள! உங்களுக்கில்லாத சரக்கா?? வாங்க ​பெங்களூருக்கு! நீங்களும் எனக்கு டிவியில படம் காட்ட ஆரம்பிச்சிட்டிங்களா? ​இனி டிவியே புடுங்க​வேணாங்கிற முடிவுக்கு வந்துட்டேன்!

கார்த்திக் said...

பார்ட்டி 3 அருமை.. புது technique போல.. எப்படிலாம் கிளம்பி வராங்கே..

நேசமித்ரன் said...

:)

:)

:)

;)

Nathanjagk said...

அன்பு ஆதவன்...
கல்யாணம் ஆனவங்க அங்கிள்னா ஆகாதவங்க.......................................................................................................................................................................................................................... ரொம்ப ​யோசிக்காதீங்க... சிங்கிள்!!

Nathanjagk said...

சங்காணா நன்றி! நீங்க குடிக்க மாட்டீங்களா??? நல்ல தகவல்; ஆனா அதிர்ச்சியா இருக்கு! விடுங்க தம்பி உடையான் பட்டைக்கு அஞ்சான்னு - ஏதாவது பார்ட்டி வந்தா என்னை சப்ஸ்ட்டியூட்டா ​போட்டுருங்! பூந்து ​விளையாண்டற மாட்டோம்??

வால்பையன் said...

என் கல்யாணமும் இப்படி தான் நடந்தது!
கல்யாணம் முடிந்து மதிய சாப்பிட்டிற்கு தான் மண்டபம் வந்தார்கள்!
விடிய விடிய ஊத்து!

Nathanjagk said...

அன்பு, அன்பு, அன்பு ப்ரபஞ்ச பிரியன்... வீடியோவுக்கு அசையாம ​போஸ் ​கொடுக்கிற காமடிய ​ரொம்ப சாதாரணமா / சுருக்கமா எழுதிட்டேன்னு ​யோசனையா இருந்தது... ஆனா உங்க உன்னிப்பு என்னை பரவசமாக்கிடுச்சு! தாங்க்ஸ்! ஆனா உங்க உழைப்புக்கு முன்னாடி என்னோட மொக்கையெல்லாம் வெறும் தூசி.

Beski said...

//வால்பையன் said...
என் கல்யாணமும் இப்படி தான் நடந்தது!//
அப்படி நடக்கலன்னாத்தான் ஆச்சர்யப்பட்டுருப்போம்.

Nathanjagk said...

துபாய் ராஜா... மிக்க நன்றி! ​செருப்பையில்ல பக்கத்தில இருக்கிறவனைத்தான் கடிக்கணும்... வாங்க பார்ட்டி கேட்டுட்டீங்க.. கண்டிப்பா வச்சிரலாம்!! அட பயப்படாதீங்க உங்களையெல்லாம் கடிக்க மாட்டேன்!! பதிவருக்கு பதிவர் இடுகையில கடிச்சு(குதறிக்கற)க்கறதே ​போதாதா?

Nathanjagk said...

மாப்ள ஏனாண்டி ஓனாண்டி!! உமக்கு காய்ச்சலா? என்னவே பீதிய கிளப்பறீரு? ​கோயமுத்தூரு பரோட்டா எதும் செட்டாக போயிடுச்சா?
கலியாணம் ஆயிப்போச்சு (எங்க ​போச்சு - கூடவேதான் இருக்கு :-( ம்ம்)
உமக்கு பார்ட்டி வேணுங்கிறதுக்காக நான் மட்டையாக முடியுமா?
10 மணிக்கு - ​டைட் நண்பர்களுக்காக - முகூர்த்த வச்ச அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்!
ம்ம்ம்.. நம்ம பயங்க பிகரைப் பாத்ததியும், இந்த பக்கம் வந்தீன்னா சவட்டிருவேங்கிடுதான்!

Nathanjagk said...

அன்பு சென்ஷி...
​நோன்புல பிஸியா இருப்பீங்க ​போலிருக்கு! ஜமாய்ங்க!! நன்றி!

Nathanjagk said...

அன்பு வசந்த்..
நமக்கு பின்னூ ​போடறவங்களுக்கு பார்ட்டி கட்டாயம்!!! பார்ட்டிக்கு நம்ம டவுசர் பாண்டி ஸ்பெஷல் சரக்கு ​கொண்டு வருவாரு! பரவாயில்லையா?

Nathanjagk said...

அன்பு வால்பையன்...
நீரின்றி உலகு மற்றும் கல்யாணம் அமையாது! தெரிஞ்சே நண்பன் குழியில விழுறத தடுக்க முடியாத சுயபச்சாதாபத்தை ஆத்திக்கிற முயற்சிதான் இந்த ராக்குடி - நாறஅடி, பேச்சிலர்ஸ் பார்ட்டி:

Beski said...

//மாப்ள ஏனாண்டி ஓனாண்டி!! உமக்கு காய்ச்சலா? என்னவே பீதிய கிளப்பறீரு?//
அதான் ஒன்னுமில்லன்னு நம்ம தளத்துல சொல்லிட்டேன்ல.

//உமக்கு பார்ட்டி வேணுங்கிறதுக்காக நான் மட்டையாக முடியுமா? //
அதெல்லாம் ஆக வேணாம், இத சாக்கா வச்சு ஒரு ரவுண்டு ஏத்தலாம்ல?

//கலியாணம் ஆயிப்போச்சு (எங்க ​போச்சு - கூடவேதான் இருக்கு :-( ம்ம்)//
:))))

Nathanjagk said...

மாப்ள ஏனாண்டி ஓனாண்டி!!
//
அதெல்லாம் ஆக வேணாம், இத சாக்கா வச்சு ஒரு ரவுண்டு ஏத்தலாம்ல?
//
சூப்பரு!! ஏற்கனவே ஒருக்கா என்னை இடுகையிலேயே மட்டை ஆக்கினவர்தானே நீங்க? ஞாபம் இல்லையா?? ​​நெக்ஸ்ட் ​டைம் ​கோவை அல்லது ​பெங்களூரு வரும்​போது ​சொல்லுங்க. உக்காந்துருவோம்! நாங்கெல்லாம் ​நேஷனல் பர்மிட் உள்ள குடிகாரங்க!

பா.ராஜாராம் said...

சிரிச்சு பூத்துக்கிட்டேன்..குருநாதா!
"நம் பயல்களும்"வந்து போனான்கள்..ஞாபகத்தில்!

Nathanjagk said...

அய்யய்​யோ ராஜா... உங்களுக்கு யாரு ​சொன்னா? என்ன பசங்க குருநாதா-ன்னுதான் ஓட்டுவாங்க! நீங்களுமா???